Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

நாகை புதிய கடற்கரையை அழகுப்படுத்தும் பணி ஆய்வு

Print PDF

தினமணி 19.02.2010

நாகை புதிய கடற்கரையை அழகுப்படுத்தும் பணி ஆய்வு

நாகப்பட்டினம், பிப். 18: நாகை புதிய கடற்கரையை பொலிவுப்படுத்தும் பணியை நாகை மாவட்ட ஆட்சியர் (பொ) . அண்ணாதுரை வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை புதிய கடற்கரையை சீரமைத்து, அழகுப்படுத்தும் திட்டம் ரூ. 2.43 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்துக்கு, தமிழக சுற்றுலாத் துறை மூலம் ரூ. 1.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நமக்குநாமே திட்டத்தின் கீழ், வங்கிகள், நகர வளர்ச்சி அறக்கட்டளை, வர்த்தக சங்கம், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ. 40.5 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அரசு பங்களிப்பாக ரூ. 81 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் வாகனங்கள் நிறுத்துமிடம், நடைபாதைகள், சிறுவர் பூங்கா, புல்வெளிகள், இருக்கைகள், வளைவுப் பூங்கா மற்றும் பார்வையாளர்கள் அமருமிடம் ஆகியன அமைக்கும் பணிகள் ரூ.1.6 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் (பொ) . அண்ணாதுரை வியாழக்கிழமை ஆய்வு செய்தார். பணிகள் தரமாகவும், துரிதமாகவும் நடைபெற வேண்டும் எனவும், தடுப்புச் சுவர்கள் தரமான செங்கல்களைக் கொண்டு கட்டப்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது நாகை வருவாய்க் கோட்டாட்சியர் சி. ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் சிவக்குமார், வட்டாட்சியர் ராஜசேகரன், உதவி செயற்பொறியாளர் ஹிலால் அகமது ஆகியோர் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 19 February 2010 11:03
 

கோவையில் உள்கட்டமைப்பு பணிக்கு ரூ.300 கோடி நிதி: முதல்வர் கருணாநிதி

Print PDF

தினமணி 18.02.2010

கோவையில் உள்கட்டமைப்பு பணிக்கு ரூ.300 கோடி நிதி: முதல்வர் கருணாநிதி

சென்னை, பிப்.17: "செம்மொழி மாநாடு நடைபெற உள்ள கோவை மாநகரில் உட்கட்டமைப்புப் பணிகள் ரூ.300 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அனைத்துக் குழுக்களின் சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

செம்மொழி மாநாடு நடைபெற்ற உள்ள கோவை மாநகரில் உள்கட்டமைப்பு பணிகள் ரூ.300 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக, அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.59.85 கோடியும், செம்மொழி பூங்கா அமைக்க ரூ.20 கோடியும், மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரப் பணிக்கு ரூ.10 கோடியும், மின் கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.56 கோடியும், சாலை மேம்பாடு உள்ளிட்ட உட்கட்டமைப்புக்கு ரூ.104.40 கோடியும், கொடீசியா உள் அரங்கப் பணிக்கு ரூ.9.30 கோடியும், மாநாட்டு பந்தல் பணிக்கு ரூ.7.71 கோடியும், ஊர்வலம், கலை நிகழ்ச்சிகளுக்கு ரூ.5.85 கோடியும், கண்காட்சி அமைக்கும் பணிக்கு ரூ.1.60 கோடியும், விருந்தோம்பலுக்கு ரூ.4.95 கோடியும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மேம்பாட்டுக்கு ரூ.4.25 கோடியும், மருத்துவ வசதி, சிறப்பு மலர் மற்றும் போக்குவரத்து வசதிக்கு ரூ.10.85 கோடி என ஏறத்தாழ் 300 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்றார் முதல்வர் கருணாநிதி.

Last Updated on Thursday, 18 February 2010 09:25
 

நிலக்கோட்டையில் ரூ.50 லட்சத்தில் பணிகள்

Print PDF

தினமலர் 18.02.2010

நிலக்கோட்டையில் ரூ.50 லட்சத்தில் பணிகள்

நிலக்கோட்டை:நிலக்கோட்டை பேரூராட்சியில் ரூ. 50 லட்சத் தில் வளர்ச்சி பணிகள் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் உதயகுமார் முன் னிலை வகித்தார். செயல் அலுவலர் சக்தி வேல் வரவேற்றார். கூட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 50 லட்ச ரூபாய்க்கு பணி தேர்வு செய்தல், சிமென்ட் ரோடு, சுற்றுச்சுவர், வடிகால், சமையல் கூடம் அமைத் தல் ஆகியவற் றிற்கு 15 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. சுகாதார ஆய்வாளர் தர்மர் நன்றி கூறினார். உதவியாளர் மேகநாதன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 18 February 2010 07:00
 


Page 114 of 160