Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலையோர பூங்கா அமைக்க திட்டம்

Print PDF

தினமலர் 09.04.2010

சாலையோர பூங்கா அமைக்க திட்டம்

திருப்பூர்: சாயப்பட்டறைகளை கண்காணிப்பதற்காக, மாசு கட்டுப்பாடு வாரியம், வருவாய்த்துறை, மின்வாரியம் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் சமயமூர்த்தி லைமை வகித்தார். கூட்டத்தில், 'நகரில் செயல்படும் சாயப்பட்டறைகள் வெளியிடும் திட கழிவுகளை அகற்றுவது, சாய கழிவு நீர், நீர் நிலைகளில் கலக்காமல் இருப்பதை தடுப்பது; வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. நெரிசலை குறைக்க சாலைகளை விரிவுபடுத்துவது.

'இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் மின்கம்பங்களை அகற்றுவது; அகற்றப்பட்ட இடத்தில் சாலையோர பூங்காக்கள் அமைப்பது; முக்கிய சாலைகள் பாலங்கள் அருகே கோழி, மீன் கழிவுகளை கொட்டுவதை தடுப்பது; கழிவுகளை மாநகராட்சி மூலம் சேகரித்து தரம் பிரித்து அப்புறப்படுத்துவது' என முடிவு செய்யப்பட்டது. டி.ஆர்.., முரளிதரன், மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி, பொறியாளர் கவுதமன், மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் கண்ணன், நகர் நல அலுவலர் ஜவஹர்லால் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 09 April 2010 08:37