Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

தாமதமாகி வரும் திண்டுக்கல் நகராட்சி வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 20.11.2009

தாமதமாகி வரும் திண்டுக்கல் நகராட்சி வளர்ச்சிப் பணிகள்


திண்டுக்கல், நவ.19: திண்டுக்கல் நகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் தாமதமாகி வருகின்றன. ஓராண்டைக் கடந்த நிலையிலும் பணிகள் முடிவு பெறாததால் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது.

திண்டுக்கல் சவேரியார்பாளையம், பூச்சிநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் திருமண மண்டபங்களோ, அரங்கங்களோ இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்களது வீட்டு விழாக்களைக் கொண்டாடுவதற்காக இப்பகுதிகளில் சமுதாயக் கூடம் கட்டத் திட்டமிடப்பட்டது.

இதற்காக 2008-2009-ம் நிதி ஆண்டில் எம்.எல்.. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.7.8 லட்சம் வீதம் ரூ.15.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் அரங்கின் உள்பகுதிகளில் டைல்ஸ் கற்கள் பதிப்பதற்காகக் கூடுதலாக தலா ரூ.2 லட்சம் ஒதுக்கப்பட்டது. இத் திட்டத்துக்காக மொத்தம் ரூ.19.6 லட்சம் நிதி நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பூச்சி நாயக்கன்பட்டியில் அஸ்திவாரம் போடப்பட்டுள்ள நிலையிலும், சவேரியார்பாளையத்தில் முதல் தளம் வரை கட்டப்பட்டு பணிகள் பாதியிலேயே நின்று விட்டது.

இதுகுறித்து கே.பாலபாரதி எம்.எல்.. கூறுகையில், நிதி இல்லாமல் வளர்ச்சிப் பணிகள் தடைபட்டுப் போவது இயற்கையான விஷயம். ஆனால் நிதி முழு அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் பாதியிலேயே நின்றுள்ளன. இங்கு மட்டுமின்றி வார்டுகளில் சிமெண்ட் தளம், சுகாதார வளாகம், குடிநீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக 2009-09-ம் நிதி ஆண்டிற்காக எம்.எல்.. தொகுதி நிதியிலிருந்து நகராட்சிக்கு ரூ.95.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் சரியாக நடைபெறாமல் உள்ளது.

பிள்ளையார்பாளையத்தில் அடிகுழாய் மற்றும் மினிபம்ப் திட்டம், 44-வது வார்டு பள்ளிவாசல் பகுதியில் பவர் பம்ப் மினி பவர் பம்ப், 18-வது வார்டு சேவியர் தெருவில் சிமெண்ட் சாலை, சிறுபாலம், இரண்டாவது வார்டில் கழிவு நீரோடை, சிமெண்ட் தளம், 38-வது வார்டு பள்ளிவாசல் தெருவில் சிமெண்ட் தளம், கழிவுநீரோடை, கிழக்கு ஆரோக்கியமாதா தெரு கழிவுநீரோடை, சிமெண்ட் தளம், 10-வது வார்டு துப்புரவு தொழிலாளர் காலனியில் சுகாதார வளாகம், சிமெண்ட் தளம், 22-வது வார்டு ஆர்.வி. நகர் பகுதியில் சுகாதார வளாகம் உள்ளிட்ட பணிகளுக்கு முழு அளவில் நிதி ஒதுக்கியும் பணிகள் தடைபட்டுள்ளன.

அத்தியாசியப் பணிகளுக்கு நிதி இல்லை என்றாலும் கூட, வேறு நிதியைக் கொண்டு பணிகள் நடைபெற வேண்டும்.

ஆனால் திட்டத்திற்கு நிதி வழங்கி ஓராண்டாகியும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதற்கு நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணம்.

இது குறித்து ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 நாளில் பணிகள் துவக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார். ஆனால் ஒரு மாதம் ஆகியும் இதுவரை பணிகள் துவக்கப்படாமல் உள்ளது. பணிகளை உடனே துவக்க நகராட்சிக்கு ஆட்சியர் அறிவுறுத்த வேண்டும் என்றார்.

