Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரிகளை செலுத்தாவிடில் குடிநீர் இணைப்பு கட் : நெல்லை மண்டல உதவிக்கமிஷனர் அறிவிப்பு

Print PDF

தினமலர் 24.08.2010

வரிகளை செலுத்தாவிடில் குடிநீர் இணைப்பு கட் : நெல்லை மண்டல உதவிக்கமிஷனர் அறிவிப்பு

திருநெல்வேலி : வரிகளை உடனே செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்கவேண்டும் என நெல்லை மண்டல உதவிக்கமிஷனர் சாந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

நெல்லை மண்டலப்பகுதியில் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, தண்ணீர் கட்டணம் ஆகியவற்றை உரிய காலத்திற்குள் செலுத்த பலமுறை நினைவூட்டியும் நிலுவை தொகையினை செலுத்த தவரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநகராட்சி வரிவசூலை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக பல இடங்களில் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் தாங்கள் செலுத்தவேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களை மாநகராட்சி கம்ப்யூட்டர் பிரிவில் உடனே செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவேண்டும். இல்லையேல் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்க்கலாம் என உதவிக்கமிஷனர் சாந்தி அறிவித்துள்ளார்.