Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

வடலூர் நகரை அழகுபடுத்தும் பணி துவக்கம் திட்ட மதிப்பீடு தயாரிப்பு

Print PDF

தினகரன் 24.08.2010

வடலூர் நகரை அழகுபடுத்தும் பணி துவக்கம் திட்ட மதிப்பீடு தயாரிப்பு

நெய்வேலி, ஆக.24: வடலூர் நகரை அழகுபடுத்தும் பணி துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் வடலூர்வளர்ந்து வரும் நகராகும். இங்கு வள்ளலார் நிறுவிய சத்தியஞானசபை உலகப்புகழ்பெற்றது. இதை சுற்றுலாதலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. வள்ள லார் தெய்வநிலையத்திற்கு நாடுமுழுவதுமிருந்து தின சரி நூற்றுக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. அதேபோல் ஞான சபையை நெடுஞ்சாலையிலிருந்து பார்த்து ரசிக்கும் நிலை இல்லாமல் ஆக்கிரமிப்புகளால் மறைக்கப்பட்டு இருந்தது. நான்குமுனை சந்திப்பும் ஆக்கிரமிப்புகளால் சிக்கி திணறியது. இதனால் பல விபத்துகளும் ஏற்பட்டன. இதனை அறிந்த அமைச்சர் பன்னீர்செல்வம் மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கேட்டுக்கொண்டார். அதனை அடுத்து ஆட்சியர் சீத்தாராமன், சிதம்பரம், விருத்தாசலம், போன்ற கோயில் நகரங்களுக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறையினர் இணைந்து ஞானசபை, நான்குமுனை சாலை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பல இடங்களில் மக்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர்.

இந்த நிலையில் வடலூர் நகரை அழகுபடுத்தும் பணி நேற்று துவங்கியது. வடலூர் நான்கு முனை சந்திப்பிலிருந்து சென்னை&தஞ்சை, கடலூர்& விருத்தாசலம் சாலையும் அகலப்படுத்தப்பட்டன. புதிய தரமான தார்சாலைகள் போடப்படுகின்றன. இதை இருவழிப்பாதையாக மாற்ற சாலை நடுவே தடுப்பு வேலியும் அமைக்கப்படுகின்றது. நான்குமுனை சந்திப்பில் செயற்கை நீர் ஊற்று போன்றவற்றால் அழகுபடுத்தப்படுகின்றது. இதேபோல் ஞானசபை திடல் தெருவில் அழகிய மதிற்சுவர், பூங்காக்கள் அமைக்கப்படுகின் றன.

இந்த பணிகளுக்கான திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணி நேற்று வடலூரில் துவங்கியது. நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தாமரைச்செல்வன், உதவிபொறியாளர் மலர்விழி, சாலை ஆய்வாளர் செல்வராஜ், ஆகியோர் இந்த பணிகளை மேற்கொண்டனர். இந்த பணிகள் துவங்கியதின் மூலம் பொதுமக்களின் கோரிக்கை செயல்வடிவம் பெறுகின்றது. இந்த திட்டம் முழுமை பெறும்போது வடலூர் நகரம் பெருநகர வரிசையில் இடம்பெறும்.

ஞானசபை வளாகத்தில் என்எல்சி உதவியுடன் புல்தரை, பூங்கா, நீர் ஊற்று போன்றவை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் வள்ளலார் கொள்கைகள் தொடர்புடைய பொதுநூலகம் அமைக்கவும், ஞானசபையை முழுமையான தியான கூடமாக மாற்றவும் சன்மார்க்க அன்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

இந்த பணிகள் நிறைவு பெற்றால் வடலூர் சுற்றுலா தலமாக தரம் உயர்ந்து உலக அளவில் புகழ் பெறும் என பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். இதற்கான பணிகளும் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மேற்பார்வையில் செயல்பட உள்ளது. இதனை அடுத்து வடலூர் புனித நகராகும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

 

பூங்காக்களை மேம்படுத்த ஆட்சியர் யோசனை

Print PDF

தினமணி 20.08.2010

பூங்காக்களை மேம்படுத்த ஆட்சியர் யோசனை

புதுக்கோட்டை, ஆக. 19: புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள பூங்காக்களை பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய "நமக்கு நாமே திட்ட'த்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளலாம் என யோசனை தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் ஆ. சுகந்தி.

