Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

திட்டக்குடி பேரூராட்சியில் ரூ.46 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமலர் 01.10.2010

திட்டக்குடி பேரூராட்சியில் ரூ.46 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

திட்டக்குடி : திட்டக்குடி பேரூராட்சி மன்றக் கூட்டத் தில் 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் ஏற்கப்பட்டது. திட்டக்குடி பேரூராட்சி மாதாந்திரக் கூட் டம் மன்ற வளாகத்தில் நடந்தது. சேர்மன் மன் னன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் கமலி முன்னிலை வகித் தார். செயல் அலுவலர் (பொறுப்பு) ஜோதிமாணிக்கம் வரவேற்றார். கூட்டத்தில் 80 லட்சம் ரூபாயில் நிர்வாக அனுமதி பெற்ற சிறப்பு சாலை திட்டத்தினை செயல்படுத்த தீர்மானிக்கப்பட் டது. அடிப்படை மற்றும் கட்டமைப்பு பணிகளுக்கு 30 லட்ச ரூபாயும், மயான பராமரிப்பிற்கு 12 லட்சம் ரூபாயும், குடிநீர் (இயக்குதலும், பராமரித் தலும்) செலவிற்கு 4 லட்சம் ரூபாயும் மன்ற கூட்டத்தில் ஏற்கப்பட்டது.

Last Updated on Friday, 01 October 2010 11:27
 

சித்தூர் நகராட்சியில் ரூ80 கோடிக்கு வளர்ச்சி பணிகள்

Print PDF

தினகரன் 30.09.2010

சித்தூர் நகராட்சியில் ரூ80 கோடிக்கு வளர்ச்சி பணிகள்

சித்தூர், செப்.30: சித்தூர் நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ80 கோடிக்கு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்றுள்ளது என எம்எல்ஏ சி.கே. பாபு பெருமிதத்துடன் கூறினார். ஆந்திராவில் மாநகராட்சி மற்றும் நகராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இதுதொடர்பாக சித்தூர் நகராட்சி மன்ற கடைசிக் கூட்டம் அதன் தலைவி சரளாமேரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எம்எல்ஏ சி.கே. பாபு பேசியதாவது:

கடந்த 5 ஆண்டு காலத்தில் சித்தூர் நகராட்சியில் ரூ 80 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில் மிகச் சிறந்த முறையில் கடந்த 5ஆண்டு காலத்தில் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் நகராட்சி செயல்பட்டுள்ளது. சித்தூரில் அனைத்தும் சிமென்ட் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. கூடுதல் டேங்கர் டிராக்டர் மூலம் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைத்துள்ளோம். பல பள்ளிகளில் கட்டிடங்கள், சமுதாய கூடங்கள், காய்கறி மார்க்கெட்டுகள் கட்டப்பட்டுள்ளன. ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் அரசு நலத் திட்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நகராட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று முதல் சிறப்பு அதிகாரிகள் மூலம் தேர்தல் நடைபெறும் வரை அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் செயல்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஆணையாளர் எஸ்.எஸ். வர்மா, கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் சித்தூர் நகராட்சி மன்ற கடைசிக் கூட்டம் அதன் தலைவர் சரளாமேரி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற எம்எல்ஏ சி.கே. பாபு, ஆணையாளர் எஸ்.எஸ். வர்மா மற்றும் கவுன்சிலர்கள்.

 

நகராட்சி எல்லையை விரிவுபடுத்த தீர்மானம்: நகராட்சியில் ஆதரவு; பேரூராட்சியில் எதிர்ப்பு

Print PDF
தினமலர்      29.09.2010

நகராட்சி எல்லையை விரிவுபடுத்த தீர்மானம்: நகராட்சியில் ஆதரவு; பேரூராட்சியில் எதிர்ப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகராட்சியை விரிவுபடுத்த நகராட்சியை சுற்றியுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளை, நகராட்சியோடு இணைக்க வேண்டும் என, காஞ்சிபுரம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகராட்சி 11.72 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் உட்பட, முக்கிய அலுவலகங்கள் நகராட்சியை அடுத்துள்ள தேனம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளன. காஞ்சிபுரம் நகரை அடுத்து ஓரிக்கை, தேனம்பாக்கம், நத்தப்பேட்டை, கோனேரிகுப்பம் ஊராட்சிகள், செவிலிமேடு பேரூராட்சி ஆகியவை அமைந்துள்ளன. இப்பகுதிகளில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப குடியிருப்புகளும் அதிகரித்து வருகின்றன. புதிதாக உருவாகும் குடியிருப்புப் பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளன. எனவே, நகராட்சிப் பகுதியை விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. கடந்த 1999ம் ஆண்டு வெளியிடப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணையின்படி, உள்ளாட்சிகளின் தரம் உயர்த்துதல் மற்றும் எல்லைகளை மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, காஞ்சிபுரம் அருகே வளர்ச்சியடைந்திருந்த பெரியதோட்டம், அரப்பணஞ்சேரி, திருக்காலிமேடு உட்பட சில பகுதிகளை மட்டும் நகராட்சியோடு இணைக்க பரிசீலனை நடந்தது. இந்நிலையில், 2007ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அரசாணை எண் 131ன்படி மீண்டும் நகர்ப்புற உள்ளாட்சிகளின் தரம் உயர்த்துதல், தரம் இறக்குதல், எல்லைகளை மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக நெறிமுறைகள் வழங்கப்பட்டன. அதன்படி நகராட்சியோடு விஷ்ணுகாஞ்சி, செவிலிமேடு, கோனேரிகுப்பம், அரப்பணஞ்சேரி, பெரியதோட்டம் பகுதிகளை சேர்ப்பது என, 2007ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி, காஞ்சிபுரம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் மீது அரசாணை வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு ஆய்வுகளுக்கும், ஆலோசனைகளுக்கும் பின், தற்போது வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கள் தொகை மற்றும் நகரங்களை சுற்றியுள்ள உள்ளாட்சி நிறுவனங்கள் விரிவடைந்து நகரங்களாக வளர்ச்சி பெற்று வருவதை கருத்தில் கொண்டு, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வதற்கேற்பவும், நகராட்சியால் சுலபமாக நிர்வகிக்கக் கூடிய வகையிலும், இதர வழிமுறைகளை நிறைவு செய்யும் வகையிலும் அமைந்துள்ள செவிலிமேடு பேரூராட்சி, ஓரிக்கை, தேனம்பாக்கம், நத்தப்பேட்டை ஊராட்சியை, நகராட்சியோடு இணைத்து நகராட்சி எல்லையை விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டது. இதன்படி, காஞ்சிபுரம் நகராட்சி எல்லை 36.14 சதுர கிலோ மீட்டராக விரிவடையும். மக்கள் தொகை 2010ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 999 ஆக அமையும். இதற்கு ஆதரவு தெரிவித்து காஞ்சிபுரம் நகராட்சியோடு செவிலிமேடு பேரூராட்சி, ஓரிக்கை, தேனம்பாக்கம், நத்தப்பேட்டை, கோனேரிகுப்பம் ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செவிலிமேடு பேரூராட்சித் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பேரூராட்சியை காஞ்சிபுரம் நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப உள்ளதாக பேரூராட்சித் தலைவர் ஏழுமலை தெரிவித்தார்.

 


Page 45 of 160