தினமலர் 10.08.2010
நெல்லை மாநகர வார்டுகளில் தீவிர வரிவசூல் முகாம்
திருநெல்வேலி : நெல்லை மாநகரில் நிலுவை மற்றும் நடப்பு வரிகளை வசூலிக்கும் பொருட்டு நடமாடும் வரி வசூல் வாகனம் வார்டு வாரியாக அனுப்பி வரிவசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நெல்லை மாநகராட்சி பகுதியில் தற்போது பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை அருகில் உளள வார்டு அலுவலகங்கள் மற்றும் அலகு அலுவலகங்களில் செலுத்தி வருகின்றனர்.
தற்போது பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சியின் நடமாடும் வரிவசூல் வாகனம் மூலம் ஒவ்வொரு தெருவாக சென்று வரி வசூல் செய்யப்படவுள்ளது. அதன் விவரம்:நாளை(11ம்தேதி) காலை 9 முதல் 1 மணி வரை நெல்லை டவுன் வாகையடி முக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், மதியம் 2 முதல் மாலை 5மணி வரை பேட்டை செக்கடி அருகில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், 12ம்தேதி காலை 9முதல் 1 மணி வரை திருவனந்தபுரம் ரோடு மற்றும் சுற்றுப்பகுதிகளிலும், மாலை 2 முதல் 5மணி வரை வசந்த்நகர், கொக்கிரகுளம் மற்றும் சுற்றுப்பகுதிகளிலும் வரிவசூல் வாகனம் நிறுத்தப்படவுள்ளது.
13ம்தேதி 23வதுவார்ட்டிற்குட்பட்ட மேலரதவீதி(நமச்சிவாயம் மகால்) பெருமாள் கீழ ரதவீதிமற்றும் சுற்றுப்பகுதிகளிலும், மாலை 2 முதல் 5 மணி வரை கிருஷ்ணகோவில் கீழ தெரு மற்றும் சுற்றுப்பகுதிகளிலும், 14ம்தேதி காலை 9 முதல் மதியம் 2மணி வரை 19 மற்றும் 26வது வார்டிற்குட்பட்ட மின்வாரிய அலுவலகம் மற்றும் சுற்றுப்பகுதிகளிலும், மாலை 2 முதல் 5மணி வரை திருமால் நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளிலும், 16ம்தேதி காலை 9 முதல் மதியம் 2மணி வரை 53வது வார்டிற்குட்பட்ட பெரிய தெரு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், மதியம் 2 முதல் 5மணி வரை உழவர்சந்தை(கண்டியப்பேரி) அதன் சுற்றுப்பகுதிகளிலும் வரி வசூல் வாகனம் நிறுத்தப்படவுள்ளது.
17ம்தேதி காலை 9 முதல் 1மணி வரை 54 மற்றும் 55 வார்டிற்குட்பட்ட அக்கசாலை விநாயகர் கோயில் தெரு மற்றும் சுற்றுப்பகுதிகளிலும், மதியம் 2 முதல் 5மணி வரை புட்டாரத்தி அம்மன் கோயில் தெரு மற்றும் அதன் சுற்றுப்பகுதகிளிலும், 18ம்தேதி காலை 9 முதல் 1மணி வரை 21வது வார்டிற்குட்பட்ட மிலிட்டரி லைன் தெரு(சமாதானபுரம் ரவுண்டானா) அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், மாலை 2 முதல் 5மணி வரை வடக்கு மேட்டுத்திடல்ரோடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் வாகனம் நிறுத்தப்படவுள்ளது.19ம்தேதி காலை 9 முதல் 1மணி வரை குலவணிகர்புரம் சர்ச் அருகில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், மாலை 2 முதல் 5மணி வரை 29வது வார்டிற்குட்பட்ட வி.எஸ்.டி பள்ளிவாசல் பஜார்திடல் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், 20ம்தேதி காலை 9 முதல் 1மணி வரை 44-வது வார்டிற்குட்பட்ட மேட்டுத் தெரு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், மாலை 2 முதல் 5மணி வரை 41வது வார்டிற்குட்பட்ட கீழரதவீதி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் வரி வசூல் வாகனம் நிறுத்தப்படவுள்ளது.பொதுமக்கள் மாநகராட்சியின் நடமாடும் வரிவசூல் வாகனம் தங்களது தெருக்களுக்கு வரும் போது நடப்பு மற்றும் நிலுவை வரிகளை செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை தவிர்க்கலாம்.இத்தகவலை மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.