தினமணி 23.04.2010
காஞ்சிபுரத்தில் ரூ.185 கோடியில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
காஞ்சிபுரம், ஏப். 22: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.185 கோடியில் உயர்மட்ட பாலங்கள், பல்வேறு சாலைகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
÷காஞ்சிபுரம் பகுதியில் ரூ.4.11 கோடிக்கு புக்கத்துறை-உத்திரமேரூர் சாலை, பாத்தூர்-தண்டலம் சாலை உள்பட பல்வேறு இடங்களில் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாலங்கள் திறப்பு விழா மற்றும் காஞ்சிபுரம் புறவழிச் சாலை, சென்னை-பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம் நான்கு வழிச் சாலை ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா, பல்வேறு பாலங்கள் அடிக்கல் நாட்டு விழா உள்பட ரூ.185 கோடிக்கு பல்வேறு பணிகளுக்கான விழா நடைபெற்றது.
÷இவ் விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா வரவேற்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
÷இந் நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.விஸ்வநாதன், எம்எல்ஏக்கள் பி.கமலாம்பாள், கே.சுந்தர், காயத்ரி தேவி, டி.மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.÷இந்நிகழ்ச்சியில் ரூ. 4.11 கோடி மதிப்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாலங்கள் திறக்கப்பட்டன. ரூ.44.18 கோடியில் பல்வேறு சாலைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மேலும் ரூ.137.29 கோடிக்கு பாலங்கள் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.விழாவில் மஞ்சள் மயம்: இவ் விழாவில் திறக்கப்படும் கல்வெட்டுகள் மூடப்பட்ட துணி மஞ்சள் நிறத்தில் இருந்தது. மேடைக்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்த பதாகை, அலங்கார பூக்களில், விழா விருந்தினர்கள் அணிந்திருந்த பேட்ஜுக்கு நடுவில் என பல்வேறு இடங்களில் மஞ்சள் மயம் காணப்பட்டது.