Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சியில் வாகனம் மூலம் வரி வசூல் தீவிரம் வார்டு வாரியாக செல்ல ஏற்பாடு

Print PDF

தினகரன் 20.07.2010

நெல்லை மாநகராட்சியில் வாகனம் மூலம் வரி வசூல் தீவிரம் வார்டு வாரியாக செல்ல ஏற்பாடு

நெல்லை, ஜூலை 20: நெல்லை மாநகராட்சியில் நிலுவை மற்றும் நடப்பு வரிகளை வாகனம் மூலம் வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நெல்லை மாநகராட்சி அலுவலகம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:

நெல்லை மாநகராட்சியில் நிலுவை மற்றும் நடப்பு வரிகளை வாகனம் மூலம் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை வார்டு 18வது வார்டில் ஆரோக்கியநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் 1 மணி வரையும், வார்டு 20ல் செயின்ட் பால்ஸ் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரையும், 22ம் தேதி வார்டு 19ல் மின்சார வாரியம் அலுவலகம் (முன்பு) மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, பெருமாள்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை யும், 23ம் தேதி வார்டு 42ல் வாகையடி முக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், வார்டு 45ல் பேட்டை செக்கடி அருகில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதியம் 2 முதல் மாலை 5 மணி வரையும், 24ம் தேதி வார்டு 54ல் அக்கசாலை விநாயகர் கோயில் தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், புட்டாரத்தி அம்மன் கோயில் தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் வரி வசூல் செய்யப்படும்.

26ம் தேதி வார்டு 23ல் பெருமாள் மேல ரதவீதி அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், வார்டு 23ல் கிருஷ்ணன்கோயில் கீழத்தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும், 27ம் தேதி வார்டு 27ல் என்.ஜி.ஓ.ஏ காலனி பஜார் அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 28ம் தேதி வார்டு 42ல் பெருமாள் சன்னதி தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், வார்டு 52ல் டவுன் உழவர் சந்தை அருகில் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் வரி வசூல் செய்யப்படும்.

29ம் தேதி வார்டு 2 மற்றும் 3ல் செல்வ விக்னேஷ்நகர், நன்மெய்யப்பன் தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், இதே வார்டுகளில் பாலாஜி அவென்யூ மதுரை ரோடு அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும், 30ம் தேதி வார்டு 25ல் திருவனந்தபுரம் ரோடு அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், இதே வார்டில் புதுப்பேட்டை தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதியம் 2 முதல் மாலை 5 மணி வரையும், 31ம் தேதி வார்டு 36ல் காயிதேமில்லத் பள்ளி வாசல் அருகில் அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், இதே வார்டில் மேலப்பாளையம் பஜார் திடல் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை வரி வசூல் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.