தினகரன் 26.05.2010
2 மாதத்தில் முடிக்க நடவடிக்கை மாநகராட்சி வரி வசூலை உயர்த்த சொத்துக்களுக்கு அடையாள எண்
பெங்களூர், மே 26: மாநகரில் உள்ள அனைத்து சொத்துக் களையும் அடையாளம் கண்டு ஆய்வு செய்து அடுத்த இரண்டு மாதத்தில் சொத்து அடையாள எண்ணை உரிமையாள ருக்கு வழங்கும் பணிகளை துவக்க இருக்கிறது.
இது குறித்து பெங்களூர் மாநகராட்சி ஐ.டி.துறை வட்டாரங்கள் கூறியதாவது: சொத்துகளுக்கு அடையாள எண் தரும் திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. இதனால் சொத்துவரி வருமானம் அதிகரிக்கும். மல்லேஸ்வரம் சவுடய்யா நினைவு ஹால் அருகில் அமைந்துள்ள ஐ.டி. துறை அலுவலகத்தில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
தேசிய ரிமோட் சென்சிங் ஆணையத்தின் உதவியை ஐ.டி.செல் கேட்டுள்ளது. வார்டு, தெரு, வீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு சொத்துக்கள் அடையாளம் காணப்படும். நகரத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளில் உள்ள வீடுகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுவிட்டன.
அடுத்த கட்டமாக இந்த சொத்துக்களுக்கு சமச் சீரான எண்களை வழங்க வேண்டும். சொத்துக் களை அடையாளம் கண்ட பிறகு, சமச்சீரான எண்களை வழங்குதல் சிக்கலான காரியம். ஆனால் நம்பிக்கையுடன் இப்பணிகளை செய்துவருகி றோம். 40 முதல் 60 நாட்க ளில் இப்பணிகளை முடிக்க முயற்சி செய்வோம். இத னால் மாநகராட்சிக்கு ரூ.1,100 கோடி சொத்துவரி மூலம் வருவாய் வரும். தற்போது 65 முதல் 75% தான் சொத்துவரி வரு வாய் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.