Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில்ரூ. 85 லட்சத்தில் பூங்கா பணி தொடக்கம்

Print PDF

தினமணி 26.08.2010

அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில்ரூ. 85 லட்சத்தில் பூங்கா பணி தொடக்கம்

சென்னை, ஆக. 21: சென்னை அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில் ரூ.85 லட்சத்தில் மருத்துவ தாவரங்களுடன் கூடிய புதிய பூங்கா அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

÷கோட்டூர்புரத்தில் அடையாறு ஆற்றின் ஓரத்தில் 3.84 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 85.87 லட்சம் செலவில் பூங்கா அமைக்கும் பணியை மேயர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசியது:

÷அடையாறு ஆற்றின் ஓரம் 3.84 ஏக்கர் நிலம் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமாக இருந்தது. இந்த இடத்தை சிலர் குடிசைகள் போட்டு ஆக்கிரமித்திருந்தனர். இதனால், இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வந்தது.

÷மேலும், அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, அங்கிருந்த குடிசைப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பொதுப் பணித்துறை வசம் இருந்த இந்த இடம், மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

÷இந்த இடத்தில் ஏற்கெனவே பொதுப் பணித்துறை மூலம் நிழல் தன்னார்வ தொண்டு நிறுவனம் 240 வகையான மருத்துவ குணம் கொண்ட செடிகளை நட்டு பராமரித்து வருகிறது.

÷இந்த அரிய வகை மருத்துவச் செடிகளுடன் புதிய பூங்காவை ரூ. 85.87 லட்சம் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூங்காவில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு, நடைபாதை அமைக்கப்படும்.

÷அழகிய புல் தரைகள், பார்வையாளர்கள் அமருவதற்கென மண்டபம், பொது சுகாதார வளாகம், 50 அமரும் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். 10 மாதத்தில் பூங்கா அமைக்கும் பணி முடிக்கப்படும் என்றார் மேயர் மா. சுப்பிரமணியன். துணை மேயர் ஆர். சத்யபாமா, எதிர்க் கட்சித் தலைவர் சைதை ரவி, உறுப்பினர் மேரி லூர்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

கோவை அருகே ரூ100 கோடியில் உயிரியல் பூங்கா

Print PDF

தினகரன் 26.08.2010

கோவை அருகே ரூ100 கோடியில் உயிரியல் பூங்கா

கோவை, ஆக. 26: கோவை எட்டிமடை அருகேயுள்ள கல்லாங்கொத்து கிராமத்தில் மாநகராட்சி சார்பில் பிரமாண்ட உயிரியல் பூங்கா அமைக்கப்படுகிறது. ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ100 கோடி செலவில் பூங்கா அமைக்கப்படும்.

நீர் யானை, யானை, காட்டெருமை, சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, மான், செந்நாய், முதலை, நீர் பறவைகள், வெளிநாட்டு பறவைகள் உட்பட 120க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளை ஜோடியுடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

உயிரினங்களை பல்வேறு மாநிலங்களில் பூங்கா, சரணாலயங்களில் இருந்து பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்காக கல்லாங்கொத்து கிராமத்தில் 69.7 ஏக்கர் நிலத்தை மாவட்ட வருவாய்த்துறையினர் மாநகராட்சிக்கு ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. கூடுதலாக தனியாரிடமிருந்து 14.2 ஏக்கர் நிலத்தை பெற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறியதா வது:

உயிரியல் பூங்கா அமைக்க கூடுதல் நிலம் பெறுவது குறித்து மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைத்து முடிவு எடுக்கப்படும். விரைவில் மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்தி முடிவு எடுப்பர். வருவாய்த்துறையினர் விரைவில் இடத்தை ஒப்படைப்பர்என்றார்.

 

எட்டிமடையில் உயிரியல் பூங்கா மத்திய உயிரியல் பூங்கா அதிகாரிகள் ஆய்வு நடத்திய பின் முடிவு

Print PDF

தினகரன் 25.08.2010

எட்டிமடையில் உயிரியல் பூங்கா மத்திய உயிரியல் பூங்கா அதிகாரிகள் ஆய்வு நடத்திய பின் முடிவு

கோவை, ஆக 25: மதுக்கரை எட்டி மடை வன எல்லை அருகே கல்லாங்கொத்து கிராமத்தில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பிரமாண்டமான உயிரியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் இந்த பூங்கா அமைக்கப்படும்.

இதில் நீர் யானை, யானை, காட்டெருமை, சிங்கம், புலி, சிறுத் தை, கரடி, மான், செந்நாய், முத லை, நீர் பறவைகள், வெளிநாட்டு பறவைகள் உட்பட 120க்கும் மேற் பட்ட வன உயிரினங்கள், பறவை களை ஜோடியுடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது. செயற்கை நீரூற்று, பூங்கா, நடைபாதை, மலர் தோட்டம் என பல்வேறு வசதிகள் செய்யப்படும். மத்திய மிருககாட்சி சாலை ஆணையம் சார்பில் உயிரினங்களை பல்வேறு மாநிலங்களில் பூங்கா, சரணாலயங்களில் இருந்து பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கல்லாங்கொத்து கிராமத்தில் 69.70 ஏக்கர் நிலத்தை மாவட்ட வருவாய்த்துறையிடமிருந்து பெற கோரிக்கை விடப்பட்டது. வருவாய்த்துறையினர் இந்த இடத்தை மாநகராட்சிக்கு ஒப்படைக்க சம் மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், கூடுதலாக அப்பகுதியில் தனியாரிடமிருந்து 14.2 ஏக்கர் நிலத்தை பெற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், இப்பகுதியில் 50 மீட்டர் தூர எல்லைக்குள் கேரள மாநிலத்திற்கான பிரதான ரயில் பாதை அமைந்திருக்கிறது. முட்புதர், கரும்பாறை அடர்ந்த இப்பகுதியில் நீர்வளம் குறைவு.

மரம், செடிகளை நட்டால் அது செழிப்பாக வளருமா என்ற சந்தேகமும் நிலவுகிறது. சில ஏக்கர் நிலம் தரிசாக காணப்படுகிறது. இங்கே நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உயிரியல் பூங்கா அமைவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், " இந்த இடத்தில் உயிரியல் பூங்கா அமைக்க கூடுதல் நிலம் பெறுவது குறித்து மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைத்து முடிவு எடுக்கப்படும். ரயில்பாதையால் பூங்காவிற்கு இடையூறு இருக்காது. மரம், செடி நன்றாக வளரும் என எதிர்பார்க்கிறோம். விரைவில் மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்தி முடிவு எடுப்பார்கள். வருவாய்த்துறையினர் விரைவில் இடத்தை ஒப்படைப்பார்கள், " என்றார்.

 


Page 55 of 160