Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

20 ஆண்டு தேவையை கருத்தில் கொண்டு நகர் வளர்ச்சித் திட்டங்கள்: மேயர் தகவல்

Print PDF

தினமணி 11.03.2010

20 ஆண்டு தேவையை கருத்தில் கொண்டு நகர் வளர்ச்சித் திட்டங்கள்: மேயர் தகவல்

மதுரை, மார்ச் 10: மதுரை மாநகரில் 20 ஆண்டு தேவைகளைக் கருத்தில் கொண்டு வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி சார்பில் வளர்ச்சித் திட்ட அறிக்கை தயாரிப்பதில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தலைமை வகித்தார். பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்து மேயர் பேசியதாவது:

மாநகராட்சியில் ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டம் சார்பில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.2,400 கோடியில் வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டம் தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பியதில் ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பங்களிப்புத் தொகையாக 30 சதவீதம் அளவுக்கு திட்டத்துக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி மூலம் வைகை கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் வாய்க்கால், திடக்கழிவு மேலாண்மை, சாலைகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது மதுரை மாநகரம் வளர்ச்சி அடைந்துவரும் நிலையில், அதற்கான கட்டமைப்பு, சாலை வசதிகள் உள்ளிட்ட பணிகளுக்கு, நிதி ஆதாரங்களைப் பெருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் எந்த ஒரு திட்டமும் புத்தக வடிவில் இல்லாமல், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில் திட்டம் தயாரிக்க வேண்டும். 20 ஆண்டுகள் தேவையைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்து தேவைக்கு ஏற்ற அளவில் புதுப்பிக்கப்படும்.

தேவையான நிதி ஆதாரத்துடன் நகர் வளர்ச்சித் திட்டம் தயாரிப்பதற்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆதரவு தர வேண்டும் என்றார் அவர்.

கூட்டத்தில் வடக்கு மண்டலத் தலைவர் க. இசக்கிமுத்து, தலைமைப் பொறியாளர் கே. சக்திவேல், உதவி ஆணையாளர் (வருவாய்) ரா. பாஸ்கரன் நிர்வாகப் பொறியாளர் சேதுராமலிங்கம், மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 11 March 2010 09:32
 

ரூ. 50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் போளூர் பேரூராட்சியில் தீர்மானம்

Print PDF

தினமலர் 11.03.2010

ரூ. 50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் போளூர் பேரூராட்சியில் தீர்மானம்

போளூர் : 50 லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள போளூர் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.போளூர் பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் ரங்கா விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சண்முகம் மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் அனைவரும் தங்கள் வார்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினர். பிப்ரவரி மாத வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.தீர்மானங்கள்: 2010-11ம் ஆண்டுக்கு அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் போளூர் பேரூராட்சி தேர்வு செய் யப்பட்டுள்ளது.

இந்த திட் டத்தை பயன்படுத்தி 50 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ள மன்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.பஸ் நிலையத்துக்கு செல் லும் பிரதான சாலையை தார்ச்சாலையாக மாற்றி அதன் இருபுறங்களிலும் மழைநீர் கால்வாய்கள் அமைத்து மின்விளக்குகள் அமைப்பது, புதிய சமுதாயக்கூடம் கட்டுதல் மற்றும் பஸ்நிலையத்தில் வணிக வளாகங்கள் கட்டுதல், 10 லட்சம் ரூபாய் செலவில் ஊரணி குளத்தை சரிபடுத்துவது, அனைத்து குடிசை பகுதி தெருக்களிலும் சிமென்ட் சாலை அமைப் பது, சுடுகாடுகளை மேம்படுத்தி தெருவிளக்கு அமைப் பது, மேலும் பொதுமக்களின் தேவையறிந்து பல திட்டங்களை மேற் கொள் வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில், கவுன்சிலர்கள் செல்வன், பாண்டுரங்கன், ஏழுமலை, ஆறுமுகம், இளங்கோவன், பாபு உட்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். தலைமை எழுத்தர் சண்முகம் நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 11 March 2010 06:55
 

செம்மொழி மாநாட்டு பணி திருப்தியளிக்கிறது : மாநகர மேம்பாட்டுகுழு கூட்டத்தில் நம்பிக்கை

Print PDF

தினமலர் 11.03.2010

செம்மொழி மாநாட்டு பணி திருப்தியளிக்கிறது : மாநகர மேம்பாட்டுகுழு கூட்டத்தில் நம்பிக்கை

கோவை : கோவையில் நடக்க உள்ள செம்மொழி மாநாட்டையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் திருப்தியளிப்பதாக கலெக்டர் உமாநாத் கூறினார். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக ஏற்படுத்தபட்ட கோவை மாநகர மேம்பாட்டு குழு கூட்டம் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந் தது. கூட்டத்திற்கு தலைவரும் மேயருமான வெங்கடாசலம் தலைமை வகித்தார்.

