Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மழைநீர் சேமிப்பு பூங்கா அடுத்த மாதம் திறப்பு

Print PDF

தினகரன் 11.06.2010

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மழைநீர் சேமிப்பு பூங்கா அடுத்த மாதம் திறப்பு

பெங்களூர், ஜூன் 11: பெங்களூரில் உருவாகி வரும் மழைநீர் சேமிப்பு பூங்காவை ஜூலையில் திறக்க பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால்வாரியம் திட்டமிட்டுள்ளது.

பெங்களூர் குடிநீர்மற்றும் வடிகால்வாரிய சட்டத்தில் திருத்தம் செய்த பிறகு, பெங்களூரில் புதிதாக கட்டப்படும் 30க்கு40 அடி, 60க்கு40 அடி பரப்புள்ள பழைய வீடுகளில் மழைநீர்சேமிப்பு கட்டமைப்புகள் கட்டாய மாக்கப்பட்டுள்ளன. இச்சட்டம் கடந்தாண்டு ஆக.27 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒருவேளை மழைநீர் சேமிப்புகட்டமைப்பை நிறுவ தவறினால் குடிநீர் மற்றும் வடிகால்குழாய் இணைப்பை துண்டிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மழைநீர் சேமிப்புசேமிப்பு கட்டமைப்புகள் பற்றி பொதுமக்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் இருப்பதால், இது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பெங்களூர் ஜெயநகரில் 48 ஆயிரம் சதுர அடியில், மழைநீர்சேமிப்பு பூங்காவை அமைக்க பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால்வாரியம் திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலுடன் கூட்டாக செயல்படுத் தப்படும் இத்திட்டத்திற்கு ரூ.2 கோடி செலவிடப்ப டுகிறது. இதில் 26 மழைநீர் சேமிப்புமாதிரிகள் பொது மக்களின் காட்சிக்குநிரந் தரமாக வைக்கப்பட்டிருக் கும். மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு குறித்து தகவல் அளிப்பதற்காக தகவல் மையமும் இங்கு அமையும். மழைநீர் சேமிப்பு தொடர்பாக ஒலி,ஒளிகாட்சியும் திரையிடப்படும். மழைநீர் சேமிப்பு தவிர, கழிவுநீர் சுத்திகரிப்புநிலையம் பற்றியும் மாதிரி வைக்கப்பட்டிருக்கும். மறுசுழற்சிமுறையில் தண்ணீரை பயன்படுத்த பொதுமக்களை ஊக்கப்படுத்துவதற்காக இது நிறுவப்படுகிறது. பூங்காவில் உள்ள அரங்கில் மழைநீர் சேமிப்பு, தண்ணீர் பாதுகாப்பு தொடர்பாக கருத்துரைகள் வழங்கப்படும். பூங்காவின் கட்டுமானப்ப ணிகள் 2009 செப்டம்பரில் துவங்கியது. 2010 ஏப்ரல் இறுதியில் முடிக்க வேண்டிய கட்டுமானப்பணிகள், ஜூலை மாதத்தில்தான் முடிவடைவதாக வாரிய அதிகாரி தெரிவித்தார். ஜூலை இறுதியில் பூங்காவை திறக்க வாரியம் திட்டமிட்டுள்ளது .

 

டி.வி.எஸ். நகர் பூங்கா விரைவில் திறக்கப்படும்

Print PDF

தினமணி 11.06.2010

டி.வி.எஸ். நகர் பூங்கா விரைவில் திறக்கப்படும்

மதுரை, ஜூன் 10: மதுரை டி.வி.எஸ். நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை பணிகள் முடிந்ததும் மத்திய அமைச்சர் மு..அழகிரி திறந்து வைப்பார் என மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சியில் உள்ள டி.வி.எஸ் நகரில் மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு..அழகிரி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.45 லட்சம் மதிப்பில் புதிதாக பூங்கா அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. ஆணையர் அதை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் மத்திய அமைச்சர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பூங்காசிறப்பாக அமைப்பதற்கு பெங்களூரில் இருந்து செடிகள் மற்றும் புல்வெளிகள்தருவிக்கப்பட்டு அதன் மூலம் இந்தப் பூங்கா அமைக்கப்படுகிறது. மேலும், இப்பூங்காவில் செயற்கை நீருற்றுக்கள், நடைபாதை மேடைகள் , குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், வண்ண மின் விளக்குகள் உள்ளிட்ட பொழுது போக்கும் விதத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