புதுக்கோட்டை புதுக்குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நடைப் பயிற்சியாளர் சங்க தொடக்க விழாவில், பங்கேற்ற அவர்,சங்கத்தைத் தொடக்கிவைத்து மேலும் அவர் பேசியது:

""இந்த புதுக்குளக்கரையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் துணை நிற்கும். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைப்பயிற்சிக்கு தடை விதித்துள்ள மறு பரிசீலனை செய்யவேண்டுமென இங்கு குறிப்பிட்டனர். அரசு அலுவலக வளாகத்தை தேவையற்ற பயன்பாட்டுக்குவிடக் கூடாது என்பது விதி.

மேலும் பல முறை அங்கு செல்லும்போதும் நான் பார்த்த விரும்பத் தகாத காட்சிகளும் பாரம்பரியமிக்க அவ்வளாகம் மற்றும் அங்குள்ள உயிரினங்கள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கமுமே இந்தத் தடைக்கு காரணமாகும்.

அதே நேரத்தில், புதுக்கோட்டை நகரில் உள்ள பூங்காக்களைப் பராமரிக்கும் நடவடிக்கைகளில் நகராட்சி நிர்வாகத்தை ஈடுபடச் செய்ய வேண்டும் என்ற மறைமுக நோக்கமும் உண்டு.

சமூகப் பொறுப்பும் அக்கறையும் பொதுமக்களிடம் அதிகரிக்கும்போதுதான் எந்த முயற்சியும் வெற்றி பெறும். நகரில் உள்ள பூங்காக்களைப் பராமரிக்க இதுபோன்ற சங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் பங்களிப்புடன் கூடிய "நமக்கு நாமே திட்ட'த்தின் மூலம் பூங்காக்களை மேம்படுத்த முன்வந்தால் அதற்கு உதவ மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது'' என்றார் மாவட்ட ஆட்சியர் ஆ. சுகந்தி.

தொடர்ந்து, 1, 000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியர் தொடக்கிவைத்தார்.

நிகழ்ச்சிக்கு, நகர்மன்றத் துணைத் தலைவரும் நடைப் பயிற்சியாளர் சங்கத் தலைவருமான க. நைனாமுஹம்மது தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் உ. ராமதிலகம் முன்னிலை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். முத்துச்சாமி, நகராட்சி ஆணையர் கே. பாலகிருஷ்ணன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் சு. எழிலரசன், நகராட்சிப் பொறியாளர் கே. ரெங்கராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். சங்கத்தின் கெüரவ ஆலோசகர் தங்கம் மூர்த்தி வாழ்த்திப் பேசினார்.

முன்னதாக, சங்கச் செயலர் சு. தனவேலு வரவேற்றார். துணைத் தலைவர் சோ. பார்த்திபன் திட்ட அறிக்கை வாசித்தார். சங்கப் பொருளர் கி. ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

 

சேலத்தில் இன்று ரூ321 கோடி திட்ட பணிகளை முதல்வர் துவக்கி வைக்கிறார்

Print PDF

தினகரன் 20.08.2010

சேலத்தில் இன்று ரூ321 கோடி திட்ட பணிகளை முதல்வர் துவக்கி வைக்கிறார்

சேலம், ஆக.20: சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் உள்பட புதிய கட்டிடங்களை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைக்கிறார். இதில் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். முதல்வர் கருணாநிதி இன்று காலை சேலம் வருகிறார்.

வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபு&கவுதமியின் திருமணத்தை விஎஸ்ஏ பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணிக்கு முதல்வர் நடத்தி வைக்கிறார்.

நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

மாலை 4 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாவட்ட எஸ்.பி. அலுவலகம் மற்றும் அரசு நர்சிங் கல்லூரி, தங்கும் விடுதி, பள்ளி கட்டிடங்களை முதல்வர் திறந்து வைக்கிறார்.

ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகள், வழியோர 13 பேரூராட்சிகள், தலைவாசல், கெங்கவல்லி உள்பட 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 921 குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா உள்பட ஸீ321 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளையும் முதல்வர் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இன்று மாலை 6 மணியளவில் பள்ளப்பட்டி ஜவஹர் மில் திடலில் திமுக பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மத்திய, மாநில அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

Last Updated on Friday, 20 August 2010 08:45
 


Page 56 of 160