Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

கரூர் இரட்டை வாய்க்கால் திட்டம் 1998-99ல் வந்தது; எம்.பி., தகவல்

Print PDF

தினமலர் 03.05.2010

கரூர் இரட்டை வாய்க்கால் திட்டம் 1998-99ல் வந்தது; எம்.பி., தகவல்

கரூர்: ''கரூர் நகராட்சி பகுதியில் இரட்டை வாய்க்கால் புனரமைப்பு திட்டம் கடந்த 1998-99ல் கொண்டு வரப்பட்டது,'' என கரூர் எம்.பி., தம்பிதுரை குற்றம்சாட்டினார். கரூர், கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரூர் எம்.பி., தம்பிதுரை பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தாந்தோணி நகராட்சி பகுதியில் துவங்கிய சுற்றுப்பயணம், வெள்ளியணை, ஜெகதாபி, உப்பிடமங்கலம், .ஜெயங்கொண்டம், கிருஷ்ணராயபுரம், மாயனூர், புலியூர், தொழில்பேட்டை, அரசு காலனி, வாங்கல், கடம்பங்குறிச்சி, தளவாபாளையம் மற்றும் தோட்டக்குறிச்சியில் நிறைவடைந்தது. அதன்பின், எம்.பி., தம்பிதுரை கூறியதாவது: கரூர் நகராட்சி பகுதியில் இரட்டை வாய்க்கால் புனரமைப்பு திட்டம் கடந்த 1998-99ல் நான் எம்.பி.,யாக இருந்தபோது திட்டமிடப்பட்டது.

பின்னர் தொடர்ந்து மத்தியில் ஆட்சி பொறுப்பில் நாங்கள் இல்லாததால் எங்களால் நேரடியாக செயல்படமுடியவில் லை. தற்போது அ.தி.மு.., எதிர்கட்சியாக உள்ளதால் அரசுக்கு கோரிக்கைதான் வைக்கமுடியும். கோரிக்கை மூலம் கரூர்-சேலம் அகல ரயில்பாதைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு பெறமுடிந்தது. அரசு திட்டத்தை எவரும் நேரடியாக சொந்த நிதியில் செய்ய முடியாது. சம்மந்தப்பட்ட திட்டத்துக்கு நிதியளிப்பதானால், அரசுக்கு செலுத்தி பணி செய்ய வேண்டும். கரூர் முன்னாள் எம்.பி., பழனிசாமி தவறான வாக்குறுதியால், தவறான பிரச்சாரம் செய்துள்ளார். கரூர் மாவட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாக அதிகம் மணல் எடுப்பதால்தான் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. லோக்சபாவில் மே ஐந்தாம் தேதி கனிம வளம் திருட்டு குறித்து விவாதம் நடக்கவுள்ளது. மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைக்கப்படும் மனுக்கள் மீதா ன நடவடிக்கை குறித்து கண்காணிக்கப்படும். லோக்சபா தொகு தி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இ ந்த தொகையை தொகுதியில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளிலும் பரவலாக செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறுகூறினார்.கரூர் அ.தி.மு., மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி உடனிருந்தார்

Last Updated on Monday, 03 May 2010 06:39
 

5 லட்சத்தில் திட்டப்பணிகள்:போளூர் பேரூராட்சியில் தீர்மானம்

Print PDF

தினமலர் 30.04.2010

5 லட்சத்தில் திட்டப்பணிகள்:போளூர் பேரூராட்சியில் தீர்மானம்

போளூர்:போளூர் பேரூராட்சியில் 5 லட்சம் ரூபாய் செலவில் பல புதிய பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.போளூர் பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் ரங்கா விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் வாசுதேவன், துணைத்தலைவர் சண்முகம் ஆகியோர்முன்னிலை வகித்து பேசினர். கூட்டத்தில், வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் போளூர் பகுதியில் உள்ள 4 கிணறுகளை 5 ஆயிரம் ரூபாய் செலவில் ஆழப்படுத்துவது, பேரூராட்சி பொது நிதியில் இருந்து புதியதாக கட்டப்பட்டு வரும் பேரூராட்சி முன்பாக 3 லட்சம் ரூபாய் செலவில் போர்டிகோ கட்டுவது, 12ம் வார்டில் சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க 1.2 லட்சம் ரூபாய் செலவு செய்து 11வது வார்டு, 9 வது வார்டுகளில் மினிகுடிநீர் தொட்டி அமைப்பது, மேலும் 2009-10ம் ஆண்டில் சொர்ண ஜெயந்தியோஜானா திட்டத்தின் கீழ் 1.44 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்வது உட்பட மொத்தம் 5.57 லட்சம் ரூபாய் செலவில் பல பணிகள் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாண்டுரங்கன்,ஏழுமலை,செல்வன் ஆறுமுகம், பாபு, இளங்கோவன், ரமேஷ் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். தலைமை எழுத்தர் சண்முகம் நன்றி கூறினார்.

Last Updated on Friday, 30 April 2010 07:24
 

சோமேஸ்வரர் கோயில் சீரமைப்பு பணி தீவிரம்

Print PDF

தினமணி 29.04.2010

சோமேஸ்வரர் கோயில் சீரமைப்பு பணி தீவிரம்

பெங்களூர், ஏப்.28: அல்சூர் சோமேஸ்வரர் கோயில் சீரமைப்புப் பணியை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது.

பெங்களூரை அடுத்த அல்சூரில் உள்ள சோமேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றி கோயில் குளத்தைத் தூர்வார பெங்களூர் மாநகராட்சி திட்டமிட்டது. இதையடுத்து கோயில் குளத்தை தூர் வாரும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதனால் குளத்தின் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டன. மாலை வரை குளத்திலிருந்து 100 லாரி மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் அப்பணி தொரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழமை வாய்ந்த இக்கோயிலை சீரமைத்து, குளத்தை தூர் வாரினால் அது ஆட்சியாளர்களுக்கு மிகவும் நல்லதாக அமையும் என சிலர் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆலோசனை வழங்கியதாக இந்தப் பகுதியில் வதந்தி உலவுகிறது.. மேலும கோயில் சீரமைப் பணியில் முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்த்லஜே தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது

 


Page 97 of 160