Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

திருப்புத்தூரில் ரூ.40 லட்சத்தில் நவீன பூங்கா பணி துவக்கம்

Print PDF

தினமலர் 12.04.2010

திருப்புத்தூரில் ரூ.40 லட்சத்தில் நவீன பூங்கா பணி துவக்கம்

திருப்புத்தூர் : திருப்புத்தூரில் தூர்வாரப்பட்ட ஆலமரத்து ஊரணியில் நவீன பூங்கா வசதியுடன் கூடிய சிறுகுளம் கட்டும் பணி துவங்கியுள்ளது.இங்கு, நீண்ட காலமாக மக்களின் பொழுது போக்கிற்கென நவீன பூங்கா வசதி இல்லை என்ற குறை இருந்தது. பூங்கா அமைக்க போதிய இடம் இன்றி, இத்திட்டம் கிடப்பில் கிடந்தது. இதற்கிடையில், பல ஆண்டுகளாக நெருக்கடியான இடத்தில் இயங்கும் பஸ் ஸ்டாண்ட்டிற்கு புதிதாக, ஆலமரத்து ஊரணியில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் நோக்கில், 30லட்சம் ரூபாய் எம்.பி., நிதியில் ஊரணி தூர்வாரப்பட்டது. பேரூராட்சி பொறியாளர்கள் நடத்திய ஆய்வில், பஸ் ஸ்டாண்ட் கட்டடம் கட்ட மண் ஆதாரம் இல்லை எனக்கூறினர். இதனால், பஸ் ஸ்டாண்ட் திட்டம் முடங்கியது.

நவீன பூங்கா: ஆலமரத்து ஊரணியில், நவீன வசதி கொண்ட பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். இதற்காக, பின்தங்கிய பகுதி திட்டத்தில், 40 லட்சம் ரூபாயில் பூங்காவிற்கான அடிப்படை கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது. நவீன பூங்காவில், நடைபாதை, பூச்செடிகள் வளர்த்தல், மரம் நடுதல், மக்கள் அமர நாற்காலி, சிறுவர்களுக்கான விளையாட்டு கருவி, ஊஞ்சல்கள் அமைக்க திட்டமிட்டுள்ளனர். பூங்கா பணி இரண்டு மாதத்திற்குள் நிறைவடையும் என பேரூராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

திருப்புத்தூரில் ரூ.40 லட்சத்தில் நவீன பூங்கா பணி துவக்கம்

Print PDF

தினமலர் 12.04.2010

திருப்புத்தூரில் ரூ.40 லட்சத்தில் நவீன பூங்கா பணி துவக்கம்

திருப்புத்தூர் : திருப்புத்தூரில் தூர்வாரப்பட்ட ஆலமரத்து ஊரணியில் நவீன பூங்கா வசதியுடன் கூடிய சிறுகுளம் கட்டும் பணி துவங்கியுள்ளது.இங்கு, நீண்ட காலமாக மக்களின் பொழுது போக்கிற்கென நவீன பூங்கா வசதி இல்லை என்ற குறை இருந்தது. பூங்கா அமைக்க போதிய இடம் இன்றி, இத்திட்டம் கிடப்பில் கிடந்தது. இதற்கிடையில், பல ஆண்டுகளாக நெருக்கடியான இடத்தில் இயங்கும் பஸ் ஸ்டாண்ட்டிற்கு புதிதாக, ஆலமரத்து ஊரணியில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் நோக்கில், 30லட்சம் ரூபாய் எம்.பி., நிதியில் ஊரணி தூர்வாரப்பட்டது. பேரூராட்சி பொறியாளர்கள் நடத்திய ஆய்வில், பஸ் ஸ்டாண்ட் கட்டடம் கட்ட மண் ஆதாரம் இல்லை எனக்கூறினர். இதனால், பஸ் ஸ்டாண்ட் திட்டம் முடங்கியது.

நவீன பூங்கா: ஆலமரத்து ஊரணியில், நவீன வசதி கொண்ட பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். இதற்காக, பின்தங்கிய பகுதி திட்டத்தில், 40 லட்சம் ரூபாயில் பூங்காவிற்கான அடிப்படை கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது. நவீன பூங்காவில், நடைபாதை, பூச்செடிகள் வளர்த்தல், மரம் நடுதல், மக்கள் அமர நாற்காலி, சிறுவர்களுக்கான விளையாட்டு கருவி, ஊஞ்சல்கள் அமைக்க திட்டமிட்டுள்ளனர். பூங்கா பணி இரண்டு மாதத்திற்குள் நிறைவடையும் என பேரூராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

சாலையோர பூங்கா அமைக்க திட்டம்

Print PDF

தினமலர் 09.04.2010

சாலையோர பூங்கா அமைக்க திட்டம்

திருப்பூர்: சாயப்பட்டறைகளை கண்காணிப்பதற்காக, மாசு கட்டுப்பாடு வாரியம், வருவாய்த்துறை, மின்வாரியம் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் சமயமூர்த்தி லைமை வகித்தார். கூட்டத்தில், 'நகரில் செயல்படும் சாயப்பட்டறைகள் வெளியிடும் திட கழிவுகளை அகற்றுவது, சாய கழிவு நீர், நீர் நிலைகளில் கலக்காமல் இருப்பதை தடுப்பது; வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. நெரிசலை குறைக்க சாலைகளை விரிவுபடுத்துவது.

'இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் மின்கம்பங்களை அகற்றுவது; அகற்றப்பட்ட இடத்தில் சாலையோர பூங்காக்கள் அமைப்பது; முக்கிய சாலைகள் பாலங்கள் அருகே கோழி, மீன் கழிவுகளை கொட்டுவதை தடுப்பது; கழிவுகளை மாநகராட்சி மூலம் சேகரித்து தரம் பிரித்து அப்புறப்படுத்துவது' என முடிவு செய்யப்பட்டது. டி.ஆர்.., முரளிதரன், மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி, பொறியாளர் கவுதமன், மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் கண்ணன், நகர் நல அலுவலர் ஜவஹர்லால் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 09 April 2010 08:37
 


Page 104 of 160