தினமணி 10.08.2010
நாளை முதல் தீவிர வரிவசூல் முகாம்
திருநெல்வேலி, ஆக. 9: திருநெல்வேலி மாநகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் புதன்கிழமை (ஆக. 11) முதல் தீவிர வரிவசூல் முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாநகராட்சியின் நிலுவை மற்றும் நடப்பு வரிகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடமாடும் வரிவசூல் வாகனம் மூலம் வார்டு வாரியாக வரிவசூல் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகங்கள் தவிர்த்து, நடமாடும் வரிவசூல் வாகனத்திலும் வரியை பொதுமக்கள் செலுத்தலாம்.
இந்த வரிவசூல் வாகனத்தில், பொதுமக்கள் தங்களுடைய நடப்பு மற்றும் நிலுவை வரிகளை செலுத்தி குடிநீர் துண்டிப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம்.
இந்த வாகனம் இம் மாதம் 11 ஆம் தேதி காலை 42-வது வார்டு, மாலை 45-வது வார்டு, 12 ஆம் தேதி 8,9- வது வார்டுகள், 13 ஆம் தேதி 23-வது வார்டு, 14 ஆம் தேதி 19,26- வது வார்டுகள், 16 ஆம் தேதி 53- வது வார்டு, 17 ஆம் தேதி 54,55- வது வார்டுகள், 18 ஆம் தேதி 21- வது வார்டு, 19 ஆம் தேதி காலை 28- வது வார்டு, மாலை 29- வது வார்டு, 20 ஆம் தேதி காலை 44- வது வார்டு, மாலை 41- வது வார்டு ஆகிய பகுதிகளுக்கு வரும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.