Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

ரூ. 2000 கோடியில் 'கிரீன் பீல்ட் ஏர்போர்ட்'

Print PDF

தினமலர் 06.11.2009

 

இலவச வீட்டுமனைப் பட்டா விரைவில் வழங்க நடவடிக்கை

Print PDF

தினமணி 5.11.2009

இலவச வீட்டுமனைப் பட்டா விரைவில் வழங்க நடவடிக்கை

திருச்சி, நவ. 4: இலவச வீட்டுமனைப் பட்டா கோரி விண்ணப்பித்துள்ளோருக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு.

திருச்சி 31-வது வார்டில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 1789 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும், 44-வது வார்டு பகுதியைச் சேர்ந்த 271 குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகளையும் வழங்கி அவர் மேலும் பேசியது:

திருச்சி மாநகராட்சியின் 31-வது வார்டில் சாலை செப்பனிடும் பணி, வடிகால் அமைக்கும் பணி, நியாய விலைக் கட்டடம், கழிப்பிடம் கட்டும் பணிகள் ரூ. 68.25 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது ரூ. 2 லட்சத்தில் சாலை செப்பனிடும் பணிகளும், ரூ. 26.50 லட்சத்தில் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் பள்ளிக் கட்டடங்கள் கட்டும் பணியும் நடைபெற்று வருகின்றன.

44-வது வார்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 17.86 கோடியில் சாலை செப்பனிடும் பணி, வடிகால்கள், புதை வடிகால்கள் அமைத்தல், தெரு மின் விளக்குகள் அமைத்தல், குடிநீர்க் குழாய் பதித்தல், சமுதாயக்கூடம், உடல்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது ரூ. 24.80 லட்சத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் 60 வார்டுகளில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 110 லிட்டர் சீரான குடிநீர் வழங்க ரூ. 169 கோடியில் மாநகராட்சி குடிநீர் விரிவாக்கத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அமைச்சர் நேரு.

இந்த விழாக்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வ. தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.

எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா, துணை மேயர் மு. அன்பழகன். ஆணையர் த.தி. பால்சாமி, கோட்டத் தலைவர் எஸ். பாலமுருகன், மாநகராட்சி உறுப்பினர்கள் சீதாலட்சுமி முருகானந்தம், ஆர். ஹேமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 05 November 2009 06:25
 

ஆசாரிப்பள்ளம் பேரூராட்சியில் ரூ. 17 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 4.11.2009

ஆசாரிப்பள்ளம் பேரூராட்சியில் ரூ. 17 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

நாகர்கோவில், நவ. 3: ஆசாரிப்பள்ளம் பேரூராட்சிப் பகுதியில் ரூ. 17 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு குளச்சல் எம்எல்ஏ ஜெயபால் அடிக்கல் நாட்டினார்.

இப் பேரூராட்சிக்கு உள்பட்ட எறும்புகாடு என்ற இடத்தில் ரூ. 2.50 லட்சத்தில் படிப்பகம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 8 லட்சத்தில் ஆக்ஸிஜன் சேமிப்புக் கிடங்கு, ரூ. 2 லட்சத்தில் பழவிளையில் ஊர் படிப்பகம் கட்டுதல், தம்மத்துகோணம் ஞானம் காலனியில் ரூ. 3 லட்சத்தில் தெருக்களில் தார்தளம் அமைத்தல், ரூ. 1.50 லட்சத்தில் ஆசாரிப்பள்ளம் பேரூராட்சிப் பகுதியில் தெருவிளக்குகள் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

ஆசாரிப்பள்ளம் பேரூராட்சித் தலைவர் வில்லியம், உறுப்பினர்கள் பால்தங்கம், ராஜேந்திரன், திருப்பதி, மாவட்ட காங்கிரஸ் செயலர் கந்தசாமி, ராஜாக்கமங்கலம் வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல, கணபதிபுரம் அருகேயுள்ள புதூரில் ரூ. 2 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கை எம்எல்ஏ திறந்துவைத்தார். எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இதற்கான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஊர்ப் பிரமுகர் தங்கசாமி தலைமை வகித்தார். கணபதிபுரம் பேரூராட்சித் தலைவர் தாணுலிங்கம், செயல் அலுவலர் சேம்கிங்ஸ்டன், உறுப்பினர்கள் மணிகண்டராம், கார்மல் மேக்ளின், கலைச் செல்வி, கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 04 November 2009 06:28
 


Page 144 of 160