Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

அரியலூரை அழகுபடுத்த தீவிரம் நகரில் போஸ்டர் ஒட்ட தடை வாகன நிறுத்த இடம் அறிவிப்பு

Print PDF

தினகரன் 06.08.2010

அரியலூரை அழகுபடுத்த தீவிரம் நகரில் போஸ்டர் ஒட்ட தடை வாகன நிறுத்த இடம் அறிவிப்பு

அரியலூர், ஆக. 6: அரிய லூரை அழகுபடுத்த நகரில் போஸ்டர் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்த இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் கலெக்டர் ஆபிரகாம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

அரியலூர் நகராட்சியை அழகுபடுத்தவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. நகருக்குள் சுவர் விளம்பரம் செய்வதோ, தனி நபர் கண்ணீர் அஞ்சலி, வணிகம் போன்ற போஸ்டர்களை அரசு மற்றும் தனி யார் கட்டடங்களில் ஒட்ட வோ கூடாது. போக்குவரத்திற்கு இடையூறாக சாலை களில் இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த கூடாது. அவை நிறுத்த இட ங்கள் அறிவிக்கப்பட்டுள் ளன.

அதன்படி வரும் 15ம் தேதிக்கு பின் அரியலூர் பஸ்நிலையம் எதிரே அண்ணா சிலை&தேரடி வரை எம்எல்ஏ அலுவலகம் முன், தேரடி&கண்ணன் ஜவுளி ஸ்டோர் வரை சாம்பசிவம் பிள்ளை தெரு, கண்ணன் ஜவுளி ஸ்டோர்&சத்திரம் பஸ் நிலையம் வரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன், சத்திரம்&மாதாக்கோயில் வரை நடராஜா தியேட்டர் முன் மற்றும் ஆயிரங்கால்மண்டபம், மாதாக்கோயில்&நிர்மலா பெண்கள் பள்ளி வரை காமராஜர் திடல் வலதுபுறம், சத்திரம்& சுப்பிரமணியபுரம் கோயில் வரை பெரம்பலூர் சாலை ராமசாமி தெரு இடது புறம், சுப்பிரமணிய சுவாமி கோயில்&அரசு மருத்துவமனை வரை அரசு மருத்துவமனை முன், அரியலூர் தினசரி மார்க்கெட்டிற்கு செல்பவர்கள் திரவுபதி அம்மன்கோயில் வடபுறம், சின்னக்கடைத்தெரு செல்வோர் ஆண்டியப்பர் சந்து தெரு, கைலாசநாதர் தெரு செல்பவர்கள் தேரடி மேற்கு மற்றும் வடபுறம் மட்டுமே இரு சக்கர வாகனங்களை நிறுத்தவேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் ஆபிரகாம் தெரிவித்துள் ளார்.

 

நெல்லை மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் ரூ.200 கோடி திட்டப்பணிகளை துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்

Print PDF

தினகரன் 06.08.2010

நெல்லை மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் ரூ.200 கோடி திட்டப்பணிகளை துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்

நெல்லை, ஆக. 6: நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் ரூ.200 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். வண்ணார்பேட்டையில் ரூ.16.40 கோடி மதிப்ப¤ல் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும் இன்று காலை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

நெல்லை மாவட்டத்தில் அரசு த¤ட்டப் பணிகள் துவக்க விழா, அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்காக துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று நெல்லை வந்தார். சாரதா கல்லூரி அருகே மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

40 ஆயிரம் பேருக்கு உதவி

நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் துணை முதல்வர் பங்கேற்கும் அரசு விழாக்களிலும் ரூ.78.80 கோடி செலவில் நிறைவடைந்த 447 அரசு கட்டிடங்களை திறந்து வைத்து, ரூ.97.68 கோடி மதிப்பிலான 123 பணிகளுக்கு துணை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.26.22 கோடியில் 40 ஆயிரத்து 161 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மொத்தம் ரூ.202.69 கோடி மதிப்பிலான பணிகளை துவக்கி வைக்கிறார்.

