Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

வளர்ச்சி பணிக்கு ரூ.ஒரு கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 26.07.2010

வளர்ச்சி பணிக்கு ரூ.ஒரு கோடி ஒதுக்கீடு

திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி பொது நிதியில் இருந்து வளர்ச்சி பணிகளுக்காக ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம்,நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி கூட்டம் தலைவர் மணி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், புதிதாக ரோடு போடுதல், வடிகால் வசதி, கழிப்பிடம் கட்டுதல், குடிநீர் குழாய் விஸ்தரிப்பு மற்றும் பகிர்மானம் செய்தல், குடிநீர் கசிவுகளை சரி செய்தல், ஆழ்கிணறுகளுக்கு புதிய மோட்டார் உள்ளிட்ட பணிகளுக்காக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.தார் தளம் அமைக்க 20 லட்சம் ரூபாய்; மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட எட்டு லட்சம் ரூபாய்; மழைநீர் வடிகால் கட்ட 9.5 லட்சம்; வேலம்பாளையம் மயானம் அருகே பொதுக்கழிப்பிடம் கட்ட 10 லட்சம்; அனைத்து வார்டுகளிலும் குடிநீர் குழாய் கசிவுகளை சரி செய்ய 14 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.புதிதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி கட்டடம் முன்பாக, மழைநீர் கூண்டு மற்றும் முகப்பு வேலைகளுக்கு 4.75 லட்சம்; நுழைவாயில் மற்றும் சுற்றுச்சுவர் கட்ட 10 லட்சம்; நகர்மன்ற கூட்ட அறைக்கு உட்புற வசதி செய்ய நான்கு லட்சம். முன்புறம் மற்றும் மேல்புறம் மலர்ச்செடிகள் அமைக்க 36 ஆயிரம்; புதிய பெயர் பலகைக்கு 40 ஆயிரம்; மின் இணைப்பு வழங்க ஒரு லட்சம் என, புது நகராட்சி கட்டடத்துக்கு 43.51 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

கூவம் நதிக்கு ஐந்து ஆண்டுகளில் விமோசனம்

Print PDF

தினமலர் 23.07.2010

கூவம் நதிக்கு ஐந்து ஆண்டுகளில் விமோசனம்

சென்னை : ""கூவம் நதி அடுத்த ஐந்தாண்டுக்குள் சுத்தம் செய்யப்படும்,'' என, தமிழக பொதுப்பணித் துறை செயலர் ராமசுந்தரம் பேசினார்.அண்ணா பல்கலையின் தொலை உணர்வு மையம் சார்பில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அரசுத் துறை அதிகாரிகளுக்கான பயிலரங்கம் நேற்று நடந்தது.

சென்னை நகரில் மேடு, பள்ளமுள்ள பகுதிகள், வெள்ள அபாய பகுதிகளை துல்லியமாக காட்டும், வானிலிருந்து லேசர் ஒளிக்கதிர்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்பயிலரங்கில் முக்கிய பங்கு வகித்தன.பயிரலங்கை துவக்கி வைத்து ராமசுந்தரம் பேசியதாவது:நகரமயமாதல், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, முறையான கழிவுநீர் வசதியில்லாதது உள்ளிட்ட காரணங்களால், பருவமழைக் காலங்களில் வெள்ளம் ஏற்படுகிறது. இதனால் சென்னை நகரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் 1,400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு ஆண்டுகளில், சென்னையில் கழிவுநீர் வசதிகளை மேம்படுத்துவது, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர் வழி தடங்களை புதுப்பிப்பது மற்றும் புதிய கால்வாய்களை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.அடுத்த ஐந்தாண்டிற்குள், கூவம் நதி முற்றிலும் சுத்தம் செய்யப்படும். காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ராமசுந்தரம் பேசினார்.தமிழகத்தின் நில அமைப்புகள் மற்றும் அவற்றின் தன்மைகளை விளக்கும் நூலை, ஐதராபாத் தேசிய தொலை உணர்வு மைய துணை இயக்குனர் பேகரா வெளியிட, ராமசுந்தரம் பெற்றுக் கொண்டார்.பயிலரங்கில், அண்ணா பல்கலை தொலை உணர்வு மைய இயக்குனர் ராமலிங்கம், பதிவாளர் சண்முகவேல்,பொதுப்பணித் துறை, சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 23 July 2010 05:50
 

பூங்கா புதுப்பிக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமலர் 21.07.2010

பூங்கா புதுப்பிக்கும் பணி துவக்கம்

மைசூர், ஜூலை 21: மைசூர் துணைநகர பஸ்நிலையத்திற்கு அருகேயுள்ள பீப்பிள்ஸ் பூங்காவை புதுப்பிக்கும் பணியை மைசூர் மாநகராட்சி மேற்கொண்டது.

மைசூர் துணைநகர பஸ்நிலையத்திற்கு அருகேயுள்ள பீப்பிள்ஸ் பூங்கா குப்பைக்கூளங்களால் எப்போதும் அலங்கோலமாக காட்சியளித்துவந்தது. இதனை சுத்தப்படுத்தி புதுப்பிக்க மைசூர் மாநகராட்சி மேயர் சந்தேஷ்சுவாமி முயற்சி மேற்கொண்டுள்ளார். அதன்படி, 150 துப்புரவுதொழிலாளர்கள், இரண்டு எஸ்கேவேட்டர்கள், லெவல்லர்கள், டிப்பர்களுடன் பூங்காவை சுத்தப்படுத்தி புதுப்பிக்கும் பணி நடந்தது. பூங்காவில் நிறைந்திருந்த தேவையற்ற செடிகள், களைகள், குப்பைக்கூளங்கள் அகற்றப்பட்டன. மேயர் சந்தேஷ்சுவாமி, துணை கலெக்டர் விஜயா, மாநகராட்சி சுகாதார அதிகாரி நாகராஜ், சுற்றுச்சூழல் பொறியாளர் ரேகா, முன்னாள் துணைமேயர் சாரதம்மா ஆகியோர் மேற்பார்வையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மேயர் சந்தேஷ்சுவாமி கூறியதாவது: பெங்களூரில் உள்ள லால்பாக் போல பீப்பிள்ஸ் பார்க்கையும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இப்பூங்காவை பாரம்பரிய பூங்காவாக மேம்படுத்தப்படும். இதில் பாறைப்பூங்காவும் இடம்பெற்றிருக்கும். பூங்கா வளாகத்தில் மத்திய நூலகமும் அமைக்கப்படும். உச்சநீதிமன்ற ஆணைக்கேற்ப, பூங்கா நடுவே சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கோயில் மற்றும் மசூதி இடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 72 of 160