Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

செம்மொழி மாநாடு: சர்க்யூட் ஹவுஸ் மேம்படுத்த ரூ.2.63 கோடி

Print PDF

தினமலர் 18.02.2010

செம்மொழி மாநாடு: சர்க்யூட் ஹவுஸ் மேம்படுத்த ரூ.2.63 கோடி

கோவை : கோவை சுற்றுலா மாளிகையை மேம்படுத்த, இரண்டு கோடியே 63 லட்ச ரூபாய் நிதி, அரசிடம் கோரப்பட்டுள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான தங்குமிட ஏற்பாட்டுக் குழு கூட்டம், ஊரக தொழில் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் அவர் பேசியதாவது: கோவை சுற்றுலா மாளிகையை மேம்படுத்த இரண்டு கோடியே 63 லட்ச ரூபாய் தேவையென்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, விரைவில் பெறப்படும். கோவை நகரில் அரசுத்துறைகளின் கட்டுப் பாட்டிலுள்ள அனைத்து சுற்றுலா மாளிகைகளும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை நகரிலுள்ள அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரியில் எவ்வளவு அறைகள் உள்ளன என்ற விபரத்தையும் சேகரிக்க வேண்டும்.

கோவை மாநகராட்சியில் 15 திருமண மண்டபங்கள், 94 லட்ச ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படுகின்றன. நகரில் 160 திருமண மண்டபங்களும், வெளியே 66 திருமண மண்டபங்களும் உள்ளன. இவற்றில், வெளிமாவட்டத்திலிருந்து வரும் கலைஞர்களை, தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரைத் தங்க வைக்கலாம். திருமண மண்டபங்களை வர்ணம் பூசி, குடிநீர்த் தொட்டிகளை சரி செய்து, கழிவறை வசதிகளை மேம்படுத்துமாறு மண்டப உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதப்படும். கோவையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஓட்டல்களை மாநாட்டுக்கு முன்பாக முடிக்குமாறு கேட்டுக்கொள்ளலாம்.

ஊட்டி மற்றும் குன்னூர் நகரங்களில் உள்ள அறைகள் அனைத்தையும் முன் கூட்டியே பதிவு செய்து வைக்கலாம். விருந்தோம்பல் குழு மற்றும் போக்குவரத்து குழுவுடன் கலந்தாலோசித்து, இறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அமைச்சர் பழனிச்சாமி பேசினார். கூட்டத்தில், திருப்பூர் மேயர் செல்வராஜ், கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 18 February 2010 06:51
 

கோவை மாநகர மேம்பாட்டுக்குழுக் கூட்டம் ரூ.113 கோடி பணிகளுக்கு ஒப்புதல்

Print PDF

தினமணி 16.02.2010

கோவை மாநகர மேம்பாட்டுக்குழுக் கூட்டம் ரூ.113 கோடி பணிகளுக்கு ஒப்புதல்

கோவை, பிப்.15: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரில் ரூ.113 கோடியில் பணிகள் மேற்கொள்ள கோவை மாநகர மேம்பாட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இக் குழுக் கூட்டம் குழுத் தலைவரும், மேயருமான ஆர்.வெங்கடாசலம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் செம்மொழி மாநாடு சிறப்பு அலுவலர் பிரபாகரன், மாநகர திமுக செயலர் நா.வீரகோபால், துணை மேயர் நா.கார்த்திக், துணை ஆணையர் வே.சாந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக் கூட்டத்தில் ரூ.113 கோடி பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ரூ.33.34 கோடி அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.25.24 கோடி மாநகராட்சி பொதுநிதியில் இருந்தும், ரூ.8 கோடி தனியார் பங்களிப்பு நிதியில் இருந்தும் செலவு செய்யப்படவுள்ளது.

ரூ.38.98 கோடி மதிப்பிலான 165 பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோர அனுமதிக்கப்பட்டது. ரூ.3.46 கோடி மதிப்பிலான 60 பணிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் ரூ.2 கோடி மதிப்பிலான பணி விரைவில் துவக்க அனுமதிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையர்கள் செüந்தரராஜன், கோமதிநாயகம், செயற்பொறியாளர் கணேஷ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 16 February 2010 06:06
 

ரூ.20 லட்சத்தில் பல்வேறு திட்ட பணிகள்: வி.கே.புரம் பகுதியில் இன்று திறப்பு விழா

Print PDF

தினமலர் 12.02.2010

ரூ.20 லட்சத்தில் பல்வேறு திட்ட பணிகள்: வி.கே.புரம் பகுதியில் இன்று திறப்பு விழா

விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் சுமார் 20 லட்ச ரூபாய் செலவில் நடந்த பல்வேறு திட்ட பணிகளை சபாநாயகர் ஆவுடையப்பன் இன்று (12ம் தேதி) திறந்து வைக்கிறார்.விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 7வது வார்டு மேலரத வீதியில் 65 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் டேங், சந்தன மாரியம்மன் கோயில் அருகில் 2 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட், 5 லட்ச ரூபாய் செலவில் 10வது வார்டு குறிஞ்சி மலர் தெருவில் போடப்பட்டுள்ள சிமென்ட் சாலை, 3.75 லட்ச ரூபாய் செலவில் வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் போடப்பட்டுள்ள பாலம்.

தலா 65 ஆயிரம் ரூபாய் செலவில் 9வது வார்டு பொதிகையடி மெயின்ரோடு சின்டெக்ஸ் டேங், 11வது வார்டு மேட்டுப்பாளையம் நடுத்தெரு சின்டெக்ஸ் டேங், 12வது வார்டு மணிநகரம் சின்டெக்ஸ் டேங், 14வது வார்டு பசுக்கிடைவிளை சின்டெக்ஸ் டேங் மற்றும் இதேவார்டில் மணிநகரம் சர்ச் தெருவில் 2 லட்ச ரூபாய் செலவில் போடப்பட்டுள்ள சிமென்ட் சாலை ஆகியவற்றை திறந்து வைத்தும் 3.07 லட்ச ரூபாய் செலவில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பஸ் ஸ்டாண்டிற்கு அடிக்கல் நாட்டுகிறார் சபாநாயகர் ஆவுடையப்பன்.இத்தகவலை விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் மாரியப்பன், நிர்வாக அதிகாரி முருகன் ஆகியோர் தெரிவித்தனர்.ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வாந்தி, பேதி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எம்.எல்..,அப்பாவு சந்தித்து ஆறுதல் கூறினார்.

Last Updated on Friday, 12 February 2010 07:50
 


Page 115 of 160