Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் நடமாடும் வரி வசூல் வாகனம் நிற்குமிடங்கள்

Print PDF

தினமணி 30.08.2010

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் நடமாடும் வரி வசூல் வாகனம் நிற்குமிடங்கள்

திருச்சி, ஆக. 29: திருச்சி மாநகராட்சியின் நடமாடும் வரி வசூல் வாகனம் திங்கள்கிழமை முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை ஸ்ரீரங்கம் கோட்டப் பகுதிகளில் நிற்குமிடங்களை ஆணையர் த.தி. பால்சாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆக. 30 (திங்கள்கிழமை): காலை 10 - பகல் 12 மணி வரை தெற்கு சித்திரை வீதி கூட்டுறவு வங்கி அருகில். பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கீழச்சித்திர வீதி டாக்டர் ராஜன் மாநகராட்சிப் பள்ளி அருகில். பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை காந்தி ரோடு, எல்ஐசி அருகில்.

ஆக. 31 (செவ்வாய்க்கிழமை): காலை 10 - பகல் 12 மணி வரை வாசுதேவன் தெரு வார்டு அலுவலகம் அருகில், பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெரியார் நகர், ராஜகணபதி கோயில் பின்புறமுள்ள ஆடிட்டோரியம் அருகில், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தெற்கு உள்வீதி குபேரலிங்கம் செல்லும் வழி அருகில்.

செப். 1 (புதன்கிழமை): காலை 10 - பகல் 12 மணி வரை பாரதியார் தெரு மாரியம்மன் கோயில் அருகில், பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை காவேரி நகர் சிதம்பரம் மகால் அருகில், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டர்வொர்த் சாலை இந்து மிஷன் மாநகராட்சி பள்ளி அருகில். செப். 2 (வியாழக்கிழமை): காலை 10 - பிற்பகல் 2 மணி வரை சின்னக்கடை வீதி சந்தி வீரப்பன் கோயில் சந்திப்பு, பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை ஜீவாநகர் எல்லை மாரியம்மன் கோயில் அருகில். செப். 3 (வெள்ளிக்கிழமை): காலை 10 - பிற்பகல் 1 மணி வரை பெரியகடைவீதி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை காசிப்பாளையம் ராஜேசுவரி மருத்துவமனை அருகில், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை சந்துக்கடை தர்கா அருகில்.

செப். 4 (சனிக்கிழமை): காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பாஸ்போர்ட் அலுவலகம் பெரிய கடைவீதி ஜின்னா தெரு கார்னர்.

இந்த நடமாடும் கணினி வரி வசூல் வாகனங்களில் அந்தந்த வார்டு மக்கள் மட்டுமல்லாது, அனைத்து வார்டு மக்களும் தங்களின் வரி மற்றும் வரியில்லா இனங்களைச் செலுத்தலாம்.