Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

பெங்களூரில் புதுப்பிக்கப்பட்ட ஏரிகள் விரைவில் திறப்பு

Print PDF

தினகரன் 09.09.2010

பெங்களூரில் புதுப்பிக்கப்பட்ட ஏரிகள் விரைவில் திறப்பு

பெங்களூர், செப். 9: பெங்களூர்மாநகரில் இருக்கும் ஏரிகள் அனைத்தும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதில் பெரும்பாலான ஏரிகள் தூர் நிரம்பியும், துர்நாற்றமுடன் இருந்தது. ஏரிகளை புனரமைத்து நிர்வாகம் செய்யும் பொறு ப்பை கடந்தாண்டு பெங்களூர் பெருநகர் வளர்ச்சி குழுமத்திடம் மாநகராட்சி ஒப்படைத்தது.

இதில் சர் எம்.விஷ்வேஷ்வரய்யா நகரில் உள்ள உல்லாள் ஏரி, மல்லத்தள்ளி ஏரி, கொம்மகட்டா ஏரி, ராமசந்திர ஏரி, பனசங்கரி 6வது ஸ்டேஜில் உள்ள தலகட்டபுரா ஏரி, கோனனசந்திரா ஏரி, சோம்புரா ஏரி, அஏசனபுராவில் உள்ள கொத்தனூர் ஏரி, அர்காவதி லே அவுட்டில் உள்ள ஜக்கூர் ஏரி, சம்பிகே ஏரி, ராஜேனஹள்ளி ஏரி, வெங்கடேசபுரா ஏரி, தொட்டபிதரே கல்லு, மாதாவர ஆகிய ஏரிகளை புனரமைக்கும் பொறுப்பை பி.டி.. எடுத்து கொண்டது.

முதல் கட்டமாக ரூ104.61 கோடி செலவில் 8 ஏரிகளை மேம்படுத்தும் பணியை பி.டி.. தொடங்கியது. இதில் உல்லாள் ஏரியை ரூ4.49 கோடியிலும், மல்லத்தள்ளி ஏரியை ரூ22.95 கோடியிலும், கொம்மகட்டா ஏரியை ரூ6.44

கோடியிலும், ராமசந்திரா ஏரியை ரூ13.40 கோடியிலும், தலகட்டபுரா ஏரியை ரூ2.40 கோடியிலும், கோனசந்திரா ஏரியை ரூ6.10கோடியிலும், சோம்புரா ஏரியை ரூ3.85கோடியிலும், கொத்தனூர் ஏரியை ரூ3.60 கோடியிலும், சம்பிகே ஏரியை ரூ21.91கோடியிலும், ராஜேனஹள்ளி ஏரியை ரூ9 கோடியிலும், வெங்கடேசபுரா ஏரியை ரூ47 லட்சம் செலவு செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் குண்டும், குழியுமாக சிலரின் ஆக்ரமிப் பிலும் மேற்கண்ட ஏரிகள் இருந்தது. தற்போது பி.டி.. வின் கை வண்ணத்தில் 8 ஏரிகள் தூர் வாரப்பட்டும், வண்ண வண்ண மலர் செடிகளில் நந்தவனமாக்கப்படும் பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் வகையில் பிரமிக்க வைக்கிறது. தற்போது புனரமைப்பு பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. இன்னும் 10 நாட்களில் முழுமையாக பணி முடிந்து மக்கள் கண்டு ரசிக்கும் அழகிய சுற்றுலா இடமாக காட்சியளிக்க உள்ளது.

 

தென்காசி நகராட்சி பகுதியில் ரூ.5.60 கோடியில் வளர்ச்சி பணிகள் : நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினமலர் 07.09.2010

தென்காசி நகராட்சி பகுதியில் ரூ.5.60 கோடியில் வளர்ச்சி பணிகள் : நகராட்சி தலைவர் தகவல்

தென்காசி : தென்காச நகராட்சி பகுதியில் 5 கோடியே 60 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என நகராட்சி தலைவர் கோமதிநாயகம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2006-07ம் ஆண்டில் 12வது திட்ட நிதிக்குழு பரிந்துரை திட்டத்தின் கீழ் 6 பணிகள் 27 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், தென்காசி எம்.எல்..கருப்பசாமி பாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 பணிகள் 28 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2 பணிகள் 7 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், நகர்புற கூலி வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒரு பணி 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நகராட்சி நிதியில் இருந்து 5 பணிகள் 14 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் நிறைவேற்றப்பட்டன.

2007-08ம் ஆண்டு பகுதி 2 திட்டத்தில் 9 பணிகள் 39 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், இயற்கை இன்னல்கள் திட்டத்தில் 2 பணிகள் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 12வது நிதிக்குழு பரிந்துரை திட்டத்தில் 9 பணிகள் 29 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், 2வது மாநில நிதிக்குழு சமன்பாடு நிதி மற்றும் ஊக்க நிதியில் ஒரு பணி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியில் 27 பணிகள் 38 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு பணி 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், நகர்புற கூலி வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு பணி 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நகராட்சி நிதியில் இருந்து 20 பணிகள் 21 லட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், மாநில குழு வெற்றிடம் நிரப்பும் நிதியில் ஒரு பணி 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் நிறைவேற்றப்பட்டது.

