Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

குப்பைக்கழிவில் இருந்து மின்சாரம்: விஞ்ஞானிகள் ஆலோசனை

Print PDF
தின மணி             20.02.2013

குப்பைக்கழிவில் இருந்து மின்சாரம்: விஞ்ஞானிகள் ஆலோசனை

குப்பை மற்றும் கழிவு நீரில் இருந்து உரம், எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்ள் குறித்து மதுரையில் பாபா அணு ஆராய்ச்சி  நிலைய விஞ்ஞானிகள் ஆலோசித்தனர்.

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலைய கதிரியக்க தொழில்நுட்பங்களை  பயன்படுத்தி, இந்திய அளவில் கிராமப்புற வாழ்வாதாரங்களை மேம்படுத்த பல்வேறு  திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

அணு ஆராய்ச்சி நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர், மாவட்டம்தோறும் பயணம் செய்து, தாங்கள் செயல்படுத்த உள்ள திட்டங்களை  தெரிவித்து வருகின்றனர்.

ஆட்சியர் அலுவலகத்தில், இது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில்  விஞ்ஞானி எஸ்பி.காலே கூறியது:

கதிரியக்கத் தொழில்நுட்பம் மூலம் ஒரு டன் குப்பையில் இருந்து 1.5 கிலோ எரிவாயு மற்றும் இயற்கை உரம் தயாரிக்கவும், கழிவுநீரை நன்னீராக மாற்றி பாசனத்திற்கு பயன்படுத்தவும் உரம் தயாரிக்கவும் முடியும்.

இவற்றிற்கு ஆகும் செலவுத் தொகையை, 2 ஆண்டுகளில் மீண்டும் பெற்றுவிடலாம்.  விவசாயிகளின் விளை பொருள்கள் வீணாவதை தடுக்க உதவும்தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால், தானியங்கள் வீணாவதைத் தடுக்க முடியும்.

வீடுகளில் பயன்படுத்தக் கூடிய சுத்திகரிப்பு எந்திரங்களை எளிமையான முறையில் தயாரிக்க, சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கவும் திட்டங்கள் உள்ளன.

இதுபோனற தொழில் நுட்பங்களை, மதுரை மாவட்டத்தில் அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அருண்சுந்தர் தயாளன், பயிற்சி ஆட்சியர் அரவிந்த்,  பாபா  அணு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் டேனியல், செல்லப்பா, பிரீத்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Last Updated on Thursday, 21 February 2013 11:55
 

நவீன மீன் அங்காடி அமையும் இடம்:நகராட்சித் தலைவர் ஆய்வு

Print PDF
தின மணி               21.02.2013

நவீன மீன் அங்காடி அமையும் இடம்:நகராட்சித் தலைவர் ஆய்வு

சிதம்பரத்தில் ரூ.93 லட்சம் செலவில் அமைக்கப்படவுள்ள நவீன மீன் அங்காடி பணிகளை நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலா சுந்தர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

சிதம்பரம் வடக்கு மெயின்ரோடு மீன் மார்க்கெட் பகுதியில் ஹைதராபாத் தேசிய மீன்வளர்ச்சி கழகம் வழங்கிய ரூ.83 லட்சம் நிதி மற்றும் சிதம்பரம் நகராட்சி வழங்கிய நிதி ரூ.10 லட்சம் ஆக மொத்தம் ரூ.93 லட்சம் செலவில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படவுள்ளது. அதற்கான பணியை நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் அ.தி.மு.க. நகரச் செயலர் தோப்பு கே.சுந்தர், நகர்மன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், ஆணையர்(பொறுப்பு) ஆர்.செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Last Updated on Thursday, 21 February 2013 11:22
 

மாநகராட்சியின் புதிய மண்டலங்களில் ரூ3000 கோடியில் வெள்ள தடுப்பு பணி

Print PDF
தினகரன்           31.08.2012

மாநகராட்சியின் புதிய மண்டலங்களில் ரூ3000 கோடியில் வெள்ள தடுப்பு பணி

சென்னை, : மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புதிய மண்டலங்களில் ரூ3000 கோடி மதிப்பீட்டில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்காக 1,055 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய்கள் அமைக்கப்படுகின்றன. இந்த வெள்ளத்தடுப்பு கால்வாய் கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம், கோவளம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளன. அதில், கொசஸ்தலையாறு பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு அதனுடன் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மண்டலங்கள் மற்றும் அம்பத்தூரில் சில மண்டல பகுதிகள் இணைக்கப்படுகிறது. அடையாறு ஆற்றுப்பகுதியில் வளசரவாக்கம், ஆலந்தூர் ஆகிய மண்டலங்களும், அம்பத்தூர், வளசரவாக்கம் மண்டலத்தின் சில பகுதிகள் கூவம் ஆற்றிலும் இணைக்கப்படுகிறது.

புதிய வெள்ளத்தடுப்பு திட்டத்தில் கோவளம் ஆற்றுப்படுகையில் சோழிங்கநல்லூர், பெருங்குடி ஆகிய மண்டலங்கள் பயன்பெறும். புதிதாக இணைக்கப்பட்ட 8 மண்டலங்களில் குடியிருப்புவாசிகளின் கருத்துகள் கேட்கப்பட்டு தேவையான மாற்றங்கள் செய்யப்படும். இறுதி அறிக்கை அநேகமாக செப்டம்பர் 20ம் தேதி சமர்ப்பிக் கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 7 மண்டலங்களில் ஜவர்ஹர்லால் நேரு நகர் புனரமைப்பு திட்டத்தின் கீழ் 505 கி.மீ. நீளத்திற்கு வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.புதிதாக சேர்ந்த மாநகராட்சி பகுதியில் 2,752 கி.மீ. நீளம் சாலைகள் இணைந்துள்ளன. ஆனால், 682.4 கி.மீ. தொலைவிற்கு மட்டும் வெள்ளநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 8 மண்டலங்களில் அம்பத்தூரில் தான் மிக அதிகளவில், அதாவது 177.95 கி.மீ. நீளத்திற்கு வெள்ளநீர் தடுப்பு மற்றும் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவொற்றியூரில் மிகவும் குறைந்த அளவே இந்த பணி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி, உத்தண்டி ஆகிய பேரூராட்சிகள் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட போதிலும் கூட இங்கு வெள்ள தடுப்பு கால்வாய் பணிகள் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் கூறினர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘புதிய மண்டலங்களில் மேலும் ஏராளமான பகுதிகள் பயனடையும் வகையில் வெள்ளநீர் கால்வாய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றனர்.
 


Page 24 of 160