Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

நகர்புற மேம்பாட்டு திட்டம் ஆலோசனை குழு நியமிக்க முடிவு

Print PDF

தினமலர் 04.01.2010

நகர்புற மேம்பாட்டு திட்டம் ஆலோசனை குழு நியமிக்க முடிவு

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்ட நிதியுதவி பெற, "நகர்புற மேம்பாட்டுத் திட்டம்' தயாரிக்க தகுதியான ஆலோசனை குழு நியமிக்கப்படவுள்ளது.

திருச்சி மாநகராட்சி ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து நிதியுதவி பெற தகுதிபெற்றுள்ளது. இத்திட்டத்துக்கான கருத்துருவை வழங்குமாறு நகராட்சி நிர்வாகத் துறை கோரியுள்ளது.இத்திட்டத்தின் கீழ் நிதியினை பெற்று பணிகளை மேற்கொள்ளும் வகையில் நடப்பாண்டிற்கேற்ப மாநில அளவிலான கண்காணிப்புக் குழு மற்றும் மத்திய அரசு நகர்புற வளர்ச்சி அமைச்சகம் ஆகியவற்றிடம் சமர்பிப்பதுக்கு ஏதுவாக, "நகர்புற மேம்பாட்டு திட்டம்' தயாரிக்க வேண்டியுள்ளது.நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தினை தகுதியான ஆலோசனைக் குழு (கன்சல்டன்ஸி) மூலம் தயாரிக்கவும், குழு தேர்வு செய்ய விண்ணப்பம் வரவேற்கவும், அவர்களுக்கான கட்டணத் தொகைக்கும் அனுமதியளித்து கடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

50 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு வார்டு: சென்னை மாநகராட்சி வார்டுகள் 175 ஆக உயருகிறது ; எல்லை விரிவாக்க பணிகள் தொடக்கம்

Print PDF
மாலைமலர் 31.12.2009

50 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு வார்டு: சென்னை மாநகராட்சி வார்டுகள் 175 ஆக உயருகிறது ; எல்லை விரிவாக்க பணிகள் தொடக்கம்

சென்னை,டிச.31- சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவு படுத்தப்படுகிறது. அதன்படி கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம், ஆலந்தூர், உள்ளகரம் ஆகிய 9 நகராட்சிகளும் சின்ன சேக்காடு, புழல், போரூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் ஆகிய 8 நகர பஞ்சாயத்துகளும், 25 கிராம பஞ்சாயத்துகளும் இணைக்கப்பட்டு மாபெரும் நகரமாக சென்னை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

தற்போது சென்னை மாநகராட்சியின் நிலபரப்பு 174 சதுர கிலோமீட்டர். இனி 425 சதுர கிலோ மீட்டராக உயரும். மக்கள் தொகையும் 43 லட்சத்தில் இருந்து 56 லட்சமாக உயருகிறது.

மாநகராட்சி விரிவு படுத்தப்படுவதால் வார்டுகள் எண்ணிக்கையும் உயரும். தற்போது 155 வார்டுகள் உள்ளன. மாபெரும் சென்னையாக மாறும்போது 50 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு வார்டு என்று பிரிக்கப்படுகிறது. இதனால் வார்டுகளின் எண்ணிக்கை 175 ஆக உயரும் என்று தெரிகிறது.

அரசின் உத்தரவு இன்று மாநகராட்சி கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மாநகராட்சியில் இணைக்கப்பட உள்ள பகுதிகளுக்கான வார்டு எல்லைகள் நிர்ணயித்தல், மண்டலங்களை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி கமிஷனர் மேற்கொள்வார். சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்து கொள்ளவும் கமிஷனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உடனடியாக விரிவாக்க பணிகள் தொடங்க உள்ளது.இணைக்கப்பட உள்ள பகுதிகளில் எவ்வளவு பள்ளிகள் எங்கெங்கு அமைந்துள்ளன. சொத்து வரி எவ்வளவு வசூலிக்கப்படுகிறது. மருத்துவமனைகள் எவ்வளவு உள்ளன. புது மருத்துவமனைகள் எங்கெங்கு அமைக்கப்பட்ட வேண்டும். நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றும் அதிகாரிகள் பணி மூப்பு உள்பட பல்வேறு விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

 

செம்மொழி மாநாடு:புதிய பூங்கா உருவாக்க மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமணி 31.12.2009

செம்மொழி மாநாடு:புதிய பூங்கா உருவாக்க மாநகராட்சி திட்டம்

கோவை, டிச.30:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை மாநகராட்சி சார்பில் ரூ.112.85 கோடியில் பல்வேறு பணிகளைச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜூன் 23 முதல் 27}ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுகிறது. இதையொட்டி மாநகராட்சி சார்பில் ரூ.23.6 கோடியிலும், அரசின் நிதியுதவியில் ரூ.33.2 கோடியிலும், தனியார் பங்களிப்புடன் ரூ.56 கோடியிலும் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சி நிதியில் பள்ளி கட்டடங்கள், நிர்வாகக் கட்டடங்கள், பஸ் நிலையங்கள் மேம்படுத்தப்படும். புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும். உயர்கோபுர மின் விளக்குகள், தெருவிளக்குகள், குடிநீர் வசதி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழக அரசின் நிதியுதவியில் பள்ளிக் கழிவறைகள், மாநகராட்சி திருமண மண்டபங்கள், பொதுக் கழிப்பிடங்கள் மேம்படுத்தப்படும். இணைப்பு மற்றும் அணுகு சாலைகள் புதுப்பிக்கப்படும். நடமாடும் கழிப்பறைகள் வாங்கப்படும்.

தனியார் பங்களிப்பில், அவிநாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்படும்.ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், கட்டண கழிப்பிடங்கள் மேம்படுத்தப்படும்.

Last Updated on Thursday, 31 December 2009 10:05
 


Page 128 of 160