Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

கோபியில் மட்டும் ரூ.1.76 கோடியில் பணிகள் : எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தகவல்

Print PDF

தினமலர் 11.08.2010

கோபியில் மட்டும் ரூ.1.76 கோடியில் பணிகள் : எம்.எல்.., செங்கோட்டையன் தகவல்

கோபிசெட்டிபாளையம்: "தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கோபி நகராட்சிக்கு ஒரு கோடியே 76 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது,'' என செங்கோட்டையன் எம்.எல்.., தெரிவித்தார். கோபி எம்.எல்.., தொகுதி வளர்ச்சி நிதி 32 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயில் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும், .தி.மு.., கவுன்சிலர்களின் வார்டுகளுக்கே ஒதுக்கப்பட்டது. தே.மு.தி.., - .தி.மு.., மற்றும் அ.தி.மு.., வில் இருந்து தி.மு..,வுக்கு தாவிய ராஜாமணி வார்டில் தலா ஒரு பணி ஒதுக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த தி.மு.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள், ஜூலை 29ம் தேதி நடந்த நகராட்சி கூட்டத்தில், வைக்கப்பட்டிருந்த தீர்மானங்கள் அனைத்தையும் ஒத்தி வைக்ககோரி கடிதம் கொடுத்தனர். தி.மு.., - .தி.மு..,வினரிடையே ஏற்பட்ட மோதலால் நகராட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

இதுகுறித்து கோபி எம்.எல்.., செங்கோட்டையன் கூறியதாவது: கோபி நகராட்சியை பொறுத்தவரை அ.தி.மு.., ஆளும் கட்சியாக இருந்தாலும், மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் தி.மு..,வின் மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. நான்கு ஆண்டுகளில் கோபி நகராட்சியில், எனது நிதியில் இருந்து ஒரு கோடியே 76 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் எம்.பி., சிவசாமி தொகுதி நிதியில் இருந்து ஐந்து லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் கோவிந்தராஜர், மைத்ரேயன் ஆகியோர் நிதியில் இருந்து 31 ரூபாய் லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எம்.பி., பாலகங்கா நிதியில் இருந்தும் நிதி கேட்கப்பட்டுள்ளது. மாநில அளவில் அ.தி.மு.., எதிர்க்கட்சியாக இருந்தாலும் கோபி நகராட்சியில் நான்கு கோடியே 69 லட்ச ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டம், இரண்டு கோடியே ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் ஒன்பது தொகுப்பு சாலைகள், ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு நிதி இரண்டு கோடியே மூன்று லட்ச ரூபாய், கடந்த 2006 முதல் 2010 வரை கல்வி நிதி 91 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயும், பொதுநிதியில் இருந்து 53 லட்சத்து 2,000 ரூபாயும், குடிநீர் விநியோக நிதியில் இருந்து ஆறு லட்சத்து 57 ஆயிரம் ரூபாயும், பகுதி பங்கீடு திட்டத்தில் 43 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. நகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் தள்ளி வைக்கப்பட்டால், பணிகளை தொடர முடியாது. அரசிடம் கேட்கப்படும் நிதியும் வராமல் நின்று விடும். மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள, தி.மு.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாய்ப்பளித்தால் கோபி தொகுயில்தான் மீண்டும் போட்டியிடுவேன். தொகுதி மாறும் பிரச்னைக்கு இடமில்லை. வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து ஜெயலலிதா முடிவு செய்வார். ஈரோடு மாவட்டத்தில் கட்சியை விட்டு யார் சென்றாலும், அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு..,தான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். பெருந்துறை எம்.எல்.., பொன்னுதுரை, நகராட்சி தலைவர் ரேவதிதேவி, புறநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட பேரவை செயலாளர் சிந்துரவிச்சந்திரன், மகளிர் அணி செயலாளர் சத்யபாமா, ஒன்றிய செயலாளர் மனோகரன், நகர செயலாளர் காளியப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

 

நகர மேம்பாட்டு நடவடிக்கை குழு கூட்டம் சிதம்பரத்தில் பூந்தொட்டிகள் அமைக்க முடிவு ஆட்சியர் சீத்தாராமன் தகவல்

Print PDF

தினகரன் 10.08.2010

நகர மேம்பாட்டு நடவடிக்கை குழு கூட்டம் சிதம்பரத்தில் பூந்தொட்டிகள் அமைக்க முடிவு ஆட்சியர் சீத்தாராமன் தகவல்

சிதம்பரம், ஆக. 10: சிதம்பரம் நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சிதம்பரம் நகர மேம்பாட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. இதன்படி முதல் கட்டமாக நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நகர மேம்பாட்டு நடவடிக்கை குழுவின் இரண்டாவது கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தார். சிதம்பரம் கோட்டாட்சியர் ராமராஜூ வரவேற்றார்.

