Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

ஆக. 6, 7ல் துணை முதல்வர் துவக்கி வைக்கிறார் நெல்லை மாவட்டத்தில் ரூ.200 கோடி திட்டப் பணிகள்

Print PDF

தினகரன் 04.08.2010

ஆக. 6, 7ல் துணை முதல்வர் துவக்கி வைக்கிறார் நெல்லை மாவட்டத்தில் ரூ.200 கோடி திட்டப் பணிகள்

நெல்லை, ஆக. 4: நெல்லை மாவட்டத்தில் ஆக.6, 7 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள் ளும் துணை முதல்வர் மு.. ஸ்டாலின் ரூ.200 கோடி மதிப்பிலான திட்டப் பணி களை துவக்கி வைக்கிறார்.

நெல்லை மாவட்டத்தில் அரசு த¤ட்டப் பணிகளை துவக்கி வைக்க துணை முதல்வர் ஸ்டாலின் நாளை நெல்லை வருகிறார். தூத்துக் குடியில் இருந்து வரும் அவ ருக்கு சாரதா கல்லூரி அரு கே மாவட்ட திமுக செய லாளர் கருப்பசாமி பாண்டி யன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படு கிறது. பின்னர் ஆக.6, 7ம் தேதிகளில் அரசு விழாக் களில் பங்கேற்கிறார்.

இதுகுறித்து நெல்லை கலெக்டர் ஜெயராமன் நிருபர்களிடம் கூற¤ய தாவது:

நெல்லை வண்ணார் பேட்டை புதிய மேம்பாலத் தை ஆக.6¢ துணை முதல் வர் திறந்து வைக்கிறார். பின் னர் அம்பையில் நடக்கும் விழாவில் ரூ.25 கோடியில் கட்டப்பட உள்ள குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். வி.கே.புரம், மணிமுத்தாறு குடிநீர்த் திட்டப் பணிகளை துவக்கி வைத்து 2 ஆயிரம் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குகிறார்.

இந்த விழாவில் அரசு சார்பில் நிறைவேற்றப் பட் டுள்ள ரூ.47.89 கோடி மதிப் பிலான 354 திட்டங்களை துணை முதல்வர் துவக்கி வைக்கிறார். ரூ.55.50 கோடி மதிப்பிலான 40 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி 34 ஆயிரத்து 87 பேருக்கு ரூ.19.98 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்த விழாவில் மட்டும் ரூ.123.37 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் துவக்கி வைக்கிறார்.

அன்று மாலை கடைய நல்லூரில் நடைபெறும் விழாவில் ரூ.21 கோடியில் கடையநல்லூர் குடிநீர் அபிவிருத்தி திட்டம், ரூ.50 லட்சத்தில் வாஞ்சிநாதன் மணிமண்டபம், அச்சன் புதூரில் 110 கே.வி., துணை மின்நிலையம் ஆகிய பணிகளை துவக்கி வைக்கி றார்.

இதில் ரூ.39.22 கோடி மதிப்பிலான 73 பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் துணை முதல்வர், செங்கோட்டை, தென்காசி அரசு மருத்துவ மனை கூடுதல் கட்டிடங்கள் உட்பட முடிக்கப்பட்ட ரூ.20.66 கோடி மதிப்பிலான 66 பணிகளை திறந்து வைத்து ஆயிரத்து 654 பேருக்கு 90 லட்சம் மதிப்பில் மகப்பேறு உதவித்தொகை வழங்குகிறார். இந்த விழா வில் ரூ.60.79 கோடி மதிப் பிலான புதிய திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

7ம் தேதி காலை சங்கரன்கோவில் அருகே அரியநாயகிபுரத்தில் ரூ.2.55 கோடியில் சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கு நடக்கும் அரசு விழாவில் ரூ.1.68 கோடியில் கட்டப்பட்ட தாலுகா அலு வலகம் உட்பட ரூ.10.24 கோடி மதிப்பிலான 27 பணிகளை திறந்து வைக் கிறார். ரூ.2.95 கோடியில் ஆதிதிராவிடர் விடுதி, அரசு பள்ளி கூடுதல் கட்டிடங்கள் உட்பட 10 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் 4 ஆயிரத்து 420 பேருக்கு ரூ.5.34 கோடி மதிப்ப¤லான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படு கிறது. இந்த விழாவில் ரூ.18.53 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

இரண்டு நாள் விழாக் களிலும் ரூ.78.80 கோடி செலவில் நிறைவடைந்த 447 அரசு கட்டிடங்களை திறந்து வைத்து, ரூ.97.68 கோடி மதிப்பிலான 123 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.26.22 கோடியில் 40 ஆயிரத்து 161 பேருக்கு நலத்திட்ட உதவி களை வழங்குகிறார். மொத் தம் ரூ.202. 69 கோடி மதிப் பிலான பணிகளை துவக்கி வைக்கிறார்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

 

தினகரன் செய்தி எதிரொலி தி.மலை பிள்ளைக்குளம் ரூ 5 லட்சத்தில் சீரமைப்பு

Print PDF

தினகரன் 04.08.2010

தினகரன் செய்தி எதிரொலி தி.மலை பிள்ளைக்குளம் ரூ 5 லட்சத்தில் சீரமைப்பு

திருவண்ணாமலை,ஆக.4: தினகரன் செய்தி எதிரொலியாக திருவண்ணாமலை பிள்ளைக்குளம் ரூ5 லட்சத்தில் சீரமைக்கப்பட உள்ளது என்று நகராட்சி தலைவர் இரா.திருமகன் தெரிவித்துள்ளார்.

