Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேளச்சேரி, கொளத்தூரில் மழைநீர் கால்வாய் அமைக்க பணி ஆணை:மேயர் அறிவிப்பு

Print PDF

தினமலர் 09.04.2010

வேளச்சேரி, கொளத்தூரில் மழைநீர் கால்வாய் அமைக்க பணி ஆணை:மேயர் அறிவிப்பு

சென்னை:மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்பை தடுக்க, வேளச்சேரி, கொளத்தூர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்களை கட்ட, பணி ஆணைகள் வழங்கப் பட்டதாக மேயர் சுப்ரமணியன் கூறினார்.மேயர் சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

மழைக் காலங்களில் நகரில் வெள்ள பாதிப்பை தடுக்க, ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின்கீழ், 1,447 கோடி ரூபாய் மதிப் பீட்டில் புதிய மழைநீர் வடிகால் கால்வாய்கள் கட்டுவது, நீர்வழித்தடங்களை ஆழப்படுத்தி கரைகளை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.இதில், 860 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி சார்பில், நகரில் 12 பகுதிகளாக பணிகள் பிரிக்கப் பட்டு, தனித்தனியே ஒப்பந்தங்கள் கோரப் பட்டது.

இதில், வேளச்சேரி பகுதிகளில் 41 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கொளத்தூர் பகுதியில், 22 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் புதிய மழைநீர் வடிகால்வாய்கள் கட்டுவதற்கும், வடக்கு பக்கிங் காம் கால்வாயை தூர் எடுத்து ஆழப்படுத்தியும், கரைகளை பலப்படுத்தும் பணிக்கு 16 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிஆணைகள் வழங்கப் பட்டுள்ளன.

பத்து நாட்களில் பணிகள் துவங்கப்படும்.அதுபோல், தெற்கு பக்கிங்காம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் ஆகியவைகளை அகலப் படுத்தி தூர் எடுத்து, கரைகளை பலப்படுத்தும் பணிகளுக்கு தேவைப்படும் ஒப்பந்தங்கள் விடப் பட்டு, ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் ஒப்பந்த தொகையை குறைக்கும்படி மாநகராட்சி பேச்சு நடத்தி வருகிறது.

முடிவு ஏற்பட்டதும், வரும் 29ம் தேதி நடைபெறும் மன்ற கூட்டத்தில்தீர்மானம் கொண்டு வரப்பட்டு பணிஆணை வழங் கப்படும்.தொடர்ந்து, மீதமுள்ள ஆறு பணிகளுக்கும் ஒப்பந்தம் கோரப்படும்.இவ்வாறு மேயர் கூறினார்.

Last Updated on Friday, 09 April 2010 08:20