Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி 12.11.2009

வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

போச்சம்பள்ளி, நவ.12: ஊத்தங்கரை பேரூராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் வே..சண்முகம் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

ஊத்தங்கரையில் விளையாட்டு மைதானம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

பேரூராட்சித் தலைவர் ஜெயலட்சுமி மகாலிங்கம், உதவி இயக்குநர் ருக்குமணி, பேரூராட்சி செயல் அலுவலர் சடையப்பன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்பனா, பெருமாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Last Updated on Friday, 13 November 2009 09:22
 

20 அம்சத் திட்டப் பணி: ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி 12.11.2009

20 அம்சத் திட்டப் பணி: ஆட்சியர் ஆய்வு

வேலூர், நவ. 12: வேலூர் மாவட்டத்தில் 20 அம்சத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து புதன்கிழமை ஆட்சியர் செ.ராஜேந்திரன் ஆய்வு செய்தார்.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி, பொருளாதாரக் கடன், வேளாண் பொறியியல் துறை மூலம் நவீன வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டம், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மழைநீர் சேகரிப்புத் திட்டம் ஆகிய பணிகள குறித்து அவர் ஆய்வு செய்தார்.

மேலும், தோட்டக்கலைத்துறை மூலம் மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம், தோட்க்கலை கன்றுகள் வளர்க்கும் திட்டம், பொதுப்பணித்துறைக்கு நிர்வாக நில உறுதித் திட்டம், சுகாதாரம், தடுப்பூசி போடுவது, வனத்துறை சார்பில் நடைபெறும் பணிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வழங்கப்படும் குடிநீர் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் மாணவ-மாணவிகள் விடுதிகள் நிலவரம், அவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள், கல்வி உதவித்தொகை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் ந.அருள்ஜோதிஅரசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இரா.ராதாகிருஷ்ணன், மகளிர் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் பிச்சைக்கண்ணு, வேளாண் பொறியியல் துறை பொறியாளர் ஸ்ரீதர், தோட்டக்கலைத்துறை அலுவலர் பொன்னு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ரஷீத், நகராட்சிகள் மண்டல துணை இயக்குநர் பாலசுப்பிரமணியம், தாட்கோ மேலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 13 November 2009 09:16
 

திருவோணத்தில் நாளை ரூ. 40.15 கோடியிலான திட்டப் பணிகளை ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார்

Print PDF

தினமணி 12.11.2009

திருவோணத்தில் நாளை ரூ. 40.15 கோடியிலான திட்டப் பணிகளை ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார்

தஞ்சாவூர், நவ. 11: தஞ்சாவூர் மாவட்டம், திருவோணத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 13) நடைபெறவுள்ள சமத்துவபுரம் திறப்பு, மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி அளிப்பு உள்ளிட்ட விழாவில் ரூ. 40.15 கோடியிலான திட்டப் பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடக்கிவைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் பொது விநியோகக் கட்டடம், சமுதாயக்கூடம் உள்ளிட்ட 6 பணிகள் ரூ. 20.42 லட்சத்தில் தொடங்கப்படுகின்றன.

அங்கன்வாடி, மயான கொட்டகை உள்ளிட்ட 10 பணிகள் ரூ. 26 லட்சத்தில் தொடங்கப்படுகின்றன. ஊராட்சி ஒன்றியக் கட்டடங்கள் இரு இடங்களில் ரூ. 3.44 கோடியில் தொடங்கப்படுகின்றன. வல்லம் போரூராட்சியில் ஊரக உள் கட்டமைப்பு திட்டப் பணிகள் ரூ. 20 லட்சத்தில் தொடங்கப்படுகின்றன. பள்ளிக் கட்டடங்கள், கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி, சுற்றுச்சுவர், ஆய்வகக் கட்டடம் மற்றும் ஆரம்ப சுகாதார கட்டடம் போன்ற பணிகள் ரூ. 20.44 கோடியில் தொடங்கப்படுகின்றன.

கல்வித் துறை மூலம் இரு பள்ளிக் கட்டடங்கள் ரூ. 2.58 கோடியில் கட்டப்படுகின்றன. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளிகளில் ஒன்று மற்றும் இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் மேற்கொள்ள ரூ. 2.28 கோடியில் பணிகள் தொடங்கப்படுகின்றன.

நகரக் குடிநீர் திட்டத்தின் கீழ், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தரைமட்டக் கிணறு உள்ளிட்ட பணிகள் ரூ. 9.95 கோடியில் தொடங்கப்படுகின்றன. சமத்துவபுரம், சுனாமி குடியிருப்பு வீடுகள், நூலகக் கட்டடம், வணிக வளாகம், சமுதாயக்கூடம், பொது விநியோகக் கட்டடம், நெல் கொள்முதல் நிலையக் கட்டடம், பயணிகள் நிழல்குடை, மருத்துவமனைக் கட்டடம், மாவட்டப் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட ரூ. 58.14 கோடியில் நிறைவேற்றப்பட்ட 673 திட்டங்களையும் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.

வீடுகள், இலவச மனைப் பட்டா, திருமண நிதியுதவி, தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ரூ. 8 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை 2,684 பயனாளிகளுக்கு ஸ்டாலின் வழங்குகிறார்.

திருவோணம் சந்தைத் திடலில் நடைபெறும் இந்த விழாவிற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தலைமை வகிக்கிறார். மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், தமிழக வணிக வரித் துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் வரவேற்றுப் பேசுகிறார். சட்டப்பேரவைஉறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), கி.. மகேஷ்கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்

Last Updated on Thursday, 12 November 2009 07:45
 


Page 141 of 160