தி.மலை& செங்கம் சாலையில் பிள்ளைக்குளம் உள்ளது. நகராட்சி சார்பில் இந்த பிள்ளைக்குளத்தை முன்பு ரூ6 லட்சத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்றது. பின்னர் அப்பணியை அப்படியே விட்டு விட்டனர். இந்த பிள்ளைக்குளம் தற்போது குப்பையும், கூளமுமாக காணப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் இந்த பிள்ளைக்குளத்தை சீரமைத்து புதுப்பொலிவு பெறச் செய்ய வேண்டும் என கடந்த மாதம் 26ம் தேதி தினகரனில்விரிவாக செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இப்போது இதில் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி தலைவர் இரா.திருமகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிள்ளைக்குளத்தில் உள்ள குப்பைகள் இன்னும் இரு தினங்களுக்குள் அகற்றப்படும். மேலும் இக்குளம் சுற்றுலா வளர்ச்சி துறை நிதியின் கீழ் ரூ5 லட்சத்தில் அழகுபடுத்தப்படும். மேற்படி பணி விரைவில் செய்து முடிக்கப்படும் என்று கூறி உள்ளார்.

Last Updated on Wednesday, 04 August 2010 11:05
 

நெல்லை மாவட்டத்தில் ரூ.202.69 கோடியில் திட்டப் பணிகள்

Print PDF

தினமலர் 04.08.2010

நெல்லை மாவட்டத்தில் ரூ.202.69 கோடியில் திட்டப் பணிகள்

திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் துணை முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்கிறார். 202.69 கோடி மதிப்பில் திட்டங்கள் துவக்க விழா, திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் நெல்லை மாவட்டத்திற்கு வரும் 6ம் தேதி வருகை தருகிறார். அன்று காலை 10 மணிக்கு அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் வண்ணார்பேட்டை புதிய மேம்பாலம், மணிமுத்தாறு, விக்கிரமசிங்கபுரம் குடிநீர் திட்டங்கள் துவக்க விழா, 25 கோடியில் கட்டப்படும் பாளை குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழா, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் விழா நடக்கிறது.

இங்கு 47.89 கோடி மதிப்பில் 354 திட்டங்கள் திறக்கப்பட்டு 55.50 கோடி மதிப்பில் 40 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. 34 ஆயிரத்து 87 பேருக்கு 19.98 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மொத்தம் 123.37 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கியும், புதிய திட்டங்களை துவக்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளையும் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

கடையநல்லூர்:>அன்று மாலை 4.30 மணிக்கு கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 21.41 கோடி மதிப்பில் கடையநல்லூர் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள், வளர்ச்சி திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, 50 லட்சத்தில் வாஞ்சிநாதன் மணிமண்டப பணிகள் துவக்க விழா, அச்சன்புதூரில் 110 கேவி புதிய மின் துணை மின் நிலையம், 4.60 கோடியில் தென்காசி, செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதல் கட்டடங்கள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.

இதில் 39.22 கோடி மதிப்பில் 73 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 20.66 கோடியில் 66 திட்டங்களை துவக்கி வைத்தும், 1,654 பேருக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி தொகை உட்பட மொத்தம் 60.79 கோடி திட்ட விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.சங்கரன்கோவில்:வரும் 7ம் தேதி காலை 10 மணிக்கு சங்கரன்கோவில் களப்பாகுளத்தில் 2.50 கோடி மதிப்பில் மாவட்டத்தில் 8வது அரியநாயகிபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழா, 1.68 கோடியில் சங்கரன்கோவில் தாலுகா அலுவலக புதிய கட்டட திறப்பு விழா, புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.50 லட்சம் மதிப்பில் குருவிகுளம் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி, 1.08 கோடியில் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறை கட்டடம் மற்றும் ஆய்வகம் ஆகியவற்றிற்கும் அடிக்கல் நாட்டப்படுகிறது.

இதில் 2.95 கோடியில் 10 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 10.24 கோடியில் 27 திட்டங்களை துவக்கி வைத்தும், 4,420 பேருக்கு 5.34 கோடியில் நலத்திட்ட உதவிகள் உட்பட மொத்தம் 18.53 கோடி திட்டங்களை துணை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 78.80 கோடியில் 447 திட்டப் பணிகள் துவக்கப்படுகிறது. 97.68 கோடி மதிப்பில் 123 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 40 ஆயிரத்து 161 பேருக்கு 26.22 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மொத்தம் 202.69 கோடியில் திட்டங்கள் துவக்க விழா, புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.மேலும், கடையநல்லூரில் சிறுபான்மையினர் மாணவர் விடுதி கட்டவும், அம்பையில் 110 கே.வி துணை மின்நிலையம் அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.

 


Page 66 of 160