Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

மணிமுத்தாறில் ரூ.33 லட்சத்தில் வளர்ச்சிப்பணி சபாநாயகர் இன்று துவக்கி வைக்கிறார்

Print PDF

தினகரன்                 28.10.2010

மணிமுத்தாறில் ரூ.33 லட்சத்தில் வளர்ச்சிப்பணி சபாநாயகர் இன்று துவக்கி வைக்கிறார்

நெல்லை, அக். 28: மணிமுத்தாறு டவுன் பஞ். பகுதியில் ரூ.32.55 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை சபாநாயகர் ஆவுடையப்பன் இன்று (28ம் தேதி) துவக்கி வைக் கிறார்.

மணிமுத்தாறு டவுன் பஞ்சாயத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் ஜெயராமன் தலைமை வகிக்கிறார். விழாவில் சபாநாயகர் ஆவுடையப்பன் ரூ.32.55 லட்சம் மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்து 72 பயனாளிகளுக்கு ரூ.59 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

விழாவில் நகராட்சி தலைவர்கள் அம்பை. பிரபாகரபாண்டியன், வி.கே.புரம் மாரியப்பன், அம்பை. யூனியன் சேர்மன் மீனாட்சி சிவகுருநாதன், மணிமுத்தாறு டவுன் பஞ். தலைவர் முருகன் சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், உள் ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

 

பெங்களூர் நகரில் வளர்ச்சி திட்டங்களை விரைந்து செயல்படுத்துங்கள்

Print PDF

தினகரன்                     28.10.2010

பெங்களூர் நகரில் வளர்ச்சி திட்டங்களை விரைந்து செயல்படுத்துங்கள்

பெங்களூர், அக். 28: பெங்களூர் நகர வளர்ச்சி குழும அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் எடியூரப்பா, வளர்ச்சி திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு உத்தரவிட்டார்.

பெங்களூரிலுள்ள பி.டி.ஏ தலைமையகத்திற்கு முதல்வர் எடியூரப்பா நேற்று திடீர் விசிட் செய்தார். அங்குபி.டி.ஏ தலைவர் வத்சலா வத்சா, கமிஷனர் பரத்லால் மீனா உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆலோசனைக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா "பெங்களூர் நகரைச் சுற்றிலும் அமைக்கப்படும் வட்டச்சாலைகள், நக ரின் 4 புறங்களிலும் அமைக்கப்படும் மினி லால்பாக், 10 பகுதிகளில் அமைய உள்ள பல அடுக்குமாடி பார்க்கிங் கட்டிடங்கள், நகரிலுள்ள ஏரிகளின் பராமரிப்பு மற்றும் லேஅவுட்டுகள் உருவாக்கம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டேன். இந்த பணிகளை விரைந¢து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே பி.டி.ஏ அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது முதல்வர் கேட்ட விவரங்களை உடனடியாக தெரிவிக்காத அதிகாரிகளையும், காலதாமதமாக பணிகளை மேற் கொள்ளும் அதிகாரிகளையும் எடியூரப்பா கண்டித்துள¢ளதாக தெரிகிறது. ‘மக்கள் வளர்ச்சிப் பணிகளில் மெத்த னம்கூடாது. வேகமாகநடத்தி முடிக்க வேண்டும். பி.டி.ஏ மேற்கொள்ளும் பணிகள்தரம் மிக்கதாக இருக்க வேண்டும்.

தரமற்ற முறையில் மேற்கொள்ளப்படும் பணிகள் கண்டறியப்பட்டால் அதற்கு அதிகாரிகளே முழுப்பொறுப்பாகும்என்று முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப நகரின் கட்டமைப்பு, சேவைகளை திட்டமிட வேண்டியது அவசியம்

Print PDF

தினகரன்             26.10.2010

மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப நகரின் கட்டமைப்பு, சேவைகளை திட்டமிட வேண்டியது அவசியம்

மும்பை, அக். 26: அதிகரித்து வரும் மக்கள் தொகை, இடநெருக்கடி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மாநகரின் கட்டமைப்பு மற்றும் சேவைகளை திட்டமிட வேண்டியது அவசியமாகியுள்ளது என மும்பை பொறுப்பு அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

காலி மனையின் மொத்த பரப்பளவில் கட்டிடம் கட்ட அனுமதிக்கப்படும் நிலப்பரப்பை(எப்எஸ்சி) நிர்ணயம் செய்வது குறித்து, மகாராஷ்டிரா மாநில அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது. கொள்ளளவு மற்றும் காலி மனையின் பயன்பாடு ஆகியவற்றை பொறுத்து எப்எஸ்சி நிர்ணயம் செய்யப்படும். மாநில தலைமை செயலாளர் ஜே.பி. டாங்கே தலைமையிலான குழு, எப்எஸ்சி கொள்கையை மறுபரிசீலனை செய்து வருகிறது. இந்த குழு நடப்பு ஆண்டு இறுதியில் தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மும்பை பொறுப்பு அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், "மும்பை மாநகர் சந்தித்து வரும் தண்ணீர், கழிவுநீர் ஓடை, சாலை வசதி, மக்கள் தொகை பெருக்கம் மற்றும் இடநெருக்கடி ஆகிய பிரச்னைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு எப்எஸ்சி கொள்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும். காலி மனைக்கு நிர்ணயம் செய்யப்படும் எப்எஸ்சி, அப்பகுதியின் கொள்ளளவு, கட்டமைப்பு ஆகியவற்றை ஈடு செய்ய வேண்டும். மும்பையில் தற்போது எப்எஸ்சி நிர்ணயம் ஒரே அளவுகோலை கொண்டதாக இருக்கிறது. ஆனால் உலகில் வளர்ந்த நாடுகளின் மாநகரங்களில் எப்எஸ்சி நிர்ணயம், கட்டமைப்பை பொறுத்து வேறுபடுகிறது. மும்பையின் கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்றால், அனைத்து பிரச்னைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு எப்எஸ்சி கொள்கை வகுக்கப்பட வேண்டும்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 26 October 2010 09:43
 


Page 40 of 160