Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிவகாசி நகராட்சியில் ரூ.93 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 27.04.2010

சிவகாசி நகராட்சியில் ரூ.93 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

சிவகாசி, ஏப். 26: சிவகாசி நகராட்சியில் ரூ. 93.55 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு, மன்றக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிவகாசி நகர்மன்றக் கூட்டம், வெள்ளிக்கிழமை நகர்மன்றத் தலைவர் ராதிகாதேவி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், சிவகாசி-திருத்தங்கல் சாலையில் பாலம் அமைக்க ரூ. 18 லட்சம், அண்ணாநகரில் கழிப்பட வசதி செய்ய ரூ. 9.25 லட்சம், உசேன் காலனியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க ரூ 7.60 லட்சம், பாரதிநகர் 6-வது தெருவில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ. 4 லட்சம், பஸ் நிலையம் முன்பு கல் தளமும், தார் தளமும் அமைக்க ரூ. 9.50 லட்சம், சேர்மன் சண்முகம் சாலையில் கழிப்பிடம் கட்ட ரூ. 7.60 லட்சம்,

ரயில்வே பீடர் சாலையில் கல் தளம் அமைத்து சாலையை அகலப்படுத்த ரூ. 3.50 லட்சம், பராசக்தி காலனி மற்றும் முஸ்லிம் நடுத் தெருவும் சந்திக்கும் இடத்தில் சிமென்ட் சாலை அமைக்க ரூ. 5.50 லட்சம், நேஷனல் காலனியில் சாலை சீரமைக்க ரூ. 3.10 லட்சம், சாமிபுரம் காலனியில் வாருகால் அமைக்க ரூ. 6.25 லட்சம் மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் வசதி செய்வது உள்பட பல்வேறு பணிகளுக்கென ரூ. 93.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மன்றக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி. அசோகன், பொறியாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்