வண்ணார்பேட்டை மேம்பாலம் இன¢று திறப்பு

நெல்லை மாவட்டத்தில் அரசு த¤ட்டப் பணிகள் துவக்க விழா, அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்காக துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று நெல்லை வந்தார். சாரதா கல்லூரி அருகே மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நெல்லை வண்ணார்பேட்டை புறவழிச்சாலையில் ரூ.16.40 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை துணை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு திறந்து வைக்கிறார். பின¢னர் டக்கரம்மாள்புரத்தில் அம்பை. ஆறுமுகம் கட்டியுள்ள புதிய இல்லத்தை திறந்து வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து வீரவநல்லூரில் ரூ.3 கோடியில் மத்திய அமைச்சர் நெப்போலியன் கட்டியுள்ள மயோபதிதசைச்சிதைவு சிகிச்சை மையத்தையும், பின்னர் கல்லிடைக்குறிச்சி பஸ் ஸ்டாண்டையும் திறந்து வைக்கும் துணை முதல்வர், அந்த பகுதியில் திமுக ஏற்பாடு செய்துள்ள கொடியேற்று விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

காலை 10 மணிக்கு அம்பாசமுத்திரம் தீர்த்தபத¤ அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் அரசு விழாவில் ரூ.25 கோடியில் அமைக்கப்படும் நெல்லை குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டி, வி.கே.புரம், மணிமுத்தாறு குடிநீர்த் திட்டப் பணிகளை துவக்கி வைத்து 2 ஆயிரம் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குகிறார். விழாவில் ரூ.123.37 கோடி மதிப்பிலான பணிகளை துவக்கி வைக்கிறார்.

மாலை 4.30 மணிக்கு கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள¢ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் ரூ.21 கோடியில் கடையநல்லூர் குடிநீர் அபிவிருத்தி திட்டம், ரூ.50 லட்சத்தில் வாஞ்சிநாதன் மணிமண்டபம், அச்சன்புதூரில் 110 கே.வி., துணை மின்நிலையம் ஆகிய பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில் ரூ.60.79 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்கிறார். இரவு குற்றாலத்தில் தங்குகிறார்.

துணை முதல்வரின் நெல்லை வருகையை முன்னிட்டு நெல்லை முழு வதும் திமுக கொடிகளும், அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. வண்ணார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலம் சோடியம் விளக்குகளாலும், சீரியல் தோரணங்களிலும் ஜொலிக்கிறது.

 

செங்கோட்டையில் புதிய கட்டடங்கள், பார்க் வசதி

Print PDF

தினமலர் 06.08.2010

செங்கோட்டையில் புதிய கட்டடங்கள், பார்க் வசதி

தென்காசி: செங்கோட்டையில் 1 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள், பார்க் திறப்பு விழா மற்றும் 50 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று (6ம் தேதி) நடக்கிறது.செங்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான முத்துசாமி பூங்கா உள்ளது. இப்பூங்காவை சீரமைத்து மக்களுக்கு பயன்படும் வகையில் மாற்ற வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து அரசு இப்பூங்காவை சீரமைக்க 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. சிறுவர், சிறுமியர் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் பூங்கா சீரமைக்கப்பட்டது. ஒட்டகசிவிங்கி, மான், புலி, அன்னப்பறவை போன்றவற்றின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செயற்கை நீருற்று, இரவில் ஜொலிக்கும் வண்ண மின் விளக்குகள், சிறுவர், சிறுமியர் விளையாடும் ஊஞ்சல், சறுக்கு போன்றவையும், பூங்காவை சுற்றி பார்க்க நடைபாதை மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் பகுதியில் புல்தரை அமைப்பதற்காக நகராட்சி நிர்வாகம் தனியாக 3 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பூங்காவை கடையநல்லூரில் இன்று (6ம் தேதி) நடக்கும் விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.செங்கோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் 1 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் மகப்பேறு வார்டு உள்ளிட்ட கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றையும் துணை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.இந்திய சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு செங்கோட்டையில் நடுக்கல் உள்ளது. அவருக்கு மணி மண்டபம் கட்ட காமராஜர் முதல்வராக இருந்த போது அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மணி மண்டபம் கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு சட்டசபையில் பேசிய முதல்வர் கருணாநிதி வீரவாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.இதற்கான இடம் செங்கோட்டை நகராட்சி முத்துசாமி பூங்காவில் தேர்வு செய்யப்பட்டது. இங்கு 50 லட்சம் ரூபாய் செலவில் மணி மண்டபம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல்லை துணை முதல்வர் நாட்டுகிறார்.

 


Page 64 of 160