கலெக்டர் உமாநாத் பேசியதாவது: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரில் துவங்கப்பட்டுள்ள பணிகள் வேகமாக நடந்து வருவது திருப்தியளிக்கிறது. அரசிடம் நிதியை எதிர்நோக்கியிருந்த அரசாணைகள் வந்துவிட்டன. சாலைப் பணிக்காக 13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒரு பணியை நிறைவு செய்தபின், மற்ற துறையினர் அப்பணியை மேற்கொள்ள வேண்டிய நிலையிருந்தால், அது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் தகவல் தெரிவிக்கலாம்.

இது வரை சாலை வரைபடம் குறித்து விவாதிக்கப்படவில்லை. அவிநாசிரோடு, திருச்சி ரோட்டை இணைக்கும் இணைப்பு சாலைக்கு மூன்று ஏக்கரை தனியார் தான் கிரயம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அதன் பின்பு ரோடு விஸ்தரிக்கும் பணிகளும், ரோடுபோடும் பணியும் துவங்கும். மருத்துவத்துறையினர் மாநகர மேம்பாட்டுக்குழுவுடன் இணைந்து செயல்பட வேண்டும், மருத்துவத்துறைக்கு ஏழு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். குடிநீர், மின்சார துறை அதிகாரிகள் தடங்கள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும், என்றார் கலெக்டர்.

துணை மேயர் கார்த்திக் பேசியதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்பு பில்லூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. விநியோகம் பாதிக்கப்பட்டது. மக்கள் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே நிலை செம்மொழி மாநாட்டின் போது ஏற்படக்கூடாது. இரு துறைகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்னதான் மக்களுக்கு நாம் நல்ல விஷயங்களை செய்தாலும் குடிநீர் இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும். அதனால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சவுரிபாளையம், உப்பிலிபாளையம் ரோட்டில் ரோடு பணிகள் நிறைவடைந் துள்ளன; ஆனால் மின் கம்பங்கள் அகற்றப்படவில்லை என்றார்.

பதிலளித்த மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலகிருஷ்ணன்: அவிநாசி ரோடு பணிகள் முழுமையடைந்துள்ளன. மற்ற பணிகள் விரைவாக முடிக்கப்படும். துணை மேயர் குறிப்பிட்ட பணிகளை மூன்று நாள் கால அவகாசத்தில் முடித்து விடுவோம், என்றார்.

குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் வேலுசாமி: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் நிரஞ்சன் மார்டி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, பில்லூர் பகுதியில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க ஆலோசனைகளை வழங் கியுள்ளார். அதன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.

மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா : மாநகராட்சி 75.27 கி.மீட்டருக்கு 76 ரோடுகளை புதுப்பிக்க 26.31 கோடியை ஒதுக்கி உள்ளது. ஏழு ரோடு பணிகள் முடிந்தன; 38 பணி நடந்து வருகிறது. மேலும் 31 பணிகள் துவங்க உள்ளன. இவை ஏப்ரல் 30ம் தேதிக்குள் முடிக்கப்படும்.

இது தவிர மாநகராட்சி பள்ளி கழிப்பிடம், திருமண மண்டபங்கள் பராமரிக்கப்படுகிறது. அவிநாசிரோட்டில் 20 பேருந்து நிழற்குடை, பிரதான ரோடுகளில் அலங்கார நீர் ஊற்று, சாலையோர பூங்கா மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ரேஸ்கோர்ஸ் பகுதியில் மழைநீர் வடிகால், நடைபாதை, சாலையோர பூங்கா அமைத்தல், ரோடு பராமரிப்பு பணிமேற்கொள்ளப் பட்டு வருகிறது, என்றார்.

கூட்டத்தில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் குமரன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜா, மாநகராட்சி நகர்நல அலுவலர் தங்கராஜ், நகரமைப்பு அலுவலர் சவுந்தர்ராஜன், உதவி பொறியாளர்கள் சுகுமாரன், கணேஷ்வரன் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 11 March 2010 06:03
 


Page 110 of 160