பெரம்பலூரில் ரூ.151 கோடியில் நலத் திட்டப் பணிகள்
Friday, 05 February 2010 09:49
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற மேம்பாடு
தினமணி 05.02.2010 பெரம்பலூரில் ரூ.151 கோடியில் நலத் திட்டப் பணிகள் பெரம்பலூர், பிப். 4: பெரம்பலூர் மாவட்டத்தில்,151 கோடியில் நலத் திட்டப் பணிகளை தொடக்கிவைத்தார் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் வியாழகிழமை நடைபெற்ற அரசு விழாவில், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ. 2 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரத்தில் அயன்பேரையூர் கிராமத்தில் சமத்துவபுரம் அமைத்தல், ரூ. 10 லட்சத்தில் பாளையம் கிராமத்தில் கூடுதல் பள்ளிக் கட்டடம், ரூ. 97 கோடியில் மருத்துவக் கல்லூரிக் கட்டடம், ரூ. 55 லட்சத்தில் செட்டிகுளம்-நக்கசேலம் சாலை மற்றும் செங்குணம்-முருக்கன்குடி-மங்கலமேடு சாலை அமைத்தல். ரூ. 29 லட்சத்து 25 ஆயிரத்தில் என். புதூர், விஜயபுரம், மேலகாலிங்கநல்லூர் கிராமங்களில் 3 வகுப்பறைக் கட்டடங்கள், ரூ. 20 லட்சத்தில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் வன ஓய்வு விடுதிக் கட்டடம் கட்டுதல், ரூ.1 கோடியே 81 லட்சத்து 40 ஆயிரத்தில் மேற்பார்வைப் பொறியாளர் கட்டடம், ரூ. 10 லட்சத்தில் உரக்குழிக்குச் செல்லும் தார்ச் சாலை அமைத்தல், ரூ.20 லட்சத்தில் உரக்குழிக்கு சுற்றுச்சுவர், சிமென்ட் தளம் அமைத்தல், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் ரூ. 1 கோடியில் ஒருங்கிணைந்த கூட்டுறவு கட்டடம் கட்டுதல், ரூ. 8 கோடியில், பெரம்பலூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் தொழில்நுட்பப் பயிலகக் கல்லூரிக் கட்டடம் அமைத்தல் உள்ளிட்ட 17 பணிகளுக்கு 112 கோடியே 25 லட்சத்து 5 ஆயிரத்தில் துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார். ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், காரை கிராமத்தில் ரூ. 2 கோடியே 37 லட்சத்து 43 ஆயிரத்தில் சமத்துவபுர கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள், ரூ. 5 லட்சத்தில் சித்தளி ஊராட்சி பீல்வாடி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை மற்றும் புஜங்கராயநல்லூர் கிராமத்தில் அங்கன்வாடிக் கட்டடம், ரூ. 12 லட்சத்தில் கொட்டரை மற்றும் அல்லிநகரம் ஊராட்சி மன்றக் கட்டடங்கள், ரூ. 16 லட்சத்தில் சமுதாயக்கூடம்,ரூ.19 லட்சத்து 10 ஆயிரத்தில் 2008-09ம் ஆண்டுக்கான நூலகக் கட்டடம், ரூ. 41 லட்சத்து 20 ஆயிரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, ரூ.1 கோடியே 69 லட்சத்து 71 ஆயிரத்தில் பாடாலூர் மற்றும் அனுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கழிவறை மற்றும் ஆய்வகக் கட்டடங்கள், ரூ. 81 லட்சத்தில் பிற்படுத்த்ப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான விடுதி, கூத்தனூர் கிராமத்தில் ரூ. 16 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், ரூ.81 லட்சத்தில் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம், ரூ.62 லட்சத்தில் ஆரம்பச் சுகாதார நிலையம், ரூ.10 லட்சத்தில் சித்தா மற்றும் ஹோமியோபதி கட்டடம், ரூ. 12 லட்சத்து 50 ஆயிரத்தில் கிளை நூலகக் கட்டடம், ரூ. 60 லட்சத்தில் தொழில்பயிற்சிக் கட்டடம், ரூ.1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரத்தில் குடிநீர் பணிகள், ரூ. 5 லட்சத்தில் பள்ளிகளுக்கு சுத்திகரிப்பு குடிநீர் வழங்கல் உள்ளிட்ட ரூ. 23 கோடியே 22 லட்சத்து 74 ஆயிரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் என 115 பணிகளை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, 1,000 மகளிர் சுய உதவிக்குழு உள்ளிட்ட 15366 பயனாளிகளுக்கு ரூ.16.40 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார் ஸ்டாலின்.