பணிகள் முடிந்தவுடன் மத்திய அமைச்சர் மு..அழகிரியால் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், துணை ஆணையர் (தெற்கு) .தேவதாஸ், நிர்வாகப் பொறியாளர் சேதுராமலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

கூடலூரில் ரூ. 25 லட்சம் செலவில் செம்மொழி மாநாட்டுப் பூங்கா

Print PDF

தினமலர் 11.06.2010

கூடலூரில் ரூ. 25 லட்சம் செலவில் செம்மொழி மாநாட்டுப் பூங்கா

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் பேரூராட்சியில் 25 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பூங்கா திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.கூடலூர் பேரூராட்சி, கடந்த மார்ச் மாதம் 18 கோடி ரூபாய் மதிப்பு "ரிசர்வ் சைட்' களை மீட்டு, இடத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டது. ஒவ்வொரு லே- அவுட்டின் மொத்த பரப்பில் 10 சதவீதத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்காக ரிசர்வ் சைட்டாக ஒதுக்க வேண்டும். பல இடங்களில் ரிசர்வ் சைட் இருப்பதற்கான சுவடே இல்லை. இதனால், கூடலூர் பேரூராட்சியில் உள்ள ரிசர்வ் சைட்களை கண்டறிந்து, ணக்கிடும் பணியை பேரூராட்சி நிர்வாகம் துவக்கியது.இதில் ஒன்பதாவது வார்டு சுப்பையா நகரில் 30 சென்ட், இரண்டாவது வார்டு ஸ்ரீகணேஷ் நகரில் 27 சென்ட், ஏழாவது வார்டு நேரு நகரில் 40 சென்ட், எட்டாவது வார்டு சிந்து நகரில் 20 சென்ட், ஏழாவது வார்டு வனிதா நகர் தெற்கில் 18 சென்ட், வடக்கில் 17 சென்ட் ஆகிய இடங்களில் கம்பி வேலை அமைக்கப்பட்டது.

இதே போல பிரிக்கால் நகர், வெங்கடாசலபதி நகர், ஜெயவர்த்தனவேலு நகர், லட்சுமி கார்டன், தேவையம்பாளையம், வஞ்சிமா நகர், பேராசிரியர் காலனி, மாணிக்கவாசக நகர், கே.ஆர்.நகர், சந்திரமணி நகர், விவேகானந்தா நகர், புவனேஸ்வரி நகர், ரங்கநாயகி நகர், பி.என்டி காலனி உள்ளிட்ட 27 இடங்களில் உள்ள 952 சென்ட் 84 சதுர அடி ரிசர்வ் சைட்களில் கம்பி வேலி அமைக்கும் பணி நடந்துள்ளது. இதில், வஞ்சிமா நகரில் மீட்கப்பட்ட 67 சென்ட் ரிசர்வ் சைட்டில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுப் பூங்கா அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. தற்போது, பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

இது குறித்து கூடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் கல்யாண சுந்திரம், தலைவர் ரங்கசாமி கூறியதாவது:உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுப் பூங்கா 25 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. பரபரப்பான உலகில் மனதுக்கும், உடலுக்கும் அமைதி தரும் இடமாக இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நீருற்று, தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் சிலைகள், வெளிநாட்டினர் போன்ற சிலைகளுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் வசதி, பூங்காவுக்குள் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்ள வசதி, காடுகளின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ள காட்டுக்குள் விலங்குகள் நடமாடுவதைப் போல சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திறப்பு விழாவுக்கு பின், பொதுமக்கள் பூங்காவை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பூங்காவுக்குள் வரும் குழந்தைகளை கவர விளையாட்டு சாதனங்கள் உள்ளன. அவர்களை மகிழ்ச்சியில் ஈடுபடுத்த கோமாளி போல வேடமணிந்தவர்கள் பூங்காவுக்குள் நடமாடுவர். பூங்காவுக்கு சிறப்பு சேர்க்க பூங்கா நடுவே உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நினைவை போற்ற நான்கு அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 


Page 80 of 160