Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

கோவையில் தயார் நிலையில் 40 நவீன பூங்காக்கள்

Print PDF

தினமணி 18.06.2010

கோவையில் தயார் நிலையில் 40 நவீன பூங்காக்கள்

கோவை, ஜூன் 17: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரில் உருவாக்கப்பட்ட 40 நவீன பூங்காக்கள் திறப்பு விழாவுக்காக தயார் நிலையில் உள்ளன.

பிற நகரங்களை ஒப்பிடும்போது தொழில் நகரமான கோவையில் பொழுதுபோக்கு அம்சங்கள் மிகவும் குறைவு. ..சி. பூங்காவைத் தவிர பெரிய அளவிலான பூங்காக்கள் ஏதும் கோவையில் இல்லை. இக்குறையைப் போக்கும் வகையில் கோவை மாநகராட்சி சார்பில் 40 நவீன பூங்காக்கள் உருவாக்க ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

மாநகராட்சிக்குச் சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடங்களில் (ரிசர்வ் சைட்) இப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பெங்களூர், ஹைதராபாத், புதுதில்லி உள்ளிட்ட நகரங்களில் இருப்பது போல நவீன முறையில் இப்பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள், முதியோர், இளம்வயதினர் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இப்பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. மனதை ரம்மியப்படுத்தும் புல்வெளிகள், செயற்கை நீரூற்றுகள், குழந்தைகளை குதூகலப்படுத்தும் சறுக்கு விளையாட்டு உபகரணங்கள், ஊஞ்சல் உள்ளிட்டவை அமைப்பட்டுள்ளன.

முதியோர் அமர்ந்து மனம்விட்டு பேசும் வகையில் பிரத்யேக இருக்கைகள், இளைஞர்கள், பெரியோர்களுக்காக நடைப்பயிற்சித் தளங்கள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இப் பூங்காக்களில் உள்ளன. இரவு நேரங்களில் கண்களை கவரும் வகையில் வண்ண விளக்குகளும் இப்பூங்காக்களில் பொருத்தப்பட்டுள்ளன.

அனைத்து புதிய பூங்காக்களுக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பூங்கா என பெயர் சூட்ட மாநகராட்சி மாமன்றத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு சில பூங்காக்களை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, மேயர் ஆர்.வெங்கடாசலம், துணைமேயர் நா.கார்த்திக் ஆகியோர் ஏற்கெனவே திறந்து வைத்துவிட்டனர்.

மற்ற பூங்காக்களின் பணிகளும் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளன. அனைத்து பூங்காக்களிலும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நினைவுப் பூங்கா எனப் பெயர் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது.

மகளிர் பூங்கா: சாய்பாபா காலனியில் (62-வது வார்டு) மகளிர் மட்டும் பயன்படுத்தும் வகையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நினைவு மகளிர் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இப் பூங்காவில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பெண்களுக்கான நடைபயிற்சி தளங்கள், யோகா பயிற்சி செய்ய தனி அரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

 

கூவம் சீரமைக்க காலம் நிர்ணயிக்க இயலாது சிங்கப்பூர் நிறுவனம் திட்டவட்டம்

Print PDF

தினமலர் 18.06.2010

கூவம் சீரமைக்க காலம் நிர்ணயிக்க இயலாது சிங்கப்பூர் நிறுவனம் திட்டவட்டம்

சென்னை:""கூவம் நதி அதிக கி.மீ., தூரம் கொண்டது என்பதால், அதை சீரமைப்பதற்கு கால நிர்ணயம் செய்ய இயலாது,'' என்று சிங்கப்பூர் குழுவினர் தெரிவித்தனர்.கூவம் நதியை சீரமைக்க, சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துக்கும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதனடிப்படையில், சீரமைப்பதற்கான திட்டம் தயாரிக்கும் முதல் கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இதுபற்றிய ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தலைமை செயலர் ஸ்ரீபதி, சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அல்போன்சஸ் சியா, சிங்கப்பூர் பொது உபயோக வாரியத்தின் பொது மேலாளர் ராஜிவ் தீட்சித், துணை தலைவர் வினோத் சிங், சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்தின் வெளியுறவு துறை அலுவலர் அன்னா நங் மற்றும் தமிழக நிதித்துறை செயலர் சண்முகம், மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்துக்கு பின், சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவன தலைமை செயல் அலுவலர் அல்போன்சஸ் சியா நிருபர்களிடம் கூறியதாவது:கூவம் சீரமைப்பு திட்டத்துக்கான முதல் கட்ட பணிகள் முடிந்துள்ளன. இரண்டாவது கட்ட பணிகள் விரைவில் துவக்கப்படும். இரண்டாம் கட்ட பணிக்கான திட்ட அறிக்கையை முடிவு செய்ய 12 மாதங்களாகும். அதன்பின் திட்டம் துவக்கப்பட்டு, கூவம் சீரமைக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கும், அரசுக்கும் உள்ளது.இத்திட்டம் எப்போது முடிவு பெறுமென கூற முடியாது. சிங்கப்பூரில் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த 10 முதல் 12 ஆண்டுகள் ஆனது. இங்கு கூவம் நதி அதிக கி.மீ., தூரம் கொண்டது. எனவே, பணியை முடிக்க கால நிர்ணயிக்க இயலாது.இவ்வாறு அல்போன்சஸ் சியா கூறினார்.

 

ரூ.4.95 கோடியில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி புதிய கட்டிடபணி 75 சதவீதம் முடிவடைந்தது

Print PDF

தினகரன் 17.06.2010

ரூ.4.95 கோடியில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி புதிய கட்டிடபணி 75 சதவீதம் முடிவடைந்தது

வேலூர், ஜூன் 17: மாநகராட்சிக்கு ரூ.4.95 கோடியில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி அலுவலக புதிய கட்டிட பணிகள் 75 சதவீதம் முடிவடைந்தது.

வேலூர் மாநகராட்சிக்கு கன்டோன்மென்ட் ரயில்நிலையம் அருகே புதிய அலுவலகத்துக்கான கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.4 கோடியே 95 லட்சம் மதிப்பில் வாகனங்கள் நிறுத்த கீழ் தளம் மற்றும் தரைதளம், முதல்மாடி, 2வது மாடி என பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

இதில் 75 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. கட்டிடத்துக்கான கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்தது. இப்போது பார்க் மற்றும் கட்டிடத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

லிப்ட் பொருத்தும் பணி, குடிநீர் இணைப்பு, மின்சார வசதி, மாமன்ற கூடத்துக்கு தேவையான வசதிகள் செய்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. கீழ் தளத்தில் 20 கார்கள் மற்றும் பைக்குகள், சைக்கிள்கள் என 200 வாகனங்கள் வரை நிறுத்தும் வசதியுடன் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய அலுவலக கட்டுமான பணிகளை நகராட்சிகளின் செயலாளர் நிரஞ்சன்மார்டி ஓரிரு நாட்களில் பார்வையிட உள்ளார். எனவே பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

பணிகள் முடிவடைந்ததும் துணைமுதல்வர் மு..ஸ்டாலினை வைத்து புதிய அலுவலகத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

 


Page 77 of 160