Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

சிவகாசியில் ரூ1.34 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி                  22.08.2012

சிவகாசியில் ரூ1.34 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

சிவகாசி, ஆக. 21: சிவகாசியில் ரூ.1.34 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளதாக நகர்மன்றத் தலைவர் வெ.க.கதிரவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது செய்திக் குறிப்பு:

சிவகாசி நகராட்சிப் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2012-2013-ன் கீழ் ரூ.1.34 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளன.21-ம் வார்டு சிவகாசி-கட்டளைப்பட்டி சாலையில் தார் சாலை அமைக்க ரூ.10 லட்சம், 26-ம் வார்டு ஜே. நகரில் தார் சாலை அமைக்க ரூ.8.50 லட்சம், 6-ம் வார்டு தமிழ் நகரில் தார் சாலை அமைக்க ரூ.4.25 லட்சம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

11-ம் வார்டு பாரதி நகரில் பேவர் பிளாக் பதிக்க ரூ.9 லட்சம், 1-ம் வார்டு கந்தபுரம் காலனியில் பேவர் பிளாக் அமைக்க ரூ.15.90 லட்சம், 25-ம் வார்டு முண்டகன் தெருவில் பேவர் பிளாக் அமைக்க ரூ.5.30 லட்சம், 22-ம் வார்டு பேராண்டம்மாள் தெருவில் பேவர் பிளாக் அமைக்க ரூ.4.50 லட்சம், 29-ம் வார்டு குட்டியணைஞ்சான் தெருவில் பேவர் பிளாக் அமைக்க ரூ.6.80 லட்சம், 19-ம் வார்டு முஸ்லிம் வடக்குத் தெருவில் பேவர் பிளாக் அமைக்க ரூ.4 லட்சம், 10-ம் வார்டு சாமிபுரம் காலனியில் பேவர் பிளாக் அமைக்க ரூ.5.20 லட்சம், 8-ம் வார்டு பி.கே.எஸ்.ஏ.ஆறுமுகம் சாலையில் பேவர் பிளாக் அமைக்க ரூ.5.30 லட்சம், 2-ம் வார்டு அண்ணா காலனி குறுக்குத் தெருவில் பேவர் பிளாக் அமைக்க ரூ.11 லட்சம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

31-ம் வார்டு தெய்வானை நகரில் ரூ.14.50 லட்சம் மதிப்பில் வாறுகால் அமைக்கவும், சாத்தூர் சாலையில் வாறுகால் அமைக்க ரூ.14 லட்சம், தினசரி காய்கறி சந்தை அருகே வாறுகால் அமைக்க ரூ.10.25 லட்சம், முதலாவது வார்டு கந்தபுரம் காலனியில் வாறுகால் அமைக்க ரூ.6.25 லட்சம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

 

விரிவாக்கப் பகுதிகளில் ரூ.30 கோடியில் 100 புதிய பூங்காக்கள்

Print PDF
தினமலர்                       21.08.2012

விரிவாக்கப் பகுதிகளில் ரூ.30 கோடியில் 100 புதிய பூங்காக்கள்

சென்னை:மூலிகை செடியின் நறுமணம், பண்பலை வானொலியின் இசை ரீங்காரம், சிறார் விளையாட வசதியுடன், சென்னை விரிவாக்கப் பகுதிகளில், 30 கோடி ரூபாயில், புதிதாக, 100 பூங்காக்கள் அமைய உள்ளன. மாநகராட்சி, இதற்கான ஒப்பந்தத்தை கோரியுள்ளது.சென்னை விரிவாக்கப் பகுதிகளில், புதிதாக, 100 பூங்காக்கள் அமைக்கப்படும் என, சமீபத்திய மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, பூங்கா அமைக்க வேண்டிய இடங்களை தேர்வு செய்யும் பணி நடந்தது. இதன்படி, 191 இடங்கள் கண்டறியப்பட்டன. இப்பணிகள் முடிந்த நிலையில், விரிவாக்கப் பகுதியில் உள்ள, எட்டு மண்டலங்களிலும், முதற்கட்டமாக, 100 பூங்காக்கள் அமைக்கப்படும் என, அறிவித்துள்ளது.
 
திருவொற்றியூர் - 7 இடங்களிலும், மணலி -6, மாதவரம் -17, அம்பத்தூர் - 22, வளசரவாக்கம் - 18, ஆலந்தூர் - 9, பெருங்குடி - 12, சோழிங்கநல்லூர் -9 இடங்களிலும், பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான, இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.இப்பணிகள் அறிவிப்போடு முடங்கிவிடுமோ என எதிர்பார்த்த நிலையில், பூங்காக்களை அமைக்க, மாநகராட்சி, பல்வேறு கட்டமாக ஒப்பந்தம் கோரியுள்ளது. இதில், பிரத்யேக அனுபவம் உள்ளோர் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் திறப்பு, இம்மாதம் 24, 31, அடுத்த மாதம் 7ம் தேதிகளில், நடக்க உள்ளது.30 கோடி ரூபாய்மொத்தம், 100 பூங்காக்களை அமைக்க, 30 கோடி ரூபாய் செலவாகும் என, திட்டமிடப் பட்டு உள்ளது.
 
மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து, இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப் படும். பூங்காவின் பரப்பிற்கு ஏற்ப, ஐந்து லட்சம் ரூபாயில் இருந்து, 50 லட்சம் ரூபாய் வரை செலவிடப்படும் என, தெரிகிறது.சீரழியும் பூங்காக்கள்மாநகராட்சியில் ஏற்கனவே, 260 பூங்காக்கள், 103 சாலை மையத்தடுப்பு பூங்காக்கள், 154 போக்குவரத்து தீவு பூங்காக்கள் பராமரிக்கப்படுவதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால், குறிப் பிட்ட சில பூங்காக்கள் தவிர, பல சாலையோர பூங்காக்கள், போதிய பராமரிப்பின்றி, மிக மோசமான நிலையிலேயே உள்ளன.மெரீனா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தில், நேப்பியர் பாலம் முதல், கலங்கரை விளக்கம் வரை, 3 கி.மீ., தூரத்திற்கு, 17 கோடி ரூபாயில், பூங்கா அமைக்கப் பட்டது.
 
இது, பராமரிப்பு இல்லாமல், பல்வேறு பகுதிகளிலும், புற்கள் காய்ந்து, பொட்டல் தரையாக மாறிவருகிறது.மாநகராட்சி சொல்வது என்ன?இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ""விரிவாக்கப் பகுதி மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, பிரத்யேகமாக அங்கு, 100 பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, இன்னும் இரண்டு மாதத்திற்குள் பணிகள் துவங்கும்.தற்போதுள்ள பூங்காக்கள், இதர பசுமைப் பகுதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. சி.எம்.டி.ஏ., ஒப்படைக்கும் திறந்த வெளி நிலங்களில், பூங்கா, சிறுவர் விளையாட்டுத் திடல்கள் அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,'' என்றனர்.

கூடுதல் வசதிகள் :
வழக்கமான செடிகள் தவிர, மூலிகைச் செடிகள் அதிகம் இடம்பெறும்.பண்பலை ஒலிபரப்பப்படும். பூங்காவிற்கு, இயற்கை காற்றை சுவாசிக்க வருவோர், பாட்டு, நிகழ்வுகளை கேட்டு ரசிக்கலாம்.கடிகாரங்கள் நிறுவப்படும்.சிறுவர்கள் விளையாட, தேவையான வசதிகள் இருக்கும்.
Last Updated on Tuesday, 21 August 2012 05:38
 

ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமணி         08.08.2012

ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

சென்னை, ஆக., 08 :  “ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்” என்ற திட்டத்தின்படி, இந்த ஆண்டு அதாவது 2012-13 ஆம் ஆண்டிலும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்திட, சென்னை தவிர பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு 500 கோடி ரூபாயும், பேரூராட்சிகளுக்கு 250 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து  முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சிகளின் அலுவலகங்களுக்கு அதிக அளவில் பொதுமக்கள் வருகைப் புரிவதைக் கருத்தில் கொண்டும், பழைய கட்டடங்களில் இயங்கி வரும் பேரூராட்சி அலுவலகங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றியமையக்கும் பொருட்டும், எல்லா பேரூராட்சிகளுக்கும் புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டித்தர முதலமைச்சர்   தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.

இதன் அடிப்படையில், இந்த ஆண்டு அதாவது 2012-13 ஆம் ஆண்டில் வேலூர் மாவட்டத்திலுள்ள பென்னாத்தூர் பேரூராட்சி, சேலம் மாவட்டத்திலுள்ள பனைமரத்துப்பட்டி பேரூராட்சி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரகண்டநல்லூர் பேரூராட்சி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பண்ணைக்காடு பேரூராட்சி, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிப்பாளையம் மற்றும் பள்ளப்பாளையம் பேரூராட்சிகள், ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை மற்றும் வெங்கம்பூர் பேரூராட்சிகள், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதி மற்றும் சாயல்குடி பேரூராட்சிகள், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு, திருக்குருங்குடி, பத்தமடை மற்றும் திசையன்விளை பேரூராட்சிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ரல்வாய்மொழி பேரூராட்சி என 15 பேரூராட்சிகளுக்கு அலுவலகக் கட்டடம் கட்ட பேரூராட்சி ஒன்றுக்கு 40 லட்சம் ரூபாய் வீதம் 6 கோடி ரூபாயும், திருநெல்வெலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு 1 கோடி ரூபாயும் என மொத்தம் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து  முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைகளினால், தமிழகத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மேம்படவும், உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மேன்மை அடைவதற்கும் வழிவகை ஏற்படும் என்றும் தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 


Page 27 of 160