Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் கட்டணம்: குழப்பம் வேண்டாம்

Print PDF

தினமணி 19.08.2010

குடிநீர் கட்டணம்: குழப்பம் வேண்டாம்

ஆலங்குளம், ஆக. 18: ஆலங்குளம் பேரூராட்சியில், புதிய குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை குறித்து வெளியாகும் வதந்திகளால் பொதுமக்கள் குழப்பம் அடைய வேண்டாம் என அமைச்சர் பூங்கோதை கேட்டுக் கொண்டார்.

ஆலங்குளம் பேரூராட்சியில் புதிதாக வீட்டு குடிநீர் இணைப்புக்கு |8100 ஆக இருந்த வைப்புத்தொகையை ரூ|3 ஆயிரமாகக் குறைக்க தீர்மானிக்கப்பட்டு, அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருசிலர், |ரூ8100-க்கு வங்கி வரைவோலை எடுத்தால்தான் புதிய இணைப்பு வழங்கப்படும். அதுவே முன்னுரிமையாகவும் கருதப்படும் என வதந்திகளைப் பரப்பி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பலர் ரூ|8100-க்கு வங்கி வரைவோலை எடுத்தும் பேரூராட்சி மன்றத்திற்கு அனுப்பி வந்தனர். இதனால் பெருவாரியான மக்கள், கட்டணம் குறித்து குழப்பம் அடைந்தனர்.

இது குறித்து, அமைச்சர் பூங்கோதையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. செவ்வாய்க்கிழமை அமைச்சர் இது குறித்து கூறியதாவது:

வாசுதேவநல்லூர் கூட்டுக்குடிநீர்த் திட்டப் பணிகள் விரைவில் நிறைவு பெறும். இதன் மூலம் ஆலங்குளத்திற்கு தேவையான அளவிற்கு வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். இத் திட்டத்தின்கீழ், ஆலங்குளம் பகுதியில் வழங்கப்படும் வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கான வைப்புத்தொகையை |ரூ8100-லிருந்து ரூ|3 ஆயிரமாக குறைத்து அரசு உத்தரவு பிறப்பிக்க தேவையான முயற்சிகள் எடுத்து வருகிறேன். எனவே, ரூ|8100 கட்டினால்தான் குடிநீர் இணைப்பு என யாராவது வதந்திகளைப் பரப்பினால் அதை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம். ரூ|3 ஆயிரம் வைப்புத்தொகையிலேயே குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றார் அவர்.