Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

புதுவயலில் ரூ 4 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றம்

Print PDF

தினமணி 05.10.2010

புதுவயலில் ரூ 4 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றம்

காரைக்குடி, அக். 4: சிவகங்கை மாவட்டம், புதுவயல் பேரூராட்சிப் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ 4 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.

புதுவயலில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ 40 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தை திறந்துவைத்தும், புதுவயல் பேரூராட்சிக்கு உள்பட்ட 2,255 பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கியும் அமைச்சர் பெரியகருப்பன் பேசியது:

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 1 கோடியே 86 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதுவயலில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ 4 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்திய அளவில் கல்வியில் தமிழகம் முன்னேறும் வகையில் இந்த அரசு பாடுபட்டு வருகிறது. தொழில் வளர்ச்சியில் 4 ஆண்டுகளில் ரூ 25 ஆயிரம் கோடிக்கு அன்னிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. அரசுத் துறையில் 4 லட்சம், தனியார் துறையில் 3 லட்சம் என 7 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தவர் தமிழக முதல்வர். மக்கள் பணியில் தொய்வின்றி தொடர்ந்து சேவை செய்வதே இந்த அரசின் நோக்கம் என்றார் அமைச்சர். மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) வேம்புலிங்கம் தலைமை வகித்தார். காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என். சுந்தரம் முன்னிலை வகித்தார்.

 

கோட்டையூர் பேரூராட்சியில் ரூ.2 கோடியில் வளர்ச்சிப்பணி

Print PDF

தினகரன் 04.10.2010

கோட்டையூர் பேரூராட்சியில் ரூ.2 கோடியில் வளர்ச்சிப்பணி

காரைக்குடி, அக்.4: கோட்டையூர் பேரூராட்சியில் ரூ.2 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் டாக்டர் ஆனந்த் கூறியதாவது:

கோட்டையூர், சொக்கநாதபுரத்தில் புதிய ரேஷன் கடைகள் கட்டப்பட்டுள்ளன. ரூ.30 லட்சத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, ரூ.10 லட்சத்தில் பேரூராட்சி புதிய கட்டிடத்துக்கான பூமிபூஜை, தார்சாலைகள் என ரூ.2 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறப்பு சாலைகள் திட்டத்தில் ரூ.55 லட்சத்தில் 5 சிமெண்ட் சாலை, தார் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

 

பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.5 கோடியில் வளர்ச்சி பணி

Print PDF

தினகரன் 01.10.2010

பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.5 கோடியில் வளர்ச்சி பணி

பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.5 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பட்டுக்கோட்டை நகராட்சி சாதாரணக் கூட்டம் தலைவர் பிரியஇளங்கோ (தி.மு.) தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் கண்ணன், ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு; சகுந்தலா (தி.மு..); எனது 12வது வார்டில் குடிதண்ணீருடன் சாக்கடை கலந்து வருகிறது. (சாக்கடை கலந்த தண்ணீரை ஒரு சிறிய பாட்டிலில் எடுத்துவந்து நகராட்சி கூட்டத்தில் காண்பித்தார்).

வீரையன் (தி.மு..):

தமிழ்நாட்டில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நமது நகரத்தில் பரவுவதற்குள் வீடு, வீடாக தடுப்பூசி போட வேண்டும்.

செல்லநாகராஜன் (.தி.மு.):

தமிழகத்தில் பன்றிகாய்ச்சலுக்கு இதுவரை 78 பேர் பலியாகி உள்ளனர். நமது பகுதியில் பன்றிகாய்ச்சல் பரவாமல் இருக்க பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் முகாம் கலெக்டர் உத்திரவிட வேண்டும். கடந்த 6 மாதங்களாக இறைச்சி கூடத்தில், ஒரு ஆட்டிற்கு கூட (தொடை பகுதியில்) நகராட்சி சீல் வைக்கப்படவில்லை. அப்படி சீல் வைக்கப்பட்டது என்றால் நான் என்னுடைய கவுன்சிலர் பதவியை ராஜினமா செய்கிறேன் என்றார்.

ஜோதிமணி (.தி.மு..):

நோய்வாய்பட்ட, அடிபட்ட, இறந்த ஆடுகளையும் வெட்டுகிறார்கள்.

சம்பத் (.தி.மு..):

எனது வார்டில் ஒரு வாரகாலமாக 7 விளக்குகள் எரியவில்லை. சத்துணவு மையம் அருகே உள்ள வடிகால் வாய்க்காலில் நிறைய பூச்சிகள் உள்ளது. உடனே அந்த பூச்சிகளை அழிக்க வேண்டும்.

ஜவஹர்பாபு (.தி.மு..):

எனது வார்டுக்கு இந்த 4 ஆண்டில் ரூ. 6.5 லட்சத்திற்கு மட்டும் வேலைகள் வைக்கப்பட்டுள்ளது. அங்கண்வாடி அமைக்க பலமுறை தபால் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த வேலைகளும் நடைபெறவில்லை என்றால் சாலைமறியல் செய்வோம் என்றார்.

அழகேசன் (தி.மு..):

எனது வார்டில் பி.எஸ்.என்.எல் கேபிள் பதிக்கும் போது 3 சாலைகள் சேதமடைந்துள்ளது. மழைக்காலம் தொடங்க இருப்பதால் உடனே சேதமடைந்த சாலைகளை செப்பணிட வேண்டும்.

துணைத்தலைவர் கண்ணன்:

3,4,5,6,7, ஆகிய 5 வார்டுகளிலிருந்து வரும் சாக்கடைகள் போக வழியில்லாமல் சாலைகளில் அங்கும் இங்குமாக தேங்கி நிற்கிறது. இதனால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சி தலைவர் பிரியாஇளங்கோ:

உறுப்பினர்கள் கூறிய கோரிக்கைகள் அனைத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் அரசு வழங்கும் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைப்பது, நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது என ரூ.5 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது என்பது உள்பட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தீர்மானம்.

Last Updated on Friday, 01 October 2010 12:05
 


Page 44 of 160