தினமணி 24.09.2009
ரூ.55 லட்சத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள்
திருக்கோவிலூர், செப். 23: திருக்கோவிலூர் அருகே ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் திட்டப் பணிகளை பேரூராட்சித் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து அரகண்டநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளான குளம் வெட்டுதல், சமுதாயக் கூடம் அமைத்தல், சிமென்ட் சாலை அமைத்தல், வணிக வளாகம் கட்டுதல் ஆகியவைகளை பேரூராட்சித் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பேரூராட்சி துணைத் தலைவரும் வழக்கறிஞருமான எஸ்.அன்பு, செயல் அலுவலர் ஊமைத்துரை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.