 

மரக்காணம் பேரூராட்சி பகுதியில் ரூ.1.34 கோடியில் நலத்திட்டங்கள்

Print PDF

தினமலர் 19.11.2009

 

மு.க. ஸ்டாலின் விழாவில் ரூ. 209 கோடிக்கு திட்டங்கள்

Print PDF

தினமணி 18.11.2009

மு.. ஸ்டாலின் விழாவில் ரூ. 209 கோடிக்கு திட்டங்கள்

தூத்துக்குடி, நவ. 17: தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 19-ம் தேதி தமிழக துணை முதல்வர் மு.. ஸ்டாலின் பங்கேற்கும் விழாக்களில் ரூ. 209.24 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

தமிழக துணை முதல்வர் மு.. ஸ்டாலின் வரும் 19-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது திறக்கப்படவுள்ள திட்டங்கள், அடிக்கல் நாட்டவுள்ள புதிய பணிகள், வழங்கப்படவுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

திறக்கப்படவுள்ள பணிகள்

ஏற்கனவே நிறைவு பெற்ற பல பணிகளை மு.. ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ. 13.53 கோடி மதிப்பிலான 534 பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ. 1.55 கோடி மதிப்பிலான 7 பணிகள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 75.65 கோடி மதிப்பிலான 79 பணிகள், பொதுப்பணித்துறை மூலம் ரூ. 25.27 கோடி மதிப்பிலான 13 பணிகள் என மொத்தம் ரூ. 116 கோடி மதிப்பிலான 623 பணிகளை மு.. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதில் 534 கட்டடப்பணிகள், 8 குடிநீர் பணிகள், 79 பாலங்கள், 2 இதர பணிகள் அடங்கும்.

அடிக்கல் நாட்டவுள்ள பணிகள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 8.02 கோடி மதிப்பிலான 135 பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ. 88 லட்சம் மதிப்பில் 5 பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ. 11.92 மதிப்பீட்டில் திருச்செந்தூர் பேரூராட்சிக்கான குடிநீர் திட்டம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 29.68 மதிப்பிலான 3 பணிகள், பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 9.72 கோடி மதிப்பிலான 18 பணிகள், வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை சார்பில் ரூ. 7.21 கோடி மதிப்பில் 6 பணிகள், மீன்வளத்துறை சார்பில் ரூ. 11.79 கோடி மதிப்பில் 2 பணிகள் என மொத்தம் ரூ. 79.22 கோடி மதிப்பிலான 170 பணிகளுக்கு துணை முதல்வர் மு.. ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளார். இதில், 152 கட்டடப் பணிகள், 10 குடிநீர் திட்டப்பணிகள், 3 பாலங்கள், 5 இதர பணிகள் அடங்கும்.

நலத்திட்ட உதவிகள்:

மகளிர் திட்டம் மூலம் 1125 பேருக்கு ரூ. 7.28 கோடி, ஊரக வளர்ச்சி துறை சார்பில் 183 பேருக்கு ரூ. 86.62 லட்சம், வருவாய் நிர்வாகத் துறை சார்பில் 219 பேருக்கு ரூ. 86.69 லட்சம், வருவாய் நிர்வாகத்துறை சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2,462 பேருக்கு ரூ. 29.76 லட்சம், தொழிலாளர் நலத்துறை சார்பில் 656 பேருக்கு ரூ. 14.79 லட்சம், சுகாதாரத்துறை சார்பில் 3,963 பேருக்கு ரூ. 2 கோடி, சமூக நலத்துறை சார்பில் 400 பேருக்கு ரூ. 80 லட்சம், ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை சார்பில் 1,514 பேருக்கு ரூ. 1.11 கோடி, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 193 பேருக்கு ரூ. 19.05 லட்சம் உள்ளிட்ட 15 துறைகள் சார்பில் 11,0002 பேருக்கு ரூ. 14.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. மொத்தத்தில் திறக்கப்படவுள்ள பணிகள் ரூ. 116 கோடி, அடிக்கல் நாட்டவுள்ள பணிகள் ரூ. 79.22 கோடி, நலத்திட்ட உதவிகள் ரூ. 14.02 கோடி என மொத்தம் ரூ. 209.24 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் அன்றைய தினம் நிறைவேற்றப்படவுள்ளன.

Last Updated on Wednesday, 18 November 2009 08:46
 


Page 139 of 160