தினமலர் 16.04.2010
போளூரில்வளர்ச்சிப்பணி உதவி இயக்குனர் ஆய்வு
போளூர்: போளூர் பேரூராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். போளூர் பேரூராட்சியில் 2010-11ம் ஆண்டுக்கு அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ள பல பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பணிகளை வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அப்துல்கலீல் ஆய்வு செய்தார். இதில், போளூர் பஸ்நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகம், நிழற்குடை பணிகளை அவர் ஆய்வு செய்தார். மேலும், டைவர்ஷன் ரோடு, காய்கறிமார்க்கெட், வீரப்பன் தெரு, பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செயல் அலுவலர் வாசுதேவன், உதவி பொறியாளர்கள் சேகர், ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்..