Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

நெல்லை மாவட்டத்தில் ரூ. 500 கோடியில் பணிகள்: ஆட்சியர்

Print PDF

தினமணி 12.03.2010

நெல்லை மாவட்டத்தில் ரூ. 500 கோடியில் பணிகள்: ஆட்சியர்

திருநெல்வேலி, மார்ச் 11: திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் பெருந்திட்டங்கள் தவிர்த்து அரசுத் துறைகள் மூலம் ரூ. 500 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு அவற்றில் 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தெரிவித்தார்.

இம் மாவட்ட 12-வது திட்டக் குழுக் கூட்டம் அதன் தலைவர் ம. கிரஹாம்பெல் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவரான மாவட்ட ஆட்சியர் ஜெயராமன், செயலர் கோ. குருநாதன், மாவட்ட திட்ட அலுவலர் அர. சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தை தொடக்கி வைத்து ஆட்சியர் மேலும் பேசியதாவது:

இம் மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் ரூ. 500 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய 20 சதவீதப் பணிகளும் இம் மாத இறுதிக்குள் அல்லது ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

நாட்டிலேயே முன்னோடியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நதி நீர் இணைப்பு திட்டமான தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டம் ரூ. 369 கோடியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அது தனி திட்டமாகும். இந்த திட்டத்தில், கான்கிரீட் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டமானது 2012-ல் நிறைவு பெறும்.

கடந்த 2008-09 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தற்போது 5 பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அந்தப் பணிகளையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் ரூ. 16.5 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவு பெறும். தென்காசியில் ரூ. 24.5கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் அங்குள்ள புதிய பஸ்நிலையத்திற்கு வாகனங்கள் செல்வதில் சிக்கல் உள்ளதாக புகார் வந்தது. எனவே, அந்த இடத்தை ஆய்வு செய்து தற்போது 1.6 கி.மீ. தொலைவுக்கு மாற்றுச்சாலை அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப பூங்கா: கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டப் பணிகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும். நான்குனேரி தொழில்நுட்ப பூங்கா திட்டத்தில் பல்வேறு முகமைகள் ஈடுபட்டுள்ளன.

அந்த திட்டத்திற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தனியாக தண்ணீர் கொண்டு வரும் திட்டம் ரூ. 3 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது.

கலைஞர் வீட்டுவசதி திட்டம்: கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை நிறைவேற்ற மாவட்டத்தில் உள்ள 19 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு கிராமம் வீதம் தேர்வு செய்து மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 362 குடிசைகள் மட்டுமே உள்ளன.

அந்த வகையில் இம் மாவட்டம் முன்னேறிய மாவட்டமாக உள்ளது. அடுத்து, ûனைத்து கிராமங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

திட்ட அலுவலர் அர. சங்கர் பேசியதாவது: கடந்த 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இம் மாவட்டத்தில் 36 ஆயிரம் குடிசை வீடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இப்போது மேற்கொள்ளப்பட்ட மாதிரி கணக்கெடுப்பில் குடிசை வீடுகள் குறைவாகவே உள்ளன. எனவே, மாவட்டத்தில் முன்பைவிட இப்போது குறைவான அளவிலேயே குடிசைகள் இருக்க வாய்ப்புண்டு.

இம் மாதம் 29 ஆம் தேதி முதல் முழுக் கணக்கெடுப்பு நடைபெறும். அதில் 2001-ல் இருந்ததைவிட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே குடிசை வீடுகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

கூட்டத்தில், உறுப்பினர்கள் பேசும்போது அறிவிக்கப்படாத மின்வெட்டினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார் கூறினர்.

ஒரிசாவில் இருந்து பெறப்படும் மின்சாரத்தில் குறைவு ஏற்பட்டதாலும், நமது மாநிலத்தில் உற்பத்தியில் பிரச்னை ஏற்பட்டதாலும் மின்தடை ஏற்பட்டது என்றும், இப்போது நிலைமை முன்னேறி வருவதாகவும் மின்துறை அதிகாரிகள் பதிலளித்தனர்.

வடக்கு பச்சையாறு அணையில் இருந்து நான்குனேரி பகுதியில் உள்ள 46 குளங்களுக்கு தனிக் கால்வாய் அமைக்க வேண்டும் என்றும், கால்வாய் இல்லாததால் இந்த ஆண்டு சுமார் 20 குளங்களின் பாசன நிலங்களில் நஞ்சை பயிர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுப்பினர் தங்கராஜ் தெரிவித்தார்.

தனிக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

Last Updated on Friday, 12 March 2010 10:14
 

நாகையில் புதிய பள்ளி கட்டட திறப்பு விழா

Print PDF

தினமலர் 12.03.2010

நாகையில் புதிய பள்ளி கட்டட திறப்பு விழா

நாகை: நாகப்பட்டினம் சர் அகமது தெரு முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது.நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மாரிமுத்து, கவுன்சிலர்கள் ரெஜினாபேகம், பாரூக்ராஜ், பொறியாளர் பாக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட்சித்தலைவர் சந்திரமோகன் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசுகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நகராட்சி கல்வி நிதி 2007–08ம் ஆண்டின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் திறமையாக கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.தலைமை ஆசிரியை சந்திரா நன்றி கூறினார்.தொடர்ந்து நாகை மருந்துகொத்தளம் ரோட்டில் எஸ்.ஜெ.எஸ்.ஆர்.ஒய் திட்டத்தின் கீழ் 2008-09ம் ஆண்டில் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தையும் நகராட்சித் தலைவர் சந்திரமோகன் திறந்து வைத்தார்.

Last Updated on Friday, 12 March 2010 06:48
 

பள்ளி கட்டட திறப்பு விழா

Print PDF

தினமலர் 12.03.2010

பள்ளி கட்டட திறப்பு விழா

காரைக்குடி: எஸ்.எம்.எஸ்.வி., மேல்நிலைப்பள்ளியில், 50 லட்ச ரூபாயில் கட்டப்பட்ட கட்டட திறப்பு விழா நடந்தது.வளர்ச்சிக் குழு தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். செயலாளர் பெரியணன் முன்னிலை வகித்தார். தியாகராஜா மில் அதிபர் கருமுத்து கண்ணன் திறந்து வைத்தார். குன்றக்குடி பொன்னம் பல அடிகள், இந்தியன் ஆயுள் காப்பீட்டு கழக முன்னாள் செயல் இயக்குனர் லட்சுமணன், நகராட்சி தலைவர் முத்துத்துரை பேசினர். பள்ளி குழு தலைவர் சொக்கலிங்கம், உறுப்பினர் பழனிவேலு, எஸ்.எல்.என். நாராயணன் செட்டியார், வித்யா கிரி பள்ளி முதல்வர் சுவாமிநாதன், தலைமை ஆசிரியர் வள்ளியப்பன், உதவி தலைமை ஆசிரியர் ஹென்றிபாஸ்கர், பங்கேற்றனர். முத்துபழனியப்பன் தொகுத்து வழங்கினார். அறக்கட் டளை நிர்வாகி நாராயணன் நன்றி கூறினார்.

Last Updated on Friday, 12 March 2010 06:43
 


Page 109 of 160