Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரிகள் செலுத்தாவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கை உதவி ஆணையர் அறிவிப்பு

Print PDF

தினகரன் 25.08.2010

வரிகள் செலுத்தாவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கை உதவி ஆணையர் அறிவிப்பு

நெல்லை, ஆக.25: நெல்லை மண்டலப்பகுதிகளில் வரி செலுத்தாதவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து நெல்லை மண்டல உதவி கமிஷனர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

நெல்லை மண்டல பகுதிகளில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தண்ணீர் வரி ஆகியவற்றை பொதுமக்கள் உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களை மாநகராட்சி கணினி பிரிவில் உடன் செலுத்தி ரசீது பெறவேண்டும். வரிகளை செலுத்தாவிட்டால் பொதுமக்கள் குடிநீர் இணைப்பு, ஜப்தி உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது வரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.