இதில் எஸ்பி அஸ்வின்கோட்னீஷ், திட்ட அலுவ லர் ராஜஸ்ரீ, சிதம்பரம் தாசில்தார் காமராஜ், டிஎஸ்பி மூவேந்தன், நடராஜர் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், நகராட்சி ஆணையாளர் மாரியப்பன்(பொ), நகர் மன்றத் தலைவர் பௌஜியாபேகம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பள்ளிப்படை தனலட்சுமிரவி, சி.கொத்தங்குடி வேணுகோபால், நான்முனிசிபல் ராஜேந்திரன் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:

சிதம்பரம் நகர மேம் பாட்டு நடவடிக்கை குழுவின் கூட்டம் நடந்தது. சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையே மேற்கொள்ளும். 15 மீட்டர் உயரத்தில், ரூ 28 லட்சம் செலவில் 33 விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதி மூலம், அண்ணாமலைநகர் பேரூராட்சியில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படும். நகரின் நான்கு முக்கிய வீதிகளும் அழகு படுத்தப்படும். நடைபாதைகளில் 20 அடிக்கு ஒரு இடத்தில் பூந்தொட்டிகளும், முக்கிய இடங்களில் கண்ணை கவரும் வகையில் அழகிய குப்பை தொட்டிகளும் அமைக்கப்படும்.

நகரில் உள்ள கட்டண கழிவறைகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகள் சிதம்பரம் நகருக்கு வந்தால், இங்கேயே தங்க வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு நகரம் அழகு படுத்தப்படும். நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதலாக 5 போக்குவரத்து போலீசாரும், ரெக்கவரி வாகனமும் வழங்க எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார். கஞ்சிதொட்டிமுனை பகுதியில் அழகிய கலர் நீரூற்று அமைக்கப்படும். மேலும் அங்கு பஸ் நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

 

கன்னாட் பிளேஸ் நடைபாதைகளில் கருங்கல் பதிப்பதில் சிக்கல்

Print PDF

தினகரன் 10.08.2010

கன்னாட் பிளேஸ் நடைபாதைகளில் கருங்கல் பதிப்பதில் சிக்கல்

புதுடெல்லி, ஆக. 10: நகரை அழகுபடுத்தும் பணியில் கருங்கற்பாளங்கள் பதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் கன்னாட் பிளேஸ் பகுதியில் விதவிதமான கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

காமன்வெல்த் விலையாட்டு போட்டிக்காக நகரை அழகுபடுத்தும் பணி கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரின் இதயமாக திகழும் கன்னாட்பிளேஸ் பகுதியில் உள்ள அனைத்து நடைபாதைகளும் ஒரே மாதிரி தோற்றம் அளிக்கும் விதத்தில் கருங்கற்பாளங்கள் பதிக்க வேண்டும் என்று என்று டெல்லி கலாச்சார ஆணையம் உத்தரவிட்டது. அந்த கற்பாளங்கள் கிடைக்காததால் கிரானைட் கற்களை பதிக்கலாம் என்று மாநகராட்சி ஆலோசனை தெரிவித்தது. அதை கலாச்சார ஆணையம் ஏற்கவில்லை.

இதனால் நடைபாதைகளை அழகுபடுத்தும் பணி இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது.

இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்க இன்னும் 53 நாட்களே இருப்பதால், அவசர அவசரமாக பலவிதமான வண்ண கற்களை அப்பகுதியில் இருக்கும் வியாபாரிகளே நடைபாதைகளில் பதித்து வருகின்றனர். சில இடங்களில் மொசைக் கற்களும், சில பகுதிகளில் வண்ண வண்ண பளிங்கு கற்களும் பதிக்கப்பட்டுள்ளன.

இதனால் கன்னாட் பிளேஸ் நடைபாதைகள் அனைத்தும் விதவிதமான கற்கள் பதிக்கப்பட்டு வித்தியாசமான தோற்றத்துடன் விளங்குகிறது.

 


Page 62 of 160