Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

நெல்லை மாநகராட்சிக்கு நாளை ஸ்வீடன் தொழிற்சங்கத்தினர் வருகை

Print PDF

தினமலர் 15.04.2010

நெல்லை மாநகராட்சிக்கு நாளை ஸ்வீடன் தொழிற்சங்கத்தினர் வருகை

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சிக்கு நாளை (16ம் தேதி) ஸ்வீடன் நாட்டின் தொழிற் சங்கத்தினர் வருகின்றனர்.ஸ்வீடன் நாட்டில் நகராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர் களால் நடத்தப்படும் கம்யூனல் சங்கம் ஆரம்பித்து 100 ஆண்டுகள் ஆவதையொட்டி உலகில் உள்ள பல நாடுகளுக்கு இச்சங்க நிர்வாகிகள் சென்று வருகின்றனர்.இதன் அடிப்படையில் கிறிஸ்டியானா தலைமையில் 4 மகளிர், 3 ஆண்கள் கொண்ட குழுவினர் இந்தியாவில் அசாம் மற்றும் தமிழகத்திற்கு வருகின்றனர். தமிழகத்தில் நெல்லை மாநகராட்சிக்கு நாளை (16ம் தேதி) வரும் குழுவினர் மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள், அதிகாரிகள், மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆகியோரை சந்திக்கின்றனர். பாளை மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவர் சுப.சீத்தாராமனையும் இக்குழு சந்திக்கிறது.

நெல்லை ஜங்ஷன் ஓட்டல் ஆர்யாசில் நாளை (16ம் தேதி) மாலை கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகள், நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் பணிபுரியும் தொழிற்சங்க பிரதிநிதிகள், பப்ளிக் சர்வீஸ் இன்டர்நேஷனல் தெற்காசிய மண்டல ஒருங்கிணைப்பாளர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று நகராட்சி, மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் சீத்தாராமன் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 15 April 2010 08:53
 

உளுந்தூர்பேட்டை பேரூராட்சி வளர்ச்சிக்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 13.04.2010

உளுந்தூர்பேட்டை பேரூராட்சி வளர்ச்சிக்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் தி.மு.. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.., ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு எம்.எல்.., தலைமை தாங்கினார். நகர செயலாளர் சண்முகம் வரவேற்றார். திருநாவலூர் ஒன்றிய செயலாளர் வசந்தவேல், ஒன்றிய அவைத்தலைவர் அப்துல்ரஹீம், நகர அவைத்தலைவர் சிவராஜ், முன்னாள் நகர செயலாளர் செல் லையா முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் ஆம்பூர் தர்மன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பிரதிநிதி கலியமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், நிர்வாகிகள் சந்திரபாபு, மதியழகன், ஸ்டாலின், டேனியல்ராஜ், தளபதிராஜா, அய்யப்பன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் எம்.எல்.., திருநாவுக்கரசு பேசியதாவது:

தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியது மட்டுமல்லாமல் நிறைய திட்டங்கள் செயல்படுத்தியுள்ளார். மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அனைத்து வசதிகளும் தற்போது மக்களுக்கு கிடைத்து வருகிறது. உளுந்தூர் பேட்டை பேரூராட்சியில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு எம்.எல்.., நிதியிலிருந்து பணிகள் நடந்துள்ளது. தமிழக அரசின் பட்ஜெட்டை பார்த்து அதேபோல் பக்கத்து மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. காமராஜ் 5ம் வகுப்புவரை இலவச கல்வி கொண்டு வந்தார். கருணாநிதி முதுகலை பட்டம் வரை இலவச கல்வி கொடுக்கிறார். எனவே வரும் காலங்களில் தி.மு..வை மக்கள் ஆதரிக்க வேண்டும் என திருநாவுக்கரசு பேசினார்.

Last Updated on Tuesday, 13 April 2010 07:23
 

சென்னையை சுற்றி நான்கு நகர்ப்புற திட்டங்கள்: ஸ்டாலின்

Print PDF

தினமலர் 13.04.2010

சென்னையை சுற்றி நான்கு நகர்ப்புற திட்டங்கள்: ஸ்டாலின்

சென்னை : ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், சென்னையைச் சுற்றி புதிதாக நான்கு திட்டங்களுக்கு ஒப்புதல் பெற, துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில், மாநில அளவிலான ஒப்புதல் அளிக்கும் கூட்டம், துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 3,900 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பிலான 39 திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 838 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட எட்டு திட்டங்கள், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 826 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஐந்து திட்டங்கள் ஆகியவை குறித்தும் துணை முதல்வர் ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில், 195 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான மேலும் நான்கு புதிய திட்டங் களுக்கு, ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சென்னை கழிவுநீர் சுத்திகரிப்பு தேவையை கருத்தில் கொண்டு, நாள் ஒன்றுக்கு 12 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 130 கோடி ரூபாய் செலவில் சென்னை கோயம்பேட்டில் ஏற்படுத்தப் படுகிறது.

சென்னை நகரை ஒட்டியுள்ள மணப்பாக்கம் ஊராட்சியில், நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில், 30 ஆண்டுகளுக்கான தொலைநோக்குடன் 10 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பில் மற்றொரு திட்டம் பரிந்துரைக்கப்பட்டது.மணப்பாக்கம் குடிநீர் திட்டத்தால் வெளியேறும் கழிவுநீரை கருத்தில் கொண்டு, 26 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டம் அந்த ஊராட்சிக்கு வழங்கப் படுகிறது.தகவல் தொழில்நுட்ப சாலையில் உள்ள உள்ளாட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் கழிவுநீரை, சாலையின் வழியாக வெளியேற்ற, 14 நிலையங்களை 28.05 கோடி ரூபாயில் நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Last Updated on Tuesday, 13 April 2010 06:45
 


Page 103 of 160