Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

95 ஏக்கரில் பசுமைப் பூங்கா: மேயர் தகவல்

Print PDF

தினமணி 27.07.2010

95 ஏக்கரில் பசுமைப் பூங்கா: மேயர் தகவல்

பெருங்குடியில் மேற்கொள்ளப்பட இருக்கும் திடக் கழிவு மேலாண்மை திட்டத்துக்கான மாதிரி வரைபடத்தை பார்வையிடுகிறார் சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன்

சென்னை, ஜூலை 26: சென்னை பெருங்குடியில் 95 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேயர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:

பெருங்குடியில் நாள்தோறும் 1,400 டன் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றமும், கொசுத் தொல்லையும் அதிகமாகி சுகாதாரச் சீர்கேடு இப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இதனைப் போக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பணிகள் இன்னும் பத்து நாள்களில் முழு வீச்சில் தொடங்க இருக்கின்றன.

இந்த திட்டத்தின் மூலம், குப்பைகளை களைய அறிவியல் முறை மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் ரூ. 69.50 கோடி செலவில் வடிவமைத்தல், கட்டுதல், பராமரித்தல் மற்றும் ஒப்படைத்தல் ஆகிய நிலைகளில் பணிகள் நடைபெறும். குப்பைக் கழிவுகளை பிரித்தெடுக்கும் போது சுகாதாரக் கேடு உண்டாகாமல் இருக்க மறுசுழற்சி, எரிகட்டிகள் தயாரித்தல் ஆகிய முறைகள் கையாளப்பட உள்ளன.

இந்த திட்டத்துக்கு 30 ஏக்கர் நிலம் மட்டும் பயன்படுத்தப்பட உள்ளதால் மீதமுள்ள 95 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமை நிறைந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்கா இந்தியாவிலேயே பெரிய பூங்காவாக விளங்கும் என்றார் அவர்.

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, மாநகராட்சி கவுன்சில் எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, துணை மேயர் ஆர். சத்தியபாமா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் ரூ.92 லட்சத்தில் வளர்ச்சிப்பணி

Print PDF

தினகரன் 26.07.2010

நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் ரூ.92 லட்சத்தில் வளர்ச்சிப்பணி

பழநி, ஜுலை 26: நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் ரூ.92 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

பழநி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சியின் கூட்டம் அதன் தலைவர் முஸ்தபா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் முருகேசன், துணைத்தலைவர் முருகேசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பிற்பட்டோர் மானிய நிதி ரூ.12 லட்சத்தில் சிமெண்ட் தளம், பாலம் கட் டுதல், வடிகால் அமைத்தல் பணிகள், பொதுநிதி ரூ.17 லட்சத்தில் மின் மோட்டார், சின்டெக்ஸ் தொட்டி, குடிநீர் குழாய், ஆழ்குழாய் அமைத்தல், மினி பவர் பம்ப் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

பொதுநிதி ரூ.10 லட்சம், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதி ரூ.10 லட்சம் மூலம் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதி ரூ.50 லட்சத்தில் வணிக வளாகம் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் என ரூ.92 லட்சத்தில் திட்டங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.

 

ஒத்துழையுங்கள்;​ உறுதியளிக்கிறேன்:​ ஆட்சியர்

Print PDF

தினமணி 26.07.2010

ஒத்துழையுங்கள்;​ உறுதியளிக்கிறேன்:​ ஆட்சியர்

புதுக்கோட்டை,​​ ஜூலை 25:​ புதுக்கோட்டை தெற்கு சந்தைப்பேட்டை தொண்டைமான் நகர் விரிவாக்கப் பகுதியில் கடந்த பல தலைமுறைகளாக வசித்துவரும் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களிடையே மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.​ அவர்கள் குடியிருக்கும் -​ அரசுக்கு சொந்தமான இடத்தைக் காலி செய்து தரும் பட்சத்தில் உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து தருவதாக அவர் உறுதியளித்தார்.

​ ​ ​ புதுக்கோட்டை சந்தைப்பேட்டை தென்பகுதியில் உள்ள தொண்டைமான் நகர் விரிவாக்கப் பகுதியில்,​​ அருந்ததியர் மற்றும் காட்டுநாயக்கன் இனத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் குடும்பங்கள் வீடுகள் கட்டி வசித்துவருகின்றனர்.

​ ​ ​ இந்நிலையில,​​ கடந்த 1995-ல் அப்போது மாநில அமைச்சராக இருந்த எஸ்.​ ரகுபதி தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில்,​​ ​ 216 பேருக்கு நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் மனை வரி தோராயப்பட்டா வழங்கப்பட்டது. ​ ​ ஆனால்,​​ ​ சரிவர விவரம் தெரியாத காரணத்தால்,​​ அதை வீட்டு மனைப்பட்டாவாக வகை மாற்ற அனைவரும் தவறிவிட்டதால்,​​ வருவாய்த் துறை கணக்கில் ஏறாமல் போனது.

​ ​ இதனால்,​​ தற்போது ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இந்த இடத்தைக் காலிசெய்ய வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முயற்சிகள் தொடங்கின. ​ ​ ஆனால்,​​ இப்பகுதி மக்கள் அந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்,​​ சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.​ அதைத் தொடர்ந்து சந்தை சீரமைப்புக் குழு இந்தப் பகுதியை மட்டும் காலி செய்வதைத் தவிர்க்கலாம் என முடிவெடுத்தது.

​ ​ ​ ​ இதைத் தொடர்ந்து,​​ மாவட்ட ஆட்சியர் அப்பகுதிக்கு நேரில் சென்று மக்களிடம் பேசியது:

​ ​ ""அரசு சட்டவிதிகளின்படி,​​ இந்தக் குடியிருப்பை காலிசெய்ய நீதிமன்ற ஆணை பெறப்பட்டிருந்தாலும்,​​ மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் இப்பகுதியிலேயே வசிக்க வேண்டும் என்பதால்,​​ காலிசெய்யும் நடவடிக்கையை எடுக்கவில்லை.

​ ​ இந்தப் பிரச்னையில்,​​ ஆர்ப்பாட்டமின்றி அமைதியாகத் தீர்வு காண வேண்டும் என்பதே எனது எண்ணம்.​

எனவே,​​ குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மாதாந்திர சுலபத் தவணையில் வீடுகள் கட்டித் தரவும் மேலும் சமுதாயக் கூடம்,​​ தொடக்கப் பள்ளி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கித் தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.​ இதற்கு அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும்'' என்றார் அவர்.

​ ஆட்சியருடன் தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்தச் சங்க மாநிலப் பொருளர் ஏ.​ சின்னையா,​​ மண்டலத் தலைவர் என்.​ தீபாவளிராஜ்,​​ மண்டலச் செயலர் பொன்பாலமுத்து,​​ மாவட்டத் தலைவர் ஏ.​ சிவகுமார்,​​ ஆலோசனைக்குழுத்தலைவர் சரவணன்,​​ வட்டாட்சியர் என்.​ ஜானகி,​​ வேளாண் வணிக துணை இயக்குநர் தி.​ தங்கவேலு,​​ மாவட்ட ஊராட்சித் தலைவர் சி.​ முத்துச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்

 


Page 71 of 160