Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மும்பையில் சொத்து வரி வசூலிப்பதில் சிக்கல்

Print PDF

தினகரன் 28.07.2010ச்

மும்பையில் சொத்து வரி வசூலிப்பதில் சிக்கல்

மும்பை,ஜூலை 28: மும்பையில் சொத்து வரி பில்களை அனுப்ப மாநில அரசு ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருகிறது.

மும்பையில் புதிய சொத்து வரி விதிப்பு திட்டம் தயார் நிலையில் இருந்தும் அதனை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அக்டோ பர் மாதத்தில் இருந்து புதிய சொத்து வரி விதிப்பு திட்டம் அமலுக்கு வரும் என்று கருதப் படுகிறது. எனவே பழைய சொத்து வரியின் கீழ் சொத்து வரிகளை வசூலிக்க மாநில நகர மேம்பாட்டுத்துறையிடம் மும்பை மாநகராட்சி ஒப்புதல் கேட்டுள்ளது. ஆனால் மாநில நகர மேம்பாட்டுத்துறை இதற்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத் தடித்து வருகிறது.

இதனால் மாநக ராட்சிக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சொத்து வரியாக 2660 கோடி ரூபாய் வசூலானது என்பது குறிப் பிடத்தக்கது.