Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடந்தை நகராட்சி பகுதியில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமலர் 03.05.2010

குடந்தை நகராட்சி பகுதியில் வளர்ச்சிப் பணிகள்

கும்பகோணம்: குடந்தை நகராட்சி பகுதியில் ரூபாய் 26.20 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் செய்வதென முடிவு செய்யப்பட் டுள்ளது.இந்நகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட் டம் தலைவர் தமிழழகன் தலைமையில் நடந்தது. ஆணையர் பூங்கொடி மற்றும் அலுவலர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.குழந்தைகள் நினைவகம் அருகில் விளையாட்டு பூங்கா ரூபாய் 9 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் அமைக் கப்படும். போக்குவரத்து அதிகம் உள்ள நாகேஸ்வரன் மேலவீதி, தெற்குவீதி, பகோலா சாலை, ஸ்ரீநகர் காலனி, மேலக்காவேரி சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு, வருமான வரி அலுவலகம் சாலைகள் ரூபாய் 6 லட்சத்து 30 ஆயிரம் மதிப் பில் தற்காலிகமாக பேட்ஜ் ஒர்க் மூலம் சீரமைக்கப்படும்.சுவர்ண ஜெயந்தி ரோஜ் கார் யோஜனா திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக் கப்படும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

Last Updated on Monday, 03 May 2010 06:53