2008-09ம் ஆண்டில் 12வது நிதிக்குழு பரிந்துரை திட்டத்தில் 5 பணிகள் 30 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், கல்வி நிதியில் 3 பணிகள் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் 14 பணிகள் 32 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியில் 3 பணிகள் 8 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், நகர்புற கூலி வேலைவாய்ப்பு திட்டத்தில் 2 பணிகள் 4 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், மாவட்ட கலெக்டரின் வளர்ச்சி நிதியில் ஒரு பணி 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பகுதி 2 திட்டத்தில் ஒரு பணி 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சுற்றுலா துறை பணிகள் மூலம் 8 பணிகள் 37 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், கேளிக்கை வரி ஈடு செய்யும் நிதியில் ஒரு பணி 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் நிறைவேற்றப்பட்டன.

2009-10ம் ஆண்டில் 12வது நிதிக்குழு பரிந்துரை திட்டத்தில் 4 பணிகள் 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், கல்வி நிதியில் ஒரு பணி 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியில் 18 பணிகள் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு பணி 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், நகர்புற கூலி வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு பணி 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், நகராட்சி நிதியில் 15 பணிகள் 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பகுதி 2 திட்டத்தில் 3 பணிகள் 20 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் நிறைவேற்றப்பட்டன.

கடந்த 4 ஆண்டுகளில் தென்காசி நகராட்சி பகுதியில் மொத்தம் 176 பணிகள் 5 கோடியே 60 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு நகராட்சி தலைவர் கோமதிநாயகம் அறிக்கையில் கூறியுள்ளார்.

 

மதுரை பஸ் நிலையம், பூ மார்க்கெட் இடையே தென் மாவட்டத்தில் பெரிய சென்ட்ரல் மார்க்கெட் மத்திய அரசு ரூ. 85 கோடி அனுமதி

Print PDF

தினகரன் 07.09.2010

மதுரை பஸ் நிலையம், பூ மார்க்கெட் இடையே தென் மாவட்டத்தில் பெரிய சென்ட்ரல் மார்க்கெட் மத்திய அரசு ரூ. 85 கோடி அனுமதி

மதுரை, செப். 7: மதுரை மாட்டுத் தாவணி பஸ் நிலையம், பூ மார்க்கெட் இடையே 27 ஏக்கரில் நிரந்தரமாக சென்ட்ரல் மார்க் கெட் கட்ட மத்திய அரசு ரூ. 85 கோடி அனுமதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தென் மாவட்டத்தில் பெரிய சென்னட்ரல் மார்க்கெட்டாக அமையும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் இருந்த சென்ட்ரல் மார்க்கெட், மாட்டுத் தாவணிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. கோயில் அருகில் நெருக்கடியை தவிர்க்கும் நோக்குடன் இந்த மார்க்கெட் உருவாக்கப்பட்டது. நிரந்தரமாக சென்ட்ரல் மார்க்கெட் கட்டுவதற்கு, மாட்டுத் தாவணி பஸ் நிலையத்திற்கும், பூ மார்க்கெட்டுக்கும் இடையே காலியாக உள்ள 27 ஏக்கர் நிலத்தை ஏற்கனவே மாநகராட்சி ஒதுக்கி உள்ளது. இதற்கு ரூ. 85 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

மாநகராட்சியில் இதற்கு போதிய நிதிவசதி இல்லாததால், தமிழ்நாடு வேளாண்மை பொருட்கள் விற்பனை வாரியம் பொறுப்பில் 33 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் இங்கு மார்க்கெட் கட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் நிரந்தர மார்க்கெட் கட்ட வேளாண் விற்பனை வாரியம் மத்திய அரசின் வேளாண்மை துறையில் நிதி கோரியது. இதற்கு மத்திய அரசு ரூ. 85 கோடி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த நிதி ஆண்டில் ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கட்டுமான பணி தொடங்கி நடைபெற்ற பிறகு படிப்படியாக ரூ. 55 கோடி நிதி ஒதுக்கீடு ஆகும். இங்கு காய்கறிகள் உலராமல் இருப்பு வைக்கும் குளிர்சாதன குடோன், பெரிய, சிறிய அளவில் 1,300 கடைகள் அமைகின்றன. மார்க்கெட் வருவாயில் 85 சதவீதம் மாநகராட்சிக்கும், 15 சதவீதம் வாரியத்திற்கும், 5 சதவீதம் பராமரிப்புக்கும் ஒதுக்கப்படும் எனவும், 33 ஆண்டுக்கு பிறகு மாநகராட்சியிடம் இதை வாரியம் ஒப்படைப்பது எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது தென் மாவட்டங்களில் பெரிய மார்க்கெட்டாக அமையும்.

மார்க்கெட் கட்ட இப்போது தான் நிதி ஒதுக்கீடு ஆகி உள்ளது. இதை கட்டி முடிக்க சில ஆண்டுகள் ஆகும். அதுவரை சென்ட்ரல் மார்க்கெட் மாட்டுத் தாவணியில் தற்போதுள்ள இடத்தில் இயங்கும். நிரந்தர மார்க்கெட் கட்டி முடித்ததும் அங்கு மாற்றம் செய்யப்படும்.

 


Page 52 of 160