தினமணி 03.05.2010
ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில் சோடியம் விளக்கு
ஒட்டன்சத்திரம்,மே 2: ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில் ரூ.34 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சோடியம் விளக்கை அரசு தலைமை கொறடா அர.சக்கரபாணி இயக்கி வைத்தார்.
ஒட்டன்சத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட தாராபுரம் சாலையில் இருந்து நாகணம்பட்டி பிரிவு வரை சாலையின் நடுப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் 3 அடிக்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது.
அதன் மீது பேரூராட்சி பொதுநிதியில் இருந்து சாலையின் இருபுறமும் சோடியம் விளக்கு ரூ.34 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. அதனை இயக்கி வைக்கும் விழா சனிக்கிழமை தாராபுரம் சாலையில் நடைபெற்றது.
விழாவிற்கு பேரூராட்சி தலைவர் உமாமகேஸ்வரிகண்ணன் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் வனிதாஆறுமுகம் முன்னிலை வகித்தார்.பேரூராட்சி செயல் அலுவலர் மா.ஜெயக்கொடி வரவேற்றார்.
விழாவில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் அரசு தலைமைக் கொறடாவுமான அர.சக்கரபாணி கலந்து கொண்டு சோடியம் விளக்கை இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க.ஒன்றிய செயலாளர்இரா.ஜோதீஸ்வரன்,பேரூர் திமுக செயலாளர் கதிர்வேல்சாமி,முன்னாள் பேரூராட்சி தலைவர் கே.சுப்பிரமணி,பேரூர் திமுக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 10-வார்டு கவுன்சிலர் முருகேசன் நன்றி கூறினார்.