தினகரன் 08.06.2010
சொத்து வரி கட்டாவிட்டால் வீட்டு முன்பு தண்டோரா போட்டு ஜப்தி செய்யப்படும்
தக்கலை, ஜூன் 8: பத்மனாபபுரம் நகராட்சி ஆணையாளர் செல்லமுத்து விடுத்துள்ள அறிக்கை:
பத்மனாபபுரம் நகராட்சிக்கு 2009&10ம் ஆண்டு சொத்து வரி 47.97 லட்சம் தொகை வசூல் செயல்பட்டுள்ளது. ரூ. 10 லட்சத்து 60 ஆயிரம் நிலுவையாக உள்ளது. நிலுவை தொகையினையும், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு 2010&11&ம் முதலாண்டுக்கான சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை கட்டணம், நிலுவையின்றி இம்மாதத்திற்குள் செலுத்திட வேண்டும். வரி செலுத்த தவறினால் உரிமையாளர் வீட்டு முன்பு தண்டோரா போட்டு ஜப்தி செய்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படுவதுடன் குடிநீர் குழாய் இணைப்பும் துண்டிக்கப்படும். இதனை தவிர்க்கும் பொருட்டு நிலுவைத் தொகையை நகராட்சி அலுவலகத்தில் செலுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.