Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

தா.பேட்டை பேரூராட்சியில் ரூ.53 லட்சம் வளர்ச்சி பணி

Print PDF

தினகரன் 01.06.2010

தா.பேட்டை பேரூராட்சியில் ரூ.53 லட்சம் வளர்ச்சி பணி

தா.பேட்டை, ஜூன் 1: தா.பேட்டை பேரூராட்சி சாதாரண கூட்டம், கூட்ட மன்றத்தில் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் மயில்வாகணன் தலைமை வகித்தார். துணை தலைவர் ராஜலெட்சுமி கணேசன், நிர்வாக அலுவலர் இளவரசி முன்னிலை வகித்தனர்.

2010&11ம் ஆண்டுக்கான அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தா.பேட்டை புதிய பேருந்து நிலையம் முதல் பழைய மார்க்கெட் வரை ரூ.10 லட்சத்தில் புதிய தார்சாலை, 1வது வார்டு குரும்பர் தெருவில் ரூ.10 லட்சத்தில் சமுதாயக்கூடம், 5வது வார்டு செவந்தாம்பட்டியில் ரூ.6.55 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, வடமலைப்பட்டியில் ரூ.2.80 லட்சத்தில் சிமென்ட் சாலை, புதிய பஸ் நிலையத்தில் ரூ.10 லட்சத்தில் வணிக வளாகம் கட்டுதல் என ரூ.53.40 லட்சத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் குமார், பழனியப்பன், வசந்தா, மணிமேகலை பெரி யசாமி, சம்பூர்ணம், பிச்சு மணி, ராஜப்பா, ரமேஷ், ரமேஷ்பாபு பங்கேற்றனர்.

 

அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 53.80 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணி

Print PDF

தினகரன் 01.06.2010

அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 53.80 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணி

ஆரணி, ஜூன் 1: பின்தங்கிய மண்டல மானிய நிதி ரூ.53. 80 லட்சத்தில் அடிப்படை வசதிகள் செய்வது என்று ஆரணி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆரணி நகராட்சி மன்றக் கூட்டம் நேற்று அதன் தலைவர் சாந்தி லோகநாதன் தலைமையில் நடந்தது. இதில் ஆணையாளர் சசிகலா, துணைத் தலைவர் லட்சுமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ஆரணி நகராட்சி பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் நிவாரண திட்டத்தின்கீழ் குடிநீர் பிரச்னை தீர்க்க ரூ.10 லட்சத்தில் திட்டப்பணிகள் மேற்கொள்வது.

ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் உள்ள அருணாசலஈஸ்வரர் கோயில் தெருவில் இயங்கிய மகப்பேறு நிலையத்தை நகர ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றி அமைப்பது.

2009&2010ம் ஆண்டுக்கான பின்தங்கிய மண்டல மானிய நிதியில் இருந்து ரூ.53.80 லட்சத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது.

தற்போது ஆரணி பகுதியில் குடிநீர் பிரச்னையை சமாளிப்பதற்காக ஆற்காடு பாலாற்றில் கூடுதலாக புதிய கிணறு ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைப்பது.

ஆரணி நகராட்சி தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், தரைத்தள நீர்தேக்கத் தொட்டிகள், மோட்டார் அறைகள் மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த மேல்நிலைநீர் தேக்கத் தொட்டிகளை சீரமைப்பது.

ஆரணி நகராட்சி புதிய பஸ் நிலைய பின்புறம் காலியாக உள்ள இடத்தில் புதியதாக 73 படக் கடைகள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

 

சூறாவளியால் சேதம் 5 லட்சத்தில் 50 தெரு விளக்கு

Print PDF

தினகரன் 31.05.2010

சூறாவளியால் சேதம் 5 லட்சத்தில் 50 தெரு விளக்கு

ஜீயபுரம், மே 31: சூறாவளிக் காற்றில் சேதமடைந்த 50க்கும் மேற்பட்ட தெரு மின் விளக்குகளை மாற்ற சிறுகமணி பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறுகமணி தேர்வு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் ராஜலிங்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் தங்க வேல், செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பிறப்பு இறப்பு பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 50 தெரு மின் விளக்குகள் அமைப்பது. சூறாவளிக் காற்றினால் பேரூராட்சி பகுதியில் சாய்ந்து சேதமடைந்த 40 க்கும் மேற்பட்ட தெருமின் விளக்குகளுக்கு டியூப் லைட் பொறுத்துவது. அரசி மலையாளி கோவில் தேர்த்திருவிழா ஜூன் 2ம் தேதிவரை நடைபெறுவதால் ஜே.சி.பி. மூலம் முட்செடிகளை அப்புறப்படுத்துவது, பொது சுகாதார உபயோகத்திற்காக தேவையான தள வாட சாமான்கள் வாங்குவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரூராட்சி தீர்மானம்

 


Page 87 of 160