Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை திட்ட டிபாசிட் 2 தவணையில் செலுத்த வாய்ப்பு: நகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினகரன்        27.05.2010

பாதாள சாக்கடை திட்ட டிபாசிட் 2 தவணையில் செலுத்த வாய்ப்பு: நகராட்சி கமிஷனர் தகவல்

ராமநாதபுரம்:""ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இரண்டு மாதங்களில் செயல்பட உள்ள நிலையில், பொது மக்கள் டிபாசிட் தொகையை இரண்டு தவணையில் செலுத்தலாம்,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டு தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது திட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் பொது மக்கள் இணைப்பு பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நகராட்சி சார்பில் டிபாசிட் தொகையை இரண்டு தவணைகளாக கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது நகராட்சி கமிஷனர் முஜ்புர்ரஹ்மான் கூறியதாவது: பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்து இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் பாதாள சாக்கடை இணைப் பிற்காக பொது மக்கள் தங்களது வீட்டில் ஒன்றரைக்கு ஒன்றரை அளவில் ஜங்சன் பாக்ஸ் கட்டி கொள்ள வேண்டும்இதற்கான மாதிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது ஜங்சன் பாக்ஸ் கட்டியபின் நகாட்சி பணியாளர்கள் மூலம் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கப்படும் மேலும் மக்களின் வசதிக்காக வீட்டு உபயோகத்திற்கான டிபாசிட் தொகை 7000 ரூபாயை இரண்டு தவணையில் செலுத்தலாம், என்றார்