|
செம்மொழி மாநாடு: சாலை, பூங்கா மேம்பாட்டுக்கு ரூ.35 கோடி
Friday, 05 February 2010 09:44
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற மேம்பாடு
தினமணி 05.02.2010 செம்மொழி மாநாடு: சாலை, பூங்கா மேம்பாட்டுக்கு ரூ.35 கோடி சென்னை, பிப்.4: செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவையில் மாநகராட்சிக்குச் சொந்தமான சாலை, கழிப்பறை மற்றும் பூங்காக்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.35 கோடி ஒதுக்கப்படுவதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் ஜூன் 23}ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாடு நடைபெறுவதை ஒட்டி, கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சி மற்றும் அரசு சார்பில் தனித்தனியே இந்தப் பணிகள் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து, அரசுத் துறை வட்டாரங்களிடம் கேட்ட போது, ""மாநகராட்சி சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் ரூ.27 கோடி ஒதுக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை ஓரிரு நாளில் நிதித் துறை வெளியிடும். மேலும், அங்குள்ள பூங்காக்கள், கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தி அழகுபடுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.7 கோடியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தன. பல்வேறு திட்டங்கள்...கோவை மாநகரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் மின்சார வாரியம், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளும் இறங்கியுள்ளன. நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலைகள் ரூ.60 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அவினாசி, திருச்சி செல்லும் சாலைகளில் மின்கம்பிகள் கம்பங்கள் வழியே மேலே செல்கின்றன. அவற்றை பூமிக்கு அடியில் கொண்டு செல்ல ரூ.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், ஊராட்சி, பேரூராட்சி சாலைகளின் சீரமைப்புப் பணிக்கு தனியாக ரூ.4 கோடி செலவிடப்படுகிறது. உடனடியாக மேற்கொள்ளப்படுமா? உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை உடனடியாக முடிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக அரசுத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ""சாலை உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் மாநாடு தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிக்கப்படும். இப்போதே அனைத்துப் பணிகளையும் முடித்தால் சாலை, சுவர் உள்ளிட்டவற்றின் பொலிவு குறைந்து விடும். மாநாட்டின் போது அதன் சிறப்புத் தெரியாது. எனவே, நிதி ஒதுக்கல், மேம்பாட்டுப் பணிகளில் எந்தத் தாமதமும் ஏற்படவில்லை'' என்று விளக்கம் அளித்தனர்.
பெரம்பலூரில் நலத்திட்ட பணிகளை ஸ்டாலின் துவக்கி வைத்தார்
Friday, 05 February 2010 06:56
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற மேம்பாடு
தினமலர் 05.02.2010 பெரம்பலூரில் நலத்திட்ட பணிகளை ஸ்டாலின் துவக்கி வைத்தார்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட பெருந்திட்டவளாகத்தில் நேற்று மாலை நடந்த அரசு விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ 41லட்சம் மதிப்பிலான சிறுவர்பூங்கா, ரூ 2கோடியே 18லட்சம் மதிப்பிலான வேப்பூர் அரசு மருத்துவமனை கட்டடம், ரூ60லட்சம் மதிப்பிலான அரசு தொழிற்பயிற்சி கட்டடம், ரூ 70லட்சம் மதிப்பிலான மாவட்ட விளையாட்டு அரங்கம் உட்பட 115 பணிகளுக்கு ரூ. 23கோடியே 23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.ரூ. 97 கோடி மதிப்பிலான மருத்துவ கல்லூரி கட்டடம், ரூ 2.50கோடி மதிப்பிலான அயன்பேரையூர் சமத்துவபுரம், ரூ. ஒரு கோடியில் மதிப்பிலான ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் கட்டடம், வேலூரில் ரூ. 8 கோடி மதிப்பிலான மத்திய பாலிடெக்னிக் கட்டடம் உட்பட 17 பணிகளுக்கு ரூ 112.25 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி உட்பட 15ஆயிரத்து 366 பயனாளிகளுக்கு ரூ 16.40கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மொத்தம்ரூ. 151கோடி மதிப்பிலான நலத்திட்டப்பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். முன்னதாக காரையில் ரூ. 2கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவிற்கு மாவட்ட கலெக்டர் விஜயகுமார் தலைமை வகித்து பேசினார். இதில் மத்தியதொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை அமைச்சர் நெப்போலியன், எம்எல்ஏ ராஜ்குமார், டிஆர்ஓ பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் கொடியரசி, நகராட்சி தலைவர் ராஜா, யூனியன் சேர்மன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் விழாவில் மாநில அமைச்சர் செல்வராஜ், எம்எல்ஏ சிவசங்கர், திமுக மாவட்டச் செயலாளர் துரைசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் வெங்கடாஜலம், மகாதேவி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, தங்கராசு, ராஜேந்திரன், யூனியன் சேர்மன் முத்துக்கண்ணு, யூனியன் துணை சேர்மன் அசோகன், குரும்பலூர் பேரூராட்சி தலைவர் ரமணி ராணி, துணை தலைவர் பச்சமுத்து, நகராட்சி துணை தலைவர் முகுந்தன், துறைமங்கலம் செல்வமோகன்,நெடுவாசல் ராமலிங்கம்,நகராட்சி கவுன்சிலர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குநர் அமல்ராஜ் வரவேற்றார். நிறைவில் மகளிர் திட்ட அலுவலர் தெய்வநாயகி நன்றி கூறினார்.
Last Updated on Friday, 05 February 2010 06:58
|
|
|
|
Page 118 of 160 |