Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

பென்னாகரம் பேரூராட்சி குடிநீர்த் திட்டம் ஜூன் 15-க்குள் நிறைவடையும்: பொறியாளர் எம். மணிவேலு

Print PDF

தினமணி    25.05.2010

பென்னாகரம் பேரூராட்சி குடிநீர்த் திட்டம் ஜூன் 15-க்குள் நிறைவடையும்: பொறியாளர் எம். மணிவேலு

தருமபுரி, மே 24: பென்னாகரம் பேரூராட்சி குடிநீர்த் திட்டம் ஜூன் 15-க்குள் முடிக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் நடைபெறும் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் எம். மணிவேலு கூறினார்.

பென்னாகரம் பேரூராட்சிக் குடிநீர் திட்டத்துக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் மின்சார கேபிள் பதிக்கும் பணி பென்னாகரத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தொடர்ந்து, எம். மணிவேலு நிருபர்களிடம் கூறியது:

பென்னாகரம் பேரூராட்சி குடிநீர்த் திட்டத்துக்காக சின்னாறு ஆற்றில் இருந்து 3 கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, பென்னாகரத்தில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத கிணற்றுக்குக் கொண்டுவரப்படும்.

பேரூராட்சி முழுவதும் விநியோகம் செய்வதற்காக குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 41,35,21 எச்.பி. மோட்டார்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்காக பென்னாகரம் துணை மின்நிலையத்திலிருந்து 14 கி.மீ. தூரம் மின்சார கேபிள்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஜூன் 15-க்குள் முடிக்கப்பட்டு, பேரூராட்சிக்கு குடிநீர் விநியோகம் நடைபெறும் என்றார். மின்வாரிய செயற்பொறியாளர் (பொது) கே. நடராஜன், செயற்பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

தொரப்பாடி பேரூராட்சியில் ரூ.5.20 லட்சத்தில் அடிப்படை வசதிகள்

Print PDF

தினமணி     24.05.2010

தொரப்பாடி பேரூராட்சியில் ரூ.5.20 லட்சத்தில் அடிப்படை வசதிகள்

பண்ருட்டி, மே 23: தொரப்பாடி பேரூராட்சி பகுதியில் பின் தங்கிய மண்டல மானிய நிதியில் இருந்து ரூ.5.20 லட்சம் செலவில் அடிப்படை வசதிகள் செய்ய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

÷பண்ருட்டி வட்டம் தொரப்பாடி பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் அதன் தலைவர் ஜெயலட்சுமி துரைராஜ் தலைமையில், துணைத் தலைவர் யூ.வி.என்.அருணாசலம் செட்டியார் முன்னிலையில் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

÷கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

÷எஸ்.எஸ்.பி.ராஜேஸ்குமார்: நந்தகுமார் லே அவுட், ஜெயராம் நகரில் உள்ள பூங்காவுக்கு சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும்.

÷கீதா பலராமன்: செல்வபுரம் பகுதியில் குடிநீர் பைப் விஸ்தரிப்பு செய்ய வேண்டும்.

÷சரஸ்வதி முருகன்: நெரிஞ்சிப்பேட்டை தெருவில் சாலை பழுதடைந்துள்ளது. இதில் சிமெண்ட் சாலை அமைத்துத் தரவேண்டும்.

÷என்.ஆர்.பிரகாஷ்: மெயின் ரோடு தெருவில் தண்ணீர் பஞ்சம் உள்ளது. மேற்கண்ட பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும்.

÷ரமேஷ்குமார்: ஆதிதிராவிடர் புதுக்காலனியில் சாலை வசதியும், மின் விளக்கு வசதியும் செய்து தரவேண்டும்.

÷இதற்கு பதில் அளித்த தலைவர் ஜெயலட்சுமி துரைராஜ், பின்தங்கிய மண்டல மானிய நிதியில் இருந்து ரூ.5.19 லட்சம் செலவில் மேற்கண்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கூறினார்.

Last Updated on Tuesday, 25 May 2010 04:20
 

காளப்பட்டி பேரூராட்சிக்கு மின் விளக்கு அமைக்க ரூ.57 லட்சம் மாநாட்டு மானியமாக ஒதுக்கீடு

Print PDF

தினகரன்     24.05.2010

காளப்பட்டி பேரூராட்சிக்கு மின் விளக்கு அமைக்க ரூ.57 லட்சம் மாநாட்டு மானியமாக ஒதுக்கீடு

கோவை, மே 24:கோவையில் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி ரூ.300 கோடி செல வில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகரை ஒட்டிய காளப்பட்டி பேரூராட்சி, சின்னியம்பாளையம், நீலம்பூர் கிராம ஊராட்சிகள் மற்றும் மயிலம்பட்டி பகுதிகளில் அவிநாசி சாலையில் மின் விளக்குகள் அமைக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றி யிருந்தன. இதில் ஊராட்சி பகுதிகளில் 76 மின் விளக்குகள் 10 மீட்டர் உயரம் கொண்ட டியூப்லர் கம்பத் தில் அமைக்கப்பட்டுகிறது. இதில் 250 வாட்ஸ் திறன் கொண்ட சோடியம் மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன.

இதேபோல் காளப்பட்டி பேரூராட்சியில் விமான நிலையம் ரோடு முதல் ஆர்.ஜி.புதூர் முருகன் கோவில் வரை 94 மின் விளக்குகள் 10 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகின்றன. இதற்கு தேவைப்படும் நிதியை அரசு மானியமாக வழங்கவேண் டும் என்று காளப்பட்டி பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது. மானியமாக ஒதுக்கீடு செய்ய அரசுக்கு பேரூராட்சி இயக்குநரும் பரிந்துரை செய்து மின் விளக்கு அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி மூலமே செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து ரூ.57 லட்சம் மானியமாக ஒதுக்கீடு செய்து அரசு செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 


Page 89 of 160