Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அதிகாரி தகவல் பண்ணை வீடுகளில் திருமணம் கட்டணம் ரூ.25,000 ஆக உயர்வு

Print PDF

தினகரன் 22.06.2010

மாநகராட்சி அதிகாரி தகவல் பண்ணை வீடுகளில் திருமணம் கட்டணம் ரூ.25,000 ஆக உயர்வு

புதுடெல்லி, ஜூன் 22:பண்ணை வீடுகளில் திருமணம் நடத்த தினசரி கட்டணம் ரூ.25,000 ஆக உயர்த்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

டெல்லியில் தனியாரு க்கு சொந்தமான பண் ணை வீடுகள் உள்ளன. இவற்றில் திருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதற்காக பண்ணை வீட்டு சொந்தக்காரர்கள் தினசரி வாடகையாக லட்சக்கணக்கில் வசூலிக்கின்றனர். வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பண்ணை வீடுகளிடம் இருந்து மாநகராட்சி சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பண்ணை வீடுகளுக்கான கட்டணத்தை மாநகராட்சி உயர்த்தி உள்ளது.

இதுபற்றி மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநகராட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் தனியார் பண்ணை வீடுகளுக்கான கட்டணத்தை உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இப்போது 5 ஏக்கர் பரப்பளவுடன் கூடிய பண்ணை வீடுகளுக்கு நாளொன்றுக்கு 20,000 ரூபாயும், 5 ஏக்கருக்கும் குறைவான பண்ணை வீடுகளுக்கு நாளொன்றுக்கு 10,000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இனிமேல் 2.5 ஏக்கர் மற்றும் அதற்கு குறைவான பரப்பளவில் அமைந்துள்ள பண்னை வீட்டுக்கு நாளொ ன்றுக்கு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படும். அதற்கு மேல் 5 ஏக்கர் வரையிலான பண்ணை வீடுகளுக்கு நாளொன்றுக்கு கட்டணமாக ரூ.50,000 வசூலிக்கப்படும். அதேபோல 5 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட பண்ணை வீடுகளுக்கு ஒரு நாள் கட்டணமாக ரூ.1 லட்சம் வசூலிக்கப்படும்.

இந்த பண்ணை வீடுகள் அனைத்தும் மாநகராட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டு இருக்க வேண்டும். இவற்றில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம். அப்போது காதைப் பிளக்கும்படி ஒலிபெருக்கி வைக்கக் கூடாது. பண்ணை வீட்டின் எல்லைப் பகுதிகளுக்குள் மட்டுமே அரசு அனுமதி பெற்ற பட்டாசுகளை வெடிக்கலாம்.

மாப்பிள்ளை அழைப்புக்காக குதிரை சாரட் மற்றும் ஊர்வலங்களை சாலையில் நடத்த அனுமதி இல்லை. பண்ணை வீடுகளில் வாகனங்களை நிறுத்த முறையான ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும்.

அத்துடன் வாகனங்கள் உள்ளே செல்லவும் வெளியே வரவும் தனித்தனியாக இரு வழிகளை அமைத்து இருக்க வேண்டும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பண்ணை வீட்டு அதிபரே செய்ய வேண்டும். சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க முடியாது.

இவற்றில் ஆண்டுக்கு 120 நிகழ்ச்சிகள் நடத்த மட்டுமே அனுமதிக்கப்படும். ஒரே நாளில் 2 நிகழ்ச்சிகள் நடத்தப்படுமானால் அதற்காக 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரி கூறினார்.