தினமலர் 12.05.2010
திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் ரூ.66 லட்சத்தில் வளர்ச்சிப்பணி
திருவிடைமருதூர்: திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் ரூ.66 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.அதன் விவரம் வருமாறு:
12வது நிதிக்குழு முதல் மற்றும் இரண்டாம் கட்ட தவணை நிதி ரூ.7 லட்சத்து 14 ஆயிரம், பேரூராட்சி பொது நிதி ரூ.3 லட்சத்து 72 ஆயிரம் மொத்தம் ரூ.10 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் உரக்கிடங்கிற்கு சாலை அமைத்தல், குப்பைகளை தரம் பிரிக்கும் தளம் அமைத்தல் மற்றும் மழைநீர் வடிகால், தடுப்புச்சுவர், சிமெண்ட் சாலை ஆகிய பணிகள் இயக்க மற்றும் பராமரிப்பு திட்ட நிதி ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் மேகலா நகரில் பைப் லைன் விஸ்தரிப்பு. நபார்டு திட்ட நிதி ரூ.38 லட்சம் மதிப்பில் வி.எச்.பி. நகர் தார்சாலை, சன்னாபுரம் முஸ்லிம் தெரு முதல் சன்னாபுரம் வெள்ளாளர் தெரு வரை மற்றும் சன்னாபுரம் பணிக்கர் தெரு முதல் காரைக்கால் சாலை வரை தார் சாலை, அடிப்படை கட்டமைப்பு நிதி பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான நிதி ரூ.16 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் உப்பிலியப்பன்கோவில் வீதிசிமெண்ட் சாலை அமைத்தல், மொத்தம் ரூ.66 லட்சம் மதிப்பில் 2009-10ம் ஆண்டிற்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை பேரூராட்சித் தலைவர் கணபதி, செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.இதேபோல் திருபுவனம் பேரூராட்சியில் 2009-10ம் ஆண்டிற்கு நபார்டு திட்ட நிதி ரூ.42 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் காங்கேயன்பேட்டை முதல் மெயின் சாலை வரை மற்றும் ஆற்றங்கரை வழிநடப்பு ஆகியவை தார்சாலையாக மாற்றுதல்.12வது நிதிக்குழு நிதி ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் உரக்கிடங்கு செட் அமைத்தல், தார்சாலை மற்றும் வடிகால் வசதி செய்தல், இயக்க மற்றும் பராமரிப்பு திட்ட நிதி ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் குடிநீர் மோட்டார் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகளின் மொத்த மதிப்பு ரூ.51 லட்சத்து 67 ஆயிரம் ஆகும். இத்தகவலை பேரூராட்சித் தலைவர் மணி, செயல் அலுவலர